சீமானும் முட்டாள்சீடர்களும்
>> 06 August 2011
நாம்தமிழர் இயக்கத்தின் தொண்டர்களுக்கு மூளை என்கிற வஸ்துவே இருக்காதோ என்கிற எண்ணம் அடிக்கடி ஏற்படுவதுண்டு. அதை நிரூபிக்கும் வகையில் சில்லறைத்தனமான காரியங்களில் ஈடுபடுவதில் முதன்மையானவர்கள். மூன்று நாட்களுக்கு முன்னால் புத்தகயாவுக்கு பாதயாத்திரை செல்வதற்காக சென்னை வந்திருந்த சிங்களவர்கள் சிலரை அடித்து உதைத்து கொலைவெறி தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர். புத்த பிட்சுகளிடம் தங்களுடைய வீரத்தை வெளிக்காட்டுவது இது இரண்டாவது முறை! சினிமாவில் காட்டுவதைப்போல புத்தபிட்சுகளுக்கு குங்ஃபூவெல்லாம் தெரியாதுபோல!
சென்ற மாதத்தில் ஒருநாள் தொலைபேசிக்கான கட்டணம் செலுத்த ஏர்டெல் மையம் ஒன்றுக்கு சென்றிருந்தோம். நீண்ட வரிசையில் காத்திருந்தோம். எங்களுக்கு முன்னால் இருந்தவர் நாம்தமிழர் டிஷர்ட் போட்டுக்கொண்டு பரட்டை தலையும் முரட்டு பார்வையுமாக காட்சியளித்தார். க்யூ நகர அந்த நபர் கட்டணம் வசூலிக்கிற இளம்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபடத்தொடங்கினார். அன்றைய தினம் ஏதோ இணைய பிரச்சனையால் டெபிட் கார்டில் கட்டணம் செலுத்த முடியாத நிலை. அதை அந்தப்பெண் விளக்கிக்கொண்டிருந்தார். ஆனால் முரட்டு நபரோ விடாப்பிடியாக அந்த பெண்ணை திட்டத்தொடங்கினார். பேச்சு இன்னும் நீண்டு.. ஏய் நீ ராஜபக்சேவோட கைக்கூலிதானே.. அந்தநாதாரி நாயோட பினாமிதானே.. என்றுதொடங்கி.. தமிழினத்தை இலங்கைல அழிச்சது பத்தாதுனு இங்கேயும் வந்துட்டீங்களா.. அது இது.. என அந்த பெண்ணிடம் பேச.. அப்பாவியான அந்தப்பெண்.. அழத்தொடங்கிவிட்டார். அந்தபெண்ணுக்கு ராஜபக்சேவுக்கும் என்ன தொடர்பு?
ஆனாலும் நம் வீரர் விடவில்லையே.. ஏர்டெல்லுக்கும் ராஜபக்சேவுக்குமான தொடர்புகளை பட்டியிலிட தொடங்கிவிட்டார். இதெல்லாம் சீமானுக்கே தெரியுமாவென்று தெரியவில்லை. கிட்டதட்ட ஒரு ஹிஸ்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபரைப்போலவே நடந்துகொண்டார். அந்த சென்டரின் மேலாளர் நேரடியாக வந்து அவரை சமாதானப்படுத்தி.. அனுப்பி வைப்பதற்குள் இடமே போர்க்கோலமாகிவிட்டது. நல்ல வேளை அந்த நபர் மட்டும் தனியாக வந்ததால் அடிதடி வெட்டுகுத்து கலவரம் ஏதும் நடக்கவில்லை. கூட்டமாக வந்திருந்தால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களையும் போட்டு அடித்திருக்கலாம்.
தமிழன் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ஏதோ ஒரு பொதுக்கூட்டத்தில் சீமான் பொறிபறக்க பேசும்போது உன் அக்கா தங்கைகளை நான் கற்பழிக்கட்டுமா என சவால் விடுகிறார். என்ன பேச்சு இது.. சிங்களர்கள் கற்பழிப்பில் ஈடுபட்டால் நாமும் அதையே செய்யவேண்டும் என சொல்வதெல்லாம் என்ன அரசியல் பார்வை என்பதை புரிந்துகொள்ளமுடிவதில்லை.
புத்தகயாவிற்கு பாதயாத்திரை வந்த சில சிங்களவர்கள் தங்களுடைய டிஷர்ட்டில் சிங்கள வாசகங்கள் எழுதப்படிருந்த காரணத்தினால் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களொன்றும் சிங்கள ராணுவத்தினரோ ராஜபக்சேவின் கைக்கூலிகளோ அல்ல , நம்மை போல சாதாரண மனிதர்கள்தான். தமிழ்நாட்டில் பாதயாத்திரை போகிறவர்கள் டீஷர்ட்டில் ஓம்முருகா என்று எழுதப்பட்டிருக்கும் இல்லையா அதுபோல அவர்களுக்கு தெரிந்த சிங்கள மொழியில் ஏதாவது வாசகங்கள் எழுதப்பட்டிருக்கலாம். சிங்கள மொழி டிஷர்ட் அணிந்துகொண்டு தமிழகத்திற்குள் நுழைந்துவிட்டார்கள் என அவர்களை தாக்குவது எவ்வளவு முட்டாள்த்தனமான செயல்!
அப்பாவிகளை தாக்குவதில் சிங்கள ராணுவத்திற்கு நாம் எந்த விதத்திலும் குறைந்தவர்களில்லை என்பதை காட்டுகிற செயலா இது!
ராஜபக்சேவும் அவருடைய இன்னபிற அடிபொடிகளும் இந்தியா முழுக்க சுற்றும்போதும் திருப்பதியில் தரிசனம் செய்யும்போதும் கருப்பு கொடி மட்டுமே காட்டுகிற இவர்களால் அடித்தால் திருப்பி அடிக்க முடியாத புத்தபிட்சுகளை தாக்குவதும் அப்பாவிகளிடம் எகனை மொகனையாக பேசுவதும்தான் என்ன கருமாந்திர வீரம்!
நாம்தமிழர் இயக்கத்தினரின் இந்த கண்மூடித்தனமான கொலைவெறிப்பாசம்.. தமிழகத்திற்கு வருகிற சிங்களர்களை அடித்து நொறுக்க வேண்டும் என்கிற வெறி , எவ்வளவு பெரிய ஆபத்தினை விளைவிக்கும் என்பதை ஏனோ இயக்கத்தலைமையோ தொண்டர்களோ உணர்வதில்லை. மீனவனை அடித்தால் உன் மாணவனை அடிப்போம் என சவால் விடுவதால் பாதிக்கபடப்போவது யார்? இங்கே நீ சிங்களவனை அடித்தால்.. தமிழ்நாட்டில் வாழ்கிற தமிழனுக்கு பிரச்சனையொன்று வரப்போவதில்லை. இலங்கையில் வாழ்கிற அப்பாவி தமிழர்களுக்குத்தான் அடிவிழும். ஏற்கனவே பேரினவாத வெறிபிடித்த சிங்கள இராணுவத்தினர் இதுமாதிரியான செய்திகளை அறிந்துகொள்ளும்போதெல்லாம் நம் மீனவனிடமும் இலங்கையில் வாழும் அப்பாவிதமிழர்களிடமும் நம் சகோதரிகளிடமும்தான் கோபத்தை வெளிப்படுத்துவார்கள் என்பது தெரிந்திருந்தும், இவர்களுடைய இச்செய்கைகளுக்கு பின்னால் இருக்கிற உளவியலை புரிந்துகொள்ள முடியவில்லை.
தற்போதைய சூழலில் நம்முடைய கவனமும் ஆற்றலும் இலங்கையில் உண்ண உணவின்றி உறைவிடமின்றி தவிக்கிற எண்ணற்ற தமிழர்களில் வாழ்வாதாரத்தினை உறுதிசெய்வதில் அல்லவா இருக்க வேண்டும். வீரப்பேச்சும் வெட்டிநாயமும் கொலைவெறி தாக்குதல்களும் அவர்களுக்கு எந்த நன்மையையும் விளைவித்துவிடாது என்பதை உணரவேண்டாமா? அப்பாவி தமிழர்களுக்கு நாம் உதவி செய்யவேண்டாம் குறைந்தபட்சம் இதுமாதிரியான பைத்தியக்காரத்தனமான செயல்களால் உபத்திரவம் செய்யாமல் இருப்பதே நல்லது.


58 கருத்துக்கள்:
sir you are right. we should not attack civilian. But why are you completely apposing seeman. seeman just trying to threaten them. please don't suppress him. In this society we need people like seeman also who is raising voice for community.
அப்புறம் என்ன அது அப்பாவி சிங்களர்கள் ? சிங்கள உளவுத்துறை மற்றும் இந்தியா உளவுத்துறையின் வேலை திட்டத்திற்கு இணங்க தமிழ் நாட்டில் சிங்கள எழுத்துகள் கொண்ட சட்டையை போட்டுக்கொண்டு ,சிங்கள அரச கொடியை ஏந்திக்கொண்டு 50 பேர் ஊர்வலம் போல் நடந்து போனது அப்பாவி மக்களின் செயலா .தமிழ் உணர்வாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு போராட்டம் நடத்த அரும்பாடுபடு காவல் துறையிடம் ஒப்புதல் வாங்கவேண்டிய நிலை இருக்கும் பொது இந்த வேற்று நாட்டவர்கள் எப்படி தமிழ் நாட்டில் ஊர்வலம் போக முடிந்தக்டு. இவர்களுக்கு பின் இருப்பது இந்தியா தானே
Absolutely right
very very true... i do not see any clear political view or economical view in their eelam issue too.. they should be controlled..
இந்த விசயம் மோசமாகத்தான் உள்ளது அதனால் எல்லோரும் முட்டாள்கள் என்பது போல் பேசுவது சரியல்ல.
பேசியவரின் புரிதல் கடுமையாக இருக்கிறது. அதனால் அந்த நபர் கடுமையாக நடந்து கொண்டுள்ளார். வேறு எதாவது கடுப்பையும் சேர்த்து காட்டி இருப்பார். இதைவைத்து ஏர்டெல் அல்லது இலங்கை கொலை காரனுக்கெல்லாம் நீங்கள் வக்காலத்து வாங்கவேண்டாம்
நிச்சயம் பைத்தியகரத்தனமான செயல்தான் உதவி இல்லையென்றாலும்
உபத்திரம் செய்யாமல் இருக்க வேண்டும்
அதை செய்தது தமிழர்களே இல்லன்னு நான் நினைக்கிறேன்....
நம்ப ஆட்களுக்கு பக்கத்து ஸ்டேட்ல இருக்கற தெலுங்கு, மலையாளம், கர்னாடகா எழுத்துல எது தெலுங்கு, எது மலையாளம்னே அடையாளம் கண்டுபுடிக்க தெரியாது...இதுல இலங்கை போய் சிங்களம் எல்லாம் கத்து இருப்பாங்களா?
ஏதோ நாடகத்தனமா இருக்கு...அதுவும் அவங்க டிரெஸ்ஸே இல்லாத மாதிரி சிங்கள எழுத்து போட்ட டி சர்ட் போட்டு வர்றதும், இவங்களும் அது கரெக்டா சிங்கள எழுத்துன்னு கண்டுபுடிச்சு அவங்கள போய் தாக்கறதும்.....என்னமோ சூழ்ச்சியா தான் இருக்கணூம்.
பிடித்தவர்களை வைத்து விசாரித்தால் தான் தெரியும் உண்மை.
எப்பொழுது தன்னுடைய படத்தில் ஒரு சிங்களப் பெண்ணை நாயகியாகப் போட்டு படமெடுத்தானோ, அப்பொழுதே அவன் ஒரு மிருகமல்ல, அப்பாவி இளைஞர்களே மிருகங்களாக மாற்றிக் கொண்டிருக்கும் கேவலமான ஜந்துவாகத்தான் தெரிகிறான்!
தமிழ்நாட்டில் வாழ்கிற தமிழனுக்கு பிரச்சனையொன்று வரப்போவதில்லை. இலங்கையில் வாழ்கிற அப்பாவி தமிழர்களுக்குத்தான் அடிவிழும்.
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
மிகச்சரி!
பொது மக்களை, புத்த பிட்சுக்களை தாக்குவது கண்டித்தக்க செயல் தான். அதற்காக ஒரேயடியாக முட்டாள்கள் என்று பொதுவெளியில் ஒரு அரசியல் இயக்கத்தை தாக்கும் சுதந்திரத்தை எவ்வாறு எடுத்துக் கொள்வது ? எனக்கு தெரிந்து இதுவரை சீமான் இந்த மாதிரியான முட்டாள்தனமான தாக்குதல்களை அனுமதித்ததில்லை. பிரச்சனை ஞாநி சொன்னதுப் போல, இலங்கை அரசு அமைப்புக்கும், நம் உணர்வுகளுக்கும். இதில் ராஜபக்சே இலங்கை அரசு அமைப்பில் இருப்பதனால் எதிர்க்கிறோம். எந்த ஒரு இயக்கத்தையும் அவதூறு செய்யவோ, அவமதிக்கவோ எந்த இயக்கமும் சாராத குட்டிப் பூர்ஷ்வா வாழ்க்கை வாழும் நமக்கு தகுதியிருக்கிறதா ? நம் எண்ணங்களில் இது தவறென சொல்லலாம். ஆனால் முட்டாள் என்பது தவறான சொல். அது மடத்தனம். அறிவிலி செயல். அவ்வளவே.
வணக்கம் ஐயா ! நான் ஈழத்தமிழன். லோஷன் அண்ணாவின் தீவிர ரசிகன். அவரது தளத்தில் உங்களைப்பற்றிய சொடுக்கி இணைப்பு இருந்ததால் பார்த்து விட்டு வந்தேன்..
சீமான் அண்ணா எங்களைப் பொறுத்தவரை ஒரு மாமனிதன். பாதிக்கப் பட்ட எமக்காகக் குரல் கொடுக்கும் முதுகெலும்பு உள்ள உண்மைத் தமிழன். அப்பாவி சிங்கள மக்களை தாக்குவதை நாம் கண்டிக்கின்றோம். ஆனால் நீங்கள் ஏன் சீமான் அண்ணாவை சீண்டுகின்றீர்கள்?
பாலஸ்தீனத்தில் ஒரு முஸ்லிம் இறந்தால் உலகமெல்லாம் வேறு வேறு மொழிகள் பேசும் முஸ்லிம்கள் அழுகின்றார்கள். ஆனால் இங்கே பக்கத்தில் ஈழத்தில் ஆயிரம் ஆயிரம் தமிழர் கொத்துக் கொத்தாய்க் கொல்லப் பட தமிழ் நாட்டில் பலர் வாயே திறக்கவில்லையே? அப்படி திறந்த துணிச்சல் மிக்க ஆண்மகன் சீமானைப் பேசாமல் விட்டு விடுங்கள். நீங்கள் தமிழராய் இருந்து கொண்டு எங்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம். சீமானையும், நாம் தமிழரையும் சீண்டாமல் இருந்தால் அதுவே போதும். இறந்த எங்கள் உறவுகளின் ஆத்மாக்கள் சாந்தி அடையும். நன்றி.
வணக்கம் ஐயா ! நான் ஈழத்தமிழன். லோஷன் அண்ணாவின் தீவிர ரசிகன். அவரது தளத்தில் உங்களைப்பற்றிய சொடுக்கி இணைப்பு இருந்ததால் பார்த்து விட்டு வந்தேன்..
சீமான் அண்ணா எங்களைப் பொறுத்தவரை ஒரு மாமனிதன். பாதிக்கப் பட்ட எமக்காகக் குரல் கொடுக்கும் முதுகெலும்பு உள்ள உண்மைத் தமிழன். அப்பாவி சிங்கள மக்களை தாக்குவதை நாம் கண்டிக்கின்றோம். ஆனால் நீங்கள் ஏன் சீமான் அண்ணாவை சீண்டுகின்றீர்கள்?
பாலஸ்தீனத்தில் ஒரு முஸ்லிம் இறந்தால் உலகமெல்லாம் வேறு வேறு மொழிகள் பேசும் முஸ்லிம்கள் அழுகின்றார்கள். ஆனால் இங்கே பக்கத்தில் ஈழத்தில் ஆயிரம் ஆயிரம் தமிழர் கொத்துக் கொத்தாய்க் கொல்லப் பட தமிழ் நாட்டில் பலர் வாயே திறக்கவில்லையே? அப்படி திறந்த துணிச்சல் மிக்க ஆண்மகன் சீமானைப் பேசாமல் விட்டு விடுங்கள். நீங்கள் தமிழராய் இருந்து கொண்டு எங்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம். சீமானையும், நாம் தமிழரையும் சீண்டாமல் இருந்தால் அதுவே போதும். இறந்த எங்கள் உறவுகளின் ஆத்மாக்கள் சாந்தி அடையும். நன்றி.
மிகவும் தேவையான, அருமையான பதிவு அதிஷா...நன்றிகள் பல...
வன்முறைக்கு என்றுமே வன்முறை தீர்வாகாது...
அதுவும் ஏமாளிகளை ஏறுவது எந்த விதத்திலும் நியாயமில்லை....
கண்டிக்கத் தக்க செயல்!
எந்த பேரினவாதத்தை எதிர்க்கின்றமோ, அதையே நாமும் செய்யக்கூடாது.
அறிவின் சிகரமே, உங்களுக்கு எப்படி தெரியும் அவர்கள் நாம் தமிழர்கள் இயக்கத்தை சார்ந்தவர்கள் என்று?
புலி எதிர்ப்பு என்ற பெயரில் எதையாவது எழுதுவது, இங்க சிங்கள நாய்களுக்கு என்ன வேலை?
இந்த ஊர்வலத்துக்கு சிங்கள நாய்கள் முன் அனுமதி பெற்றார்களா?
அமைதியே உருவான இந்த சிங்கள புத்த பிட்சிகளில் ஒருவன் தானே தமிழர்களுக்கு சம உரிமைக்காக பேசிய இலங்கை அதிபரைக் கொன்றவன்.
அறிவின் சிகரமே, உங்களுக்கு எப்படி தெரியும் அவர்கள் நாம் தமிழர்கள் இயக்கத்தை சார்ந்தவர்கள் என்று?
புலி எதிர்ப்பு என்ற பெயரில் எதையாவது எழுதுவது, இங்க சிங்கள நாய்களுக்கு என்ன வேலை?
இந்த ஊர்வலத்துக்கு சிங்கள நாய்கள் முன் அனுமதி பெற்றார்களா?
அமைதியே உருவான இந்த சிங்கள புத்த பிட்சிகளில் ஒருவன் தானே தமிழர்களுக்கு சம உரிமைக்காக பேசிய இலங்கை அதிபரைக் கொன்றவன்.
நிறைய, நியாயமான கருத்துக்களை சொல்லியுள்ளீர்கள் ! சிங்களனைக் கண்டால் நமக்கு ரத்தம் கொதிக்கத்தான் செய்யும், அதற்காக அவர்களை நம் வீட்டிற்கு வரவழைத்து அடிப்பதில் என்ன வீரமிருக்கிறது ? நீங்கள் குறிப்பிட்டது போல சீமான் சில சமயம் பேசுவதில் 'பழம்' !!! ஒருமுறை விலைவாசி உயர்வை கண்டித்து பேசியவர், திடீரென, 'ஏன்யா, ஒரு ரூபாய்க்கு அரிசி போடுறதில என்னய்யா பெருமை உனக்கு ? எங்களையெல்லாம் பிச்சைகாரனாக்கப் பார்க்கிறாயா நீ ? மக்கள், நூறுரூபா, இருநூறுரூபா....கொடுத்து வாங்குற அளவு பொருளாதாரத்த வளர்க்க துப்பில்லை !' என்று சொல்லியபடி தலையில் அடித்துக் கொண்டார் ! நானும் அவ்வாறே அடித்துக்கொண்டேன் ! ஏன்னா, பூண்டு200 ரூபா, வெங்காயம் 90 ரூபா, பருப்பு 100 ரூபா ன்னு திட்டினாலும், சுத்தியிருந்த கூட்டம் கை தட்டிச்சு, 200 ரூபா கொடுத்து அரிசி வாங்குவதுதான் வளர்ச்சின்னு சொன்னாலும் அதே கூட்டம் கை தட்டிச்சு !
நிறைய, நியாயமான கருத்துக்களை சொல்லியுள்ளீர்கள் ! சிங்களனைக் கண்டால் நமக்கு ரத்தம் கொதிக்கத்தான் செய்யும், அதற்காக அவர்களை நம் வீட்டிற்கு வரவழைத்து அடிப்பதில் என்ன வீரமிருக்கிறது ? நீங்கள் குறிப்பிட்டது போல சீமான் சில சமயம் பேசுவதில் 'பழம்' !!! ஒருமுறை விலைவாசி உயர்வை கண்டித்து பேசியவர், திடீரென, 'ஏன்யா, ஒரு ரூபாய்க்கு அரிசி போடுறதில என்னய்யா பெருமை உனக்கு ? எங்களையெல்லாம் பிச்சைகாரனாக்கப் பார்க்கிறாயா நீ ? மக்கள், நூறுரூபா, இருநூறுரூபா....கொடுத்து வாங்குற அளவு பொருளாதாரத்த வளர்க்க துப்பில்லை !' என்று சொல்லியபடி தலையில் அடித்துக் கொண்டார் ! நானும் அவ்வாறே அடித்துக்கொண்டேன் ! ஏன்னா, பூண்டு 300 ரூபா, வெங்காயம் 90 ரூபா, பருப்பு 100 ரூபா ன்னு திட்டினாலும், சுத்தியிருந்த கூட்டம் கை தட்டிச்சு, 200 ரூபா கொடுத்து அரிசி வாங்குவதுதான் வளர்ச்சின்னு சொன்னாலும் அதே கூட்டம் கை தட்டிச்சு !
/*சென்ற மாதத்தில் ஒருநாள் தொலைபேசிக்கான கட்டணம் செலுத்த ஏர்டெல் மையம் ஒன்றுக்கு சென்றிருந்தோம். நீண்ட வரிசையில் காத்திருந்தோம். எங்களுக்கு முன்னால் இருந்தவர் நாம்தமிழர் டிஷர்ட் போட்டுக்கொண்டு பரட்டை தலையும் முரட்டு பார்வையுமாக காட்சியளித்தார். க்யூ நகர அந்த நபர் கட்டணம் வசூலிக்கிற இளம்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபடத்தொடங்கினார். அன்றைய தினம் ஏதோ இணைய பிரச்சனையால் டெபிட் கார்டில் கட்டணம் செலுத்த முடியாத நிலை. அதை அந்தப்பெண் விளக்கிக்கொண்டிருந்தார். ஆனால் முரட்டு நபரோ விடாப்பிடியாக அந்த பெண்ணை திட்டத்தொடங்கினார். பேச்சு இன்னும் நீண்டு.. ஏய் நீ ராஜபக்சேவோட கைக்கூலிதானே.. அந்தநாதாரி நாயோட பினாமிதானே.. என்றுதொடங்கி.. தமிழினத்தை இலங்கைல அழிச்சது பத்தாதுனு இங்கேயும் வந்துட்டீங்களா.. அது இது.. என அந்த பெண்ணிடம் பேச.. அப்பாவியான அந்தப்பெண்.. அழத்தொடங்கிவிட்டார். அந்தபெண்ணுக்கு ராஜபக்சேவுக்கும் என்ன தொடர்பு?*/
இந்த பதிவுல நீங்க காட்டுன்ன வீரத்த அங்க நீங்க காட்டுல, ஊருக்கு தான் உபதேசம்.
சீமானைப் பிடிக்காது என்று வெளிப்படையாகக் கூறலாமே?
எதுக்கு சூத்தைத் தூக்கிக் காட்டவேண்டும்?
நீயும் அந்த மடிப்பாக்கமும் எப்படிவேண்டுமானாலும் இருங்கள், தமிழர்களும் அப்படி இருக்க வேண்டுமா?
அதிஷா சொல்லும் விடயங்களில் நாம் 3 விடயங்களை கவனிக்க வேண்டும். தமிழ் நாட்டில் மின்னல் வெட்டினால் அந்த இடி தமிழ் ஈழத்தில் தான் விழும். அப்பாவி மக்களும் தமிழ் மீனவர்களுமே பாதிக்கப்படுவர். அதைத் தடுக்கும் வல்லமை உடையவனே இப்படியான செயல்களில் ஈடுபடவேண்டும்.
இரண்டாவது ராஜபக்ஷே இந்தியாவிற்குள் வலம் வந்த போது எங்கு சென்றிருந்தீர்கள்?
என் தலைவன் பிரபாகரனின் எந்தவொரு பற்றாளனும் உன் வீட்டுப் பெண்ணை கற்பழிக்க வருகிறேன் என்று பேசவே மாட்டான். தலை மறைந்திருக்கும் இந்த வேளையில் வாலில் உள்ள மயிர்கள் கூட துள்ளுகின்றது. வாய்ப்புக்கு நன்றி, அதிஷா.
வர வர நெகடிவ் அர்டிகில் மட்டுமே அதிகம் எழுதுவதாக தெரிகிறது ( அவையெல்லாம் உண்மையே என்ற போதிலும்)
என்னாச்சு வினோ!!!?
தாங்கள் கட்டுரை ஆரம்பித்த முறையே புரிகின்றது .. தங்களின் சீமான் எதிப்பு சிந்தனை
நான் ஸ்ரீ லங்காவிலிருந்து தான் எழுதுகிறேன்... இங்கு நல்ல பிக்கு ஒருவரை சந்திக்கவே இல்லை
தாங்களே சொல்லுகின்றீக்கள் ராஜபக்ச செய்ததற்கு பிறரை குற்றம் சாட்ட கூடாது என்று பின்
நீங்கள் எப்படி சீமானை அந்த அன்பர் செய்தவற்றுக்காக குற்றம் சாட்ட முடியும் .....
- கல்கி-
ஏர்டெல் சம்பவம் உள்ளிட்ட ஒரு சில நிகழ்வுகளை வைத்துக்கொண்டு நாம் தமிழர் இயக்கத்தினருக்கு மூளை இல்லை, சில்லறைத்தனத்தில் முன் நிற்பவர்கள் என்று சொல்வது தவறான வாதம் வினோத்(அதிஷா). அந்த நபர் செய்த செயல் கண்டனத்திற்கு உரியதே. அதுபோல தமிழன் டி.வி. யில் சீமான் பேசியதாக தாங்கள் சொன்ன விஷயமும் கண்டிக்கத்தக்கதே. அவர் அவ்வாறு பேசி இருக்க வேண்டாம். சீமான் உணர்ச்சிப்பெருக்கான வார்த்தைகளை சற்று கட்டுப்படுத்தியே தீர வேண்டும். ஏனெனில் சிங்கள பெண்களை கற்பழித்தல் போன்ற வார்த்தைகளால் மேலும் சிங்கள ராணுவத்தின் கொடூரத்திற்கு ஆளாகப்போகிறவர்கள் நம் சகோதரிகள்தான்.
அதே சமயம் யதார்த்தத்தை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும் நண்பரே. இலங்கைத்தமிழர் போராட்டம் துவங்கிய காலத்தில் அகிம்சை மூலம் மட்டுமே எதிர்ப்பை தெரிவித்து அவமானத்தை மட்டுமே சுமந்த முன்னோரின் நிலை கண்டு கொதித்ததன் விளைவே பிரபாகரன் எனும் சிறுவன் கையில் ஆயுதம் குடியேற காரணம் ஆனது. அதற்கு யார் பொறுப்பு?
இன்று வரை ஆயிரம் பேச்சு வார்த்தை நடந்தும் அடித்துதான் கொல்கிறான் அண்டை நாட்டு ராட்சசன். சீமானும் காந்திய வழியில் சென்றால் நமக்கு கிட்டப்போவது வாய்ல வாழைப்பழம்தான். வீரமும் விவேகமும் சார்ந்த நடவடிக்கையை நாம் தமிழர் இயக்கத்தினர் பின்பற்ற வேண்டும்.
நீங்களும் இந்த இயக்கத்தை ஒட்டுமொத்தமாக சிறுமைப்படுத்தி பேச வேண்டாம். செயல்ரீதியான விமர்சனம் மட்டும் வையுங்கள். நன்றி!!
வினோத் நீங்க எழுதிய கருத்துக்கள் உடன்பாடு தான் என்றாலும் அதென்னவோ தெரியல தமிழ்நாட்டில் பத்திரிக்கை உலகத்தில் இருப்பவர்களுக்கு மஞ்சள் காமாலை போலவே இருக்கின்றதோ என்று பல முறை யோசித்துக் கொள்வதுண்டு. அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற பிலாக்கணம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பேசிக் கொண்டு இருக்கப் போகின்றோம். அப்படி என்றால் பாராளுமன்றத்தில் ஷேம் ஷேம் என்று கத்தியதும் தவறா? காந்தி தேசம் என்பதால் கமுக்கென்று இருந்து விடலாம் என்கிறீர்களா? இதே போல ராஜபக்ஷே போர் முடிந்தும் சொன்னபடி செய்யாத காரியங்களையும், கவ்வோதி தனத்தையும் பட்டியலிட்டு ஒரு பதிவு எழுதுங்களேன். சீமான் அவர்களின் விவேகமற்ற செயல்பாடுகள் விமர்சனத்திற்கு உரியது என்றாலும் சீமான் செயல்பாடுகள் இல்லாவிட்டால் சென்னையில் பல பத்திரிக்கையாளர்களை அம்சா விலை கொடுத்து வாங்கி குளிப்பாட்டியதைப் போலவே உங்களுக்கு ஒரு விலை வைத்து விடப் போகிறார்கள். கவனமாக இருங்க.
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
கமெண்ட்டுகளுக்கு நடுவுல இருந்த குட்டி பூர்ஷ்வா பதம் ஜூப்பரு! பெ.மு-ன் பீக்கதைகள்ல வரும்ல! ;-)
இந்த தாக்குதலால் ஈழ்த்தமிழனுக்கு ஆபத்து என்கிறீர்களா?ஏற்கெனவே அங்கு என்ன வாழ்கிறது?இப்ப இருக்கிற நிலமையில் இங்கு ஈழப்பிரச்சனையில் முக்கியமான உந்து சக்திகளில் சீமானும் ஒருவர்,ஏதெதோ கூறி அவரையும் ஆப்படிக்க முயற்சிக்காதிர்கள்.ஒன்றிரண்டு உதாரணங்களை வைத்து ஒட்டுமொத்தமாக நாம் தமிழர் இயக்கத்தை குறைகூற வேண்டாமே.ஜடங்களாக இருப்பதற்கு பதில்,அவர்கள் செய்வது தவறோ,சரியோ, அவர்கள் அக்கரையுடன் செயல்படுவது போதாதா? நன்றி.
இலங்கை அரசுக்கு எதிராக தமிழ் நாட்டுத் தமிழர்களால் ஒரு துரும்பைக் கூட கிள்ளியெறிய முடியவில்லை.புத்த கயாவுக்கு யாத்திரை வருவோர் புரியாத மொழியில் வாசகங்கள் எழுதப்பட்ட ஆடைகளை ஏன் அணிந்து வரவேண்டும்?யாத்திரை வந்தார்களா?உல்லாசப் பயணம் வந்தார்களா?ஒரு விடயத்தை,ஒருவரை,ஒரு அமைப்பை குற்றம் சாட்டும்போது அடி,நுனி தெரிந்திருக்க வேண்டும்.அதைவிடுத்து எழுந்தமானத்துக்குப் பேசுவது சரியாகப் படவில்லை,அதிஷா!
///இங்க சிங்கள நாய்களுக்கு என்ன வேலை?///
இதையே சிங்களவன் சொன்னால் எப்படி இருக்கும்?? நீங்கள் இதை சொன்னால் நிச்சயம் சிங்களவர் இலங்கையில் நடத்திக் காட்டுவர்.
நீங்கள் நினைப்பது போன்று இலங்கைக்கு தமிழருடன் கோவமில்லை. இன்று கொழும்பு, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி போன்ற முக்கிய நகரங்களிலெல்லாம் வியாபாரத்தில் கொடி கட்டி பறப்பது தமிழர்தான். சிங்களவர்கள் அவர்களையோ வடக்கு, கிழக்கு தவிர மற்ற தமிழர்களிடமோ சண்டையிட்டதோ, அநியாயம் செய்ததோ கிடையாது. அவர்கள் கோவம் எல்லாம் வட, கிழக்கு தமிழர்களிடம்தான்.. காரணம் புலிகள்.
இதை ஏற்றுக் கொள்வது கடுனமாக இருக்கலாம். என் மீது வசை பாடப் படலாம். ஆனாலும் உண்மை இதுதான்..
Bhikku (Srilankan bhikku) is an innocent man? You are not reading newspaper.They are the basic cause for our all ethnic problem. They led every riot against Tamils time to time in srilankan history.
அதிஷா!இந்திய சுதந்திரப்போரில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவு மாதிரி ஈழப்பிரச்சினையின் அடிவேர்களைப் பற்றித் தெரியாமல் பதிவில் கருத்தை சொல்கிறீர்கள்.இரு இனங்களின் ஒற்றுமையில்லாமைக்கு துவக்கதிலிருந்து சிங்களப்பேரினவாத புத்தபிட்சுக்களும் ஒரு காரணம் என்பது மட்டுமல்ல அதுவே முக்கிய காரணம் என்பதை உணர்ந்து கருத்து வெளியிடுங்கள்.
வன்முறைகள் தவறானவையே என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்துக்கள் இல்லை.ஆனால் தற்போதைய எதிர்ப்பு என்ற நிலையில்லாமல் இருந்தால் ராஜபக்சே குழுக்கள் இன்னும் அதிகம் ஆட்டம் போட்டிருப்பார்கள்.உதாரணத்துக்கு போர் காலத்துக்கும்,அதற்கும் முந்தைய காலத்திலும் பெயர்ப்பலகையளவிலாவது இருந்த இரு மொழிக்கொள்கைகூட கைவிடப்பட்டு புதுக்குடியிருப்பு போன்ற தமிழர் பகுதிகளில் கூட சிங்களப்பெயர்ப் பலகையே இடம் பிடிக்கிறது.சென்னை ரயில் நிலையத்துக்கும் கூட இந்தி மட்டுமே பெயர்ப்பலகையிருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.
இலங்கைப் பிரச்சினையில் புத்த பிட்சுக்களின் பங்கு மதம் என்ற அளவில் மட்டுமல்ல,அரசியலிலும் ஊறிக்கிடக்கிறது.
எழுத்து வேகத்தில் முந்தைய பின்னூட்டத்துக்கு தொடுப்புக்கொடுக்க மறந்து விட்டேன்.
http://sivasinnapodi1955.blogspot.com/2011/08/blog-post_5412.html
உங்களுக்கு எனது salute.
முட்டாள்தனமான கருத்து.......வேடிக்கை பார்பதை தவிர நீங்கள் என்ன செய்து இருக்கிறேர்கள்
ennudaiya comment podathatharku nandri
boss,
ivlo solrangale ivanunga, evanavathu oru pulampeyarantha agathiyai manam seigiren allathu oru kudumbathukku than sothil pangu tharuvennu sollatum parporm.
evanum panna mattan, enna pesaruthu easy seirathu kasakkum,
secondly ellam oru stund than.
capitalising the situation and becoming a hero.
athukkund elathil nadappathellam nyayamnu sollala, same time oru natil irunthukittu antha natirku ethiraga entha seyalai seithalum, antha antha nattin kannottil athu tavaragave theriyum.
let us assume the same situation as in india and maoist as tamil tigers,
our view will completely change .
ennendral nammakku oru nyayam, matravarku oru nyayam
i am appreciating ur view and matches my wavelength
good work keep it up.
"அப்பாவிகளை தாக்குவதில் சிங்கள ராணுவத்திற்கு நாம் எந்த விதத்திலும் குறைந்தவர்களில்லை என்பதை காட்டுகிற செயலா இது!
"
- நெஞ்சில் கைவைத்துச் சொல்லும்; நாமென்ன சிங்களப் பயணிகளை இலங்கை இராணுவத்தைப் போல சித்ரவதை செய்தோ அல்லது கொத்து கொத்தாக கொன்று புதைத்தோம்?! எப்படி உங்களுக்கு இப்படியெல்லாம் ஒப்பிடத் தோன்றுகின்றது?!?!
”அடித்தால் திருப்பி அடிக்க முடியாத புத்தபிட்சுகளை தாக்குவது” - இலங்கையில் உள்ளப் புத்த பிட்சுக்கள் பலர் அப்பாவித் தமிழர்களை எப்படியெல்லாம் சித்ரவதை செய்தனர் என்பதனை சற்று இலங்கை வரலாற்றினை உற்று நோக்கிவிட்டு புத்தப் பிட்சுக்கள் என்கின்ற பதத்திற்கு சான்றிதழ் தாருங்கள்!
”தமிழன் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ஏதோ ஒரு பொதுக்கூட்டத்தில் சீமான் பொறிபறக்க பேசும்போது உன் அக்கா தங்கைகளை நான் கற்பழிக்கட்டுமா என சவால் விடுகிறார். என்ன பேச்சு இது.. ”
விடுதலைப்புலிகளோ அல்லது தமிழீழ ஆர்வலர்களோ எங்கேயாவது ஒரு சிங்களப் பெண்ணை வன்மத்துடன் கற்பழித்ததாகக் கூறுங்கள் பார்ப்போம்! செய்பவர்களை விட்டுவிட்டு நம்மால் அப்புல்லர்களை தடுக்கவோ அல்லது தண்டிக்கவோ இயலவில்லையே என அனத்துபவர்களைச் சாட முனைவது, பெரிதாக்கிக்காட்டுவது அழகல்ல...
பரபரப்பிற்க்காகவோ அல்லது உணர்ச்சி வயப்பட்டோ இனி பதிவெழுவதை தவிர்க்கலாம் என்பதே எம் தாழ்மையான எண்ணம்!
Guys who post this '"சீமானும் முட்டாள்சீடர்களும்"' and guys who oppose seeman ... i have to ask one thing where you are all be long back when 10,000's of people dead in sri lanka /....... that time you are not writing like this ...!!!!! first think and behave
“நாம் தமிழரும்” நமது தமிழரும் !!
>> Sunday, 7 August 2011
எஸ். எம்.எம்.பஷீர்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!
பாரதிதாசன்
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு புனித யாத்திரை சென்ற சிங்கள யாத்திரிகர்கள் சிலர் மீது , தமிழ் உணர்வு வெறிகொண்ட புலிகளின் இயக்கத்துக்கு , அதன் அஸ்தமனத்தின் பின்னரும் , அதி தீவிரமாக ஆதரவு வழங்கும் சீமான் தலைமையிலான "நாம் தமிழர்" இயக்கத்தின் உறுப்பினர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். அவ்வாறு தாக்கிய இன வெறியர்கள் -காடையர்கள்- மூவரை இந்திய போலீசார் கைது செய்துள்ளனர் என்ற செய்தி இப்போது வெளிவந்துள்ளது.
நாம் தமிழர் இயக்கத்தை வழிநடத்தும் சீமான் போன்ற இன வெறியர்கள் இலங்கை சிங்கள , இந்திய சீக்கிய மக்களின் மீதான துவேஷ கருத்துப் பரப்புரைகள் செய்வதும் , தமிழர் என்ற பெயரில் , அதிலும் தாங்கள்தான் உண்மையான கலப்பற்ற தமிழர்கள் என்று பிரகடனப்படுத்தி , ஒரு அரசியல் கட்சியாக செயற்பட முனையும் பயணத்தில் கூட , புலிகளின் வழியில் தமது மானசீக தலைவனின் பயங்கரவாத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். சென்னையிலுள்ள மகாபோதி விகாரையில் தங்கியிருந்த யாத்ரீகர்கள் வீதியில் நடமாடும் பொது அடையாளம் காணப்பட்டு மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். அதனால் தாங்கள் தான் தமிழர்கள் என்று சொல்பவர்கள் தங்களின் (அ)நாகரீகத்தை வெளிப்படுத்தி தங்களையும் தமிழரையும் புலி வழிநின்று அடையாளப்படுத்தியுள்ளார்கள்.
இவ்வாறே இந் நாம் தமிழரின் வழிகாட்டிகளான புலிகளும் தங்களின் பாணியில் வெட்டியும் சுட்டும் கொல்லும் கைங்கரியத்தை சிங்களவர்கள் மீது அனுராதபுரத்திலும், அரந்தளவாயிலும், தலதா மாளிகையிலும் , முஸ்லிம்கள் மீது அவர்களின் வணக்கத் தளங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டோர் மீது பல இடங்களிலும் , குறிப்பாக ஹஜ் யாத்திரை மேற்கொண்டு வீடு திரும்பும் வழியில் ஒன்தாச்சிமடத்திலும் மேற்கொண்டனர். அந்த வரலாற்று பின்னணியில் நோக்கும் போது, இது ஆச்சரியமான ஒரு நிகழ்வல்ல. புலியும் நாமெல்லாம் "தமிழர்" தானே என்று கூறியே முஸ்லிம்களையும் வெட்டியும் சுட்டும் கொன்றனர் என்பது ஒரு புறமிருக்க , சிங்கள யாத்திரீகர்கள் தங்களின் நாட்டில் அதுவும் தமிழர் மாநிலத்தில் "நாம் தமிழர்களால்" தாக்கப்பட்டது தமிழ் கூறும் "நல்" உலகெங்கும் ஒரு அநாகரீக செயலாக்க பார்க்கப்படப்போகிறது.
செம்மொழி மாநாடு நடப்பதை எதிர்த்த நாம் தமிழர் அதற்கெதிரான செயற்பாடுகளை முடிக்கிவிட்டிருந்தனர். அதில் கலந்து கொல்லும் நபர்களின் பெயர் விபரங்கள் மின்னஞ்சல் முகவரிகள் அவர்களின் கைகளுக்கு கிடைத்திருந்தன . அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்த தேசத்திலிருந்து அந்நிகழ்வில் பார்வையாளராக கலந்து கொண்ட அல்லது கொள்ளவிருந்த நபர்களின் பெயர்களை மின்னஞ்சல் முகவரிகளை குறிப்பிட்டு நாம் தமிழர் இயக்கத்தின் பெயரால் தமது கட்சி /இயக்க கொள்கைகளை பரப்ப அளித்ததோடு எமக்கு அவர்களின் கட்சி கொள்கைகளை விளக்குமாறும் , தங்களோடு இணைந்து செயற்பட தூண்டுமாறும் , அவர்களின் கட்சிக்காரர்களுக்கு வேண்டுகோளும் விடுத்திருந்தனர் . செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள நாடி அனுமதி பெற்ற பின்னர் அங்கு செல்வது ஆபத்தானது என்ற உள்ளுணர்வு ஏற்பட நான் அங்கு செல்வதை தவிர்த்துக் கொண்டேன். நல்லவேளை இந்த காட்டுமிராண்டி "நாம் தமிழரிடம்" நான் அகப்பட்டிருந்தால் !!. சரி அது போகட்டும் எனது பெயரை எனது மின்னஞ்சல் முகவரிகளை பகிரங்கமாக எனது அனுமதின்றி வெளியிட்டமை தொடர்பாக எனது ஆட்சேபனையை 27/07/2011 அன்று மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருந்தேன். அந்த மின்னஞ்சலில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்.
--
நாம் தமிழர் தலைமையகம்,
கதவு எண்.8.மருத்துவமனை சாலை,
செந்தில் நகர்,
போரூர், சென்னை-600 016.
அன்புடையீர்.
--
http://www.bazeerlanka.com/
சும்மா கணினி முன்பு அமர்ந்து தட்டி கொண்டிருக்கும் நமக்கெல்லாம் அதன் வலி தெரியாது.
ஒரு லட்சம் விதவை பெண்கள்.... 22000 பெண்களுக்கு கை கால்கள் இல்லை...நான் அகதி முகாமில் சந்தித்த ஒரு இளம்பெண்ணை மட்டும் 4 ஆண்கள் ஒரேநேரத்தில் கற்பழித்திருக்கிறார்கள்.அதுவும் ஆறு மாதங்கள் தங்கள் கூடவே வைத்திருந்து...அந்த பெண்ணுக்கு இப்போது வேளை வாங்கி கொடுத்து தங்கள் எங்கள் கண் பார்வையிலேயே வைத்திருக்கிறோம். ''முத்துக்குமார் ' இயக்கத்தை சேர்ந்த ஒரு இளைஞன் அந்த பெண்ணை மனம் செய்து கொள்ள முன்வந்திருக்கிறான்.
நிற்காமல் 10 கிலோ மீட்டர் விடாமல் ஓடியே சிங்களவர்களிடமிருந்து தப்பித்திருக்கும் பெண்ணை நான் சந்தித்திருக்கிறேன். ஓவ்வொரு இரவுகளும் அங்கிருக்கும் முகாம்களில் பெண்கள் பயந்து நடுங்கிக்கொண்டு இருப்பார்களாம்.அங்கிருக்கும் இளம் பெண்கள் ராணுவ அதிகாரிகளுக்கு 'சப்ளை' செய்யப்படுகிறார்கள். இன்னும் எத்தனையோ அக்கிரமங்கள்.... முழுவதும் இங்கு என்னால் பகிர முடியாது..2 நாட்கள் இதையெல்லாம் கேட்டுவிட்டு சாப்பிட முடியவில்லை
இதையெல்லாம் கேட்கும் போது உணர்வுள்ள மனிதனுக்கு கோபம் வரத்தான் செய்யும்.அதனால் தான் சிங்களவனை கண்டதும் கோபத்தில் கொந்தளிதிருக்கிரார்கள். என்ன பெரிய வன்முறை நிகழ்ந்துவிட்டதாக பேசிக்கொண்டிருக்கிறீர்கள்... இது ஒரு சாதாரண நிகழ்வு..
நினைத்து பாருங்கள்..உங்கள் வீட்டு பெண்மணிகள் 4 ,5 ஆண்களால் கற்பழிக்கப்பட்டால் கோபப்படாமல் 'காந்தியம் ' பேசிக்கொண்டிருப்பீர்களா?
pongada pudaigala...
Pathiva paatha ungalukkum naan thamizhar kitta irunthu semathiyaa engayo adi kedachurukkum pola irukke? Adi overo
இலங்கையில் எழுந்த இனப்பிரச்சனையே அதீதமான இனப்பற்றால் எழுந்தது. இன விசுவாசம் துவேசமாக மாறும் போது வன்முறை தோன்றுகிறது. சீமான் மிகச் சிறந்த தமிழ் உணர்வாளர் என்பதில் ஐயமில்லை, ஆனால் ஒரு பரந்த பார்வையோ, விளக்கமோ இல்லாமல் கண்டபாட்டுக்கு உணர்ச்சி வசப்படுவது நல்லதல்ல. எல்லை தாண்டி வந்து இலங்கைக் கடற்பரப்பில் மீன் பிடிக்கும் மீனவர்களால் வட பகுதி யாழ் மீனவர்கள் பாதிப்புக்குள்ளாவது உண்மை. ஆனால் இலங்கை அரசின் அராஜகம் பொறுத்துக் கொள்ள முடியாததே. ஆனால், இந்தக் கடலோர எல்லைப் பிரச்சனையில் சம்பந்தமே இல்லாத மாணவனை இழுத்து அடிப்பேன் என்று சொன்னது ஒரு முதிர்ச்சியற்ற போக்கு. புத்த பிக்குகள் விடயம் வரை அது அப்படியே தொடர்வது அவர் தெரிந்துகொள்ள இன்னும் நிறைய விடயங்கள் இருக்கின்றன என்பதையே காட்டுகிறது. சிங்களவர் என்கிற ஒரே காரணத்தாலேயே அவர் துவேஷம் பிடித்தவர் ஆகி விட மாட்டார். போரின் பல கால கட்டங்களிலும் போராட்டத்துக்கு, மற்றும் மனித உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பல சிங்கள அன்பர்கள், அறிவுஜீவிகள் இங்கே நிறையப் பேர் இருக்கிறார்கள். அடி வாங்கிய ஒருவர் அப்படியான ஒருவராக இருந்திருந்தால் அவரின் மன நிலை எவ்வாறு இருந்திருக்கும்?
உங்கள் பதிப்பை படித்தேன் நண்பரே. ஒரு இயக்கத்தில் உள்ள ஒருவர் தவறு செய்தால் அந்த தவறு அந்த தனிப்பட்ட நபருடைய தவறே அன்றி அந்த இயக்கத்தின் தவறு அல்ல. நமக்கே அறியாமல் ஒரு இயக்கத்தின் மீது பற்றும், வெறுப்பும் இருக்கும். அதன்படி பற்று இருந்தால் அங்கு நடக்கும் தவறுகள் கூட
சிறிதாக தோன்றும், அதே நேரத்தில் வெறுப்பு இருந்தால் அங்கு நடக்கும் சிறிய விசயங்கள் கூட பெரியதாக தோன்றும். உங்களை பற்றி பக்கத்தில் உங்களை பற்றி படித்தேன் பிறகு இந்த விருப்பு வெறுப்புக்கான காரணம் புரிந்தது. விருப்பு வெறுப்புகளை கடந்து சிந்தியுங்கள் ஒரு சிறந்த பத்திரிகையாளனாய் பிரகாசிக்க முடியும்.
நன்றி
அதே இன அழிப்பு நடவடிக்கையை முஸ்லிம்களுக்கு எதிராக 1990 இல் மேற்கொண்ட LTTE இணை இனத்தின் காவலன் என்று சொல்லும் நீங்கள் ல்ட்டே இனர் முஸ்லிம் களுக்கு எதிராக செய்த அட்டுளியங்களுக்கு சீமான் ,நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? .முஸ்லிம்கல் எல்லாம் மனிதர்கள் இல்லையா ?அப்போது ஏன் நீங்கள் குரல் கொடுக்கவில்லை ?
எழுத்து எனும் சாட்டையை சரியாக சொடுக்கி இருக்கிறீர்கள். பிரபலமாகவேண்டும் என்ற எண்ணத்தில் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கும் சில மூடர்களும் அவர்களின் சீடர்களும் நிறைய இருக்கிறார்கள். எதிர்ப்பை காட்ட புத்திசாலித்தனமான வழிகள் உள்ளன அதை விடுத்து அடிமுட்டாள் தனமாக செயல் படும் சீடர்களை திருத்தாத தலைவன் அவர்களை விட முட்டாள் தான். இந்த மாதிரி ஆட்களை எடுத்து சொல்லி புத்திசொல்லி திருத்தவே முடியாது.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தொலைக்காட்சி சிறப்பு நேர்காணலில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பற்றி இலங்கை அரசின் பாதுகாப்பு செயலாளர் கோத்த பய ராஜபக்சே அளித்துள்ள பதில்கள், இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்டத் தீர்மானங்கள் இலங்கை அரசை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதையே காட்டுகிறது
i agree with munpanikalm.seemanin kobam ,unarvu enakum pidithirukiradhu.aanal ina unarvu ellayil irunthu ina veri engira ellaiku poy pesuvathuthan payamay irukirathu.pal thakarey mathiriavari aaki viduvarkalo?oru visayam athisha ungaluku seemaney mutalaga therivar pola .avarin unarchivsapata pechai kandikalm .aanal avaraiyum ,naam thamizharayum thavaraga solla koodathu.
\\சினிமாவில் காட்டுவதைப்போல புத்தபிட்சுகளுக்கு குங்ஃபூவெல்லாம் தெரியாதுபோல!\\
உண்மைதான்.. சிங்கள புத்தபிட்சுகளுக்கு தெரிந்ததெல்லாம் தமிழர்களை கொல்வதும், கொல்வதற்கு தூண்டிவிடுவதும்தான்..
\\இங்கே நீ சிங்களவனை அடித்தால்.. தமிழ்நாட்டில் வாழ்கிற தமிழனுக்கு பிரச்சனையொன்று வரப்போவதில்லை. இலங்கையில் வாழ்கிற அப்பாவி தமிழர்களுக்குத்தான் அடிவிழும்\\
மஞ்சதுண்டுகாரரிடமும் மன்மோகனிடமும் ட்ரைனிங் எடுத்த மாதிரியே பேசுறியே ராஜா... ஏன் நீங்க சொல்ற புத்தபிட்சுகள் தமிழ்நாட்டை தாண்டித்தான் புத்தகயா போகணுமா... வேற ரூட்டே இல்லையா... இது ஆணவம்.. தமிழன கொன்னுட்டு தமிழ்நாட்டுலயே ஊர்வலம் போவோம்னு சொல்ற அகங்காரம்.. இதுக்கு இந்த அடி பத்தாது.. முடிஞ்சா சப்போர்ட் பண்ணுங்க.. இல்லன்னா _____ இருங்க...
MUTTAL ATHISA. எல்லோரும் முட்டாள்கள் என்பது போல் பேசுவது சரியல்ல.
totally waste article....try next time....POP's sombu thuukathey...
அப்படாக்கர் அதிஷா அவர்களே!!!
ஒரு நாய் உங்களையும் உங்கள் தங்கையையும் கடித்துவிட்டது என்பதற்காக ஒரு நாயையாவது கொள்ள வேண்டும் என்று கொலைவெறியோடு சுற்றி, ஒரு வலுகுன்றிய நாயாக தேர்வு செய்து அதை பலமுறை கல்லை போட்டு கொன்றுவிட்டு அதை எதோ வீர பிரதாப கதை போல சொல்லிவிட்டு(இதில் உங்கள் வீட்டில் இருப்பவரை கடித்தால் தெரியும் என்று வியாக்கியானம் வேறு)..கடைசியாக நாய் குட்டிகளை எடுத்து வளர்த்தேன் என்று "நான் ஹீரோ" என்னும் மனப்போக்கில் ஒரு பதிவு எழுதிவிட்டு அதை வெளியிடும் உங்களிடம் எப்படி மனிதர்களின் வலியை புரிந்துகொள்ளும் உணர்வை எதிர்பார்க்க முடியும்..வந்தது புத்த பிட்சுக்கள் என்று உங்களுக்கு எப்படி தெரியும்..அங்கு நடக்கும் மிகபெரும் கொடூரங்களை பற்றி பேச வக்கு இல்லை உங்களுக்கு..இதில் ஏதோ அங்கு இருக்கும் தமிழர்கள் அடி படுவார்கள் என்ற கேவலமான கவலை வேறு..வெட்ககேடு...
யோஹன்னா யாழினி சொன்னது போல் உங்கள் வீட்டு பெண்கள் கற்பழிக்கப்பட்டால் நீங்கள் என்ன ஆணுறை மாட்டிவிடுவீர்களா ஆதிஷா?
யோஹன்னா யாழினி சொன்னது போல் உங்கள் வீட்டு பெண்கள் கற்பழிக்கப்பட்டால் நீங்கள் என்ன ஆணுறை மாட்டிவிடுவீர்களா ஆதிஷா ?
1)நாம் வாழும் நாட்டிற்கு பிரச்னை எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று அறியாத சிங்களவன், அவன் நாட்டிலே கூட வாழ்வதற்கே லாயக்கற்றவன்.
2) பிரச்னைக்குரிய நாட்டில் தனது மொழியில் எழுதப் பட்ட வாசகங்களோடு உலா வருகிறான் என்றால், அவன் அடிவாங்கி சாக வேண்டியவன்தான்.
2)தனது இனத்திற்கு துரோகம் செய்தவன் எவனாயிருந்தாலும் அவனது வேர் அடி மண்ணிலிருந்து அனைத்தையும் வெறுப்பவன்தான் உயிர் வாழ முடியும் என்பது ”ட்ராய்” மூலம் வரலாறு கற்பித்த பாடம்.
3) சாதுக்கள் வேடத்தில் வந்திருக்கும் இவனுக அங்கு போய் சொல்வானுக ”தமிழன் பொட்டைப் பயலுக நாங்க சிங்கள மொழி அடையாளத்துடன் அவனுக நாட்டில் திரிந்தோம்” என்று.
4)சாதாரண சாதுக்களை அடித்தாலே குடிமகன்கள் இந்த ஒப்பாரி வைத்து முட்டாள் பட்டம் கட்டுகிறீர்கள். ராஜாங்க விஷயமாக வரும் மேல்தட்டு மக்களை இங்குள்ள முட்டாள்தனமான ராஜாங்கம் பார்க்ககூட விடாது.
5) அரித்தால் கை, மூளையைக் கேட்காது சொறிவதற்கு.அரிக்கும் போது தட்டி விட்டால்தான் கொட்டு வாங்காமல் தப்பிக்கலாம்.
Post a Comment