கோமாதா எங்கள் குலமாதா
>> 07 October 2011
மாட்டுக்கறி என்றால் எங்களுக்கு அவ்வளவு இஷ்டம். உயிர்! அதற்காக எதையும் செய்யதுணிந்திருக்கிறோம். என்னது மாட்டுக்கறியா... உவ்வ்வ்வ்வே! என்பவர்கள் உடனடியாக விண்டோவை மூடி வைத்துவிட்டு ஓடிடுங்க!
ஆனால் பாருங்க பாஸ்... உவ்வே என்று ஓடுகிற அளவுக்கு மாட்டுக்கறியொன்றும் மோசமான உணவு கிடையாது. சொல்லப்போனால் அசைவ உணவுகளில் சுவை மற்றும் உடல்நலம் முதலிய காரணிகளின் அடிப்படையில் சிறந்தது மாட்டுக்கறிதான். அப்போது எங்களுக்கு வயது ஏழோ எட்டோதான். மாட்டுக்கறியை மென்றுதின்ன சரியாக பற்கள் கூட முளைத்திருக்காது! ஓட்டை பாக்கெட்டில் காசுமிருக்காது.
எங்களுக்கு பிரியாணி என்பதே பெருங்கனவு. அதிலும் சிக்கன் பிரியாணியெல்லாம் கொடுங்கனவு. அந்த சமயத்தில் மாட்டுக்கறி பிரியாணிதான் சீஃப் அன் பெஸ்ட். ஒரு கப்பு வெறும் பத்துரூபாய்தான்! நாங்கள் அதில் அரைக்கப்பு சாப்பிடுவோம். மாட்டுக்கறியுடனான எங்கள் முதல் உறவு அப்படித்தான் தொடங்கியது.
சீஃப் அண்ட் பெஸ்ட் என்ற பெயரிலேயே கோவை கோட்டைமேட்டில் ஒரு புலால் உணவகமிருந்தது. கோட்டைமேட்டில் இருக்கிற மாநாகராட்சி ஆரம்பப்பள்ளிக்கு நேர் எதிரில்.. மிக மிக அருகில். இப்போது அந்தக்கடையை மூடிவிட்டனர். பிரியாணிக்கு மசாலா அரைக்கும் போதே வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும்! பள்ளிக்கோடம் பக்கம் போகும்போதெல்லாம் நாவில் நீர் சொட்டும். அப்படி ஒரு மணம். அதிலும் மாட்டுக்கறியின் வாசமிருக்கிறதே சொல்லவும் வேண்டாம்.. ஆஹா!
கோட்டைமேட்டுக்கென்று ஒரு பிரத்யேக வாசனை இருந்தது. அது மாட்டுக்கறியின் மணம். எங்கும் நிறைந்திருக்கும். மாட்டுக்கறியினை வேகவைக்கும்போது அதிலிருக்கிற அதிகப்படியான கொழுப்பு நீருக்கு மேல் ஒரு படலமாக எண்ணெயைப்போல மிதப்பதை காணலாம். அதன் மணம் வெண்ணையை உருக்கும் போது உண்டாகுமே அதைப்போலவே இருக்கும். ஏனோ அந்த மணம் ஏற்காமல் சைவபட்சினிகள் வாந்தி எடுத்துவிடுவதை பார்த்திருக்கிறேன். வெண்ணை காய்ச்சும்போது வருகிற துர்நாற்றம் இதைவிடவும் மோசமானது!
அஜ்மீர் பிரியாணி ஹோட்டல்தான் பீஃப் பிரியாணிக்கு கோவை ஃபேமஸ். இரவு ஒருமணிக்குப்போய் கேட்டாலும் சுடச்சுட சூடு குறையாமல் பிரியாணி போடுவதை பார்த்திருக்கிறேன். ஒரே குறை அந்தக்கடையில் பீஃப் என்று கேட்டால் கோச்சிப்பாங்க! மட்டன் என்றே கேட்க வேண்டும். அதைப்பின்பற்றி கோவையின் மற்ற பீஃப் கடைகளும் மாட்டுக்கறியை மட்டன் என்றே அழைத்தனர். ஒரு கப் பிரியாணியில் ஐந்தாறு நல்ல பீஸாவது நிச்சயமாக இருக்கும். பீஸ் என்றால் ஏனோ தானோ ச்சவ ச்சவ பீஸ்கள் அல்ல! நல்ல வெந்த மிருதுவான கையால் பிட்டுப்பார்த்தால் அப்படியே கரைகிற அற்புதபீஸ்கள் அவை. மாட்டுக்கறியின் சுவையே அது வேகும் பதத்தில்தான் இருக்கிறது.
சிக்கன் பிரியாணியில் பெரிய பெரிய பீஸ்கள் போட்டு சமைப்பதை பார்த்திருப்போம். மாட்டுக்கறிக்கு அப்படி சமைத்தால் கரக் மொறுக் என ரப்பர் துண்டுகளை போட்டு பிரியாணி சமைத்தது போலவேதான் இருந்துதொலைக்கும். அதனால் சின்ன சின்னத்துண்டுகளாக போட்டு சமைப்பதென்பது பீஃப் பிரியாணி சமையலில் அடிப்படை. மட்டனுக்கும் பன்றிக்கறிக்கும் கூட இது பொருந்தும்.
என் நண்பர்கள் வீடுகளில் மட்டுமே பீஃப் குழம்பு, பீஃப் சுக்காவெல்லாம் கிடைக்கும். கடைகளில் சில்லி பீஃப் என்று ஒன்று கிடைத்தாலும் சுவையேயில்லாத அந்த கொடிய வஸ்துவை குடிக்கும் போது மட்டுமே வேறு வழியின்றி உபயோகிக்கவியலும்.. அதுவும் சென்னையில் சில இடங்களில் கிடைக்கிற பீஃப் ரைஸெல்லாம் மாட்டுக்கறிக்கே அவமானம்.
வார இறுதியில் கிரிக்கெட் ஆடிவிட்டு , களைத்துப்போன எங்களுக்கு ஊக்கமருந்தாக இருந்தது மாட்டுக்கறிதான். போதிய ஊட்டச்சத்தின்றி சோம்பிப்போய் திரிந்த எங்களுக்கு புரத சத்தினை தந்த வள்ளல் அது. அஜ்மீர் பிரியாணி மற்றகடைகளைவிடவும் ஐந்துரூபாய் விலை அதிகம். ஐந்து ரூபாய் புரட்டுவது பெரும்பாடு அதனால் அஜ்மீருக்கு மாற்றாக இன்னொரு கடையை தேடிய போது அகப்பட்டதுதான் முத்துராவுத்தர் கடை. அஜ்மீருக்கு சற்றும் குறையாத அருமையான சூடான பிரியாணி இங்கே இப்போதும் கிடைக்கிறது. மதியம் மூன்று முப்பதுக்குப்போனால் முதல் ஆளாக அப்போதுதான் சமைத்த சூடான பிரியாணி கிடைக்கும். ஒன்றிரண்டு ரப்பர் துண்டுகளிலிருந்தாலும் நல்ல பீஸ்களும் கிடைக்கும். விலையும் மலிவு (ஐந்துரூபா கம்மி).
கோவையைவிட்டு சென்னை வந்த சிலநாட்களிலேயே தெரிந்துவிட்டது. மாட்டுக்கறிக்கும் சென்னை நகருக்கும் ஆகாதென்பது. எங்கு பார்த்தாலும் சிக் சிக்கென்று ஒரே சிக்கன்கறியும் பிரியாணியும். அடச்சே! என்றாகிவிட்டது. நண்பர்கள் இல்லாத மாட்டுக்கறியில்லாத நாட்கள் நரகமாயிருந்தன.
ஆனால் பீஃப் தாகம் மட்டும் தணியவேயில்லை. நண்பர்களோடு இணைந்து சாலைகளெங்கும் அலைந்து திரிந்து மாட்டுக்கறி வாங்கி வந்து வீட்டிலேயே சமைப்போம். வீட்டில் சமைப்பதில் இருக்கிற பெருங்குறை இந்த மாட்டுக்கறியை வேகவைப்பதுதான். அதற்கு கூகிளில் ஆராய்ச்சி செய்து நாங்கள் கண்டுபிடித்த நுணுக்கமான வழி வொய்ன் கலந்து சமைப்பது. அது மாட்டுக்கறியின் சுவையை கூட்டுவதோடல்லாமல் சீக்கிரமே நல்ல பதமாக வேகவும் உதவுகிறது. அதாவது ஒன்றரை மணிநேரம் வேகவேண்டிய கறியினை வெறும் அரைமணிநேரத்தில் வேகவைத்துவிடும்.
முதலில் கறியைவாங்கி சுத்தம் செய்து , நன்கு கழுவி சிறுசிறு துண்டுகளாக வெட்டி வொயினில் போட்டு ஊறவைக்க வேண்டும் பிறகு அதை அப்படியே கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்தால் அற்புதமான மணம் காற்றில் பரவும். அருகாமை வீடுகளுக்குள் நுழைந்து அவர்களை உங்கள் வீட்டு வாசலுக்கே அழைத்துவரும்.. சாராயம் காய்ச்சறீங்களா? என்று கேட்டிருக்கிறார்கள். இந்த மணத்தின் சுகம் அறியாத வீட்டு ஓனரிடம் ஓத்தாம்பட்டை வாங்கியிருக்கிறோம். இதற்குநடுவே நன்கு வெந்த கறியை தனியாக எடுத்து வைத்துவிட்டு வெங்காயம் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி அதில் மசாலா சேர்த்து கறியையும் போட்டு கிளறி உப்புப்போட்டு தண்ணீரை வேண்டிய அளவு ஊற்றி மூடிவைத்துவிட்டால் அரைமணிநேரத்தில் நல்ல மிருதுவான மாட்டுக்கறி கிரேவி தயாராகிவிடும். அதை தின்பதற்காகவே திண்டிவனத்திலிருந்து நண்பர்கள் கூட்டம் எங்கள் அறையை மொய்க்கும்! ஃபுல்லோடு வரும் புரவலர்களை எப்போதுமே நாங்கள் தடுத்துநிறுத்தியதில்லை.
அண்மையில் கோவை சென்றிருந்த போதும் கூட முத்துராவுத்தர் கடையில்தான் நண்பர்களோடு பீஃப் பிரியாணி சாப்பிட்டேன். சுவையும் மணமும் நான்கில் ஒருபீஸ் சவசவவும் மாறவேயில்லை! விலைமட்டும் கொஞ்சம் உயர்த்தியிருந்தனர். மற்றபடி கோவைமுழுக்க நிறைய பிரான்ச்சுகள் திறந்துள்ளனர். எல்லா கடைகளிலும் நல்ல பீஃப் பிரியாணி கிடைக்கிறது. பீஃப் ரசிகர்கள் மிஸ்ப்பண்ணிவிடக்கூடாத கடைகளில் அஜ்மீர் மற்றும் முத்துராவுத்தர் பிரியாணிகள் முக்கியமானது. கோவையில் சில கடைகளில் பீஃப் பிரியாணியை பீப் பிரியாணி என எழுதிவைத்திருந்தது கோபத்தை வரவழைத்தது. இதை மாற்ற தமிழ் ஆர்வலர்கள் முயற்சிக்க வேண்டும்.
சென்னையில் இவைகளுக்கிணையான பீஃப் பிரியாணிக்கடை எங்குமே கிடையாது. நண்பர்கள் தெரிந்திருந்தால் சொல்லி உதவலாம். உதயம் தியேட்டருக்கு அருகில் ஒரு கடை கண்டுபிடித்து சில நாட்கள் அங்குதான் பீஃப் பிரியாணி சாப்பிட்டுவந்தேன். ரொம்ப சுமார்தான் என்றாலும் சக்கரையில்லாத ஊருக்கு.. என்று வேறு வழியின்று தின்றுவந்தேன். ஏனோ அந்தக்கடை சிலமாதங்களில் மூடப்பட்டது. ஆனால் இப்போதெல்லாம் பீஃப் சாப்பிட சரியான ஒரு டக்கர் கடையை பர்மா பஜாருக்கு அருகே ஒரு கண்டுபிடித்திருக்கிறோம். அங்கே பீஃப் தந்தூரி கிடைக்கிறது! எனக்குத்தெரிந்து மாட்டுக்கறியில் தந்தூரி பண்ணுகிற ஒரே கடை அதுவாகத்தான் இருக்கும். கடையென்றால் சாலையோர கடை. பர்மா பஜார் சந்துகளுக்குள் புகுந்துசென்றால் ஒரு மசூதி இருக்கும் அதன் வாசலிலேயே இந்த சாலையோர தந்தூரி கடை அமைந்திருக்கிறது. அக்கடைகுறித்து இன்னொரு பதிவில் கடை உரிமையாளரான மெகாசைஸ் தாடிபாயின் பேட்டியோடு எழுதுவோம்.
சிக்கன் தந்தூரி மட்டுமே சாப்பிட்ட எனக்கு இந்த பீஃப் தந்தூரி வித்தியசமான அனுபவத்தினை கொடுக்கிறது. பீஃப் பிரியாணி சாப்பிடமுடியாத ஏக்கத்தினை தந்தூரி தின்று போக்கிக்கொள்கிறேன். நல்ல பீஃப் பிரியாணிக்கான என் தேடல் இன்னமும் மிச்சமிருக்கிறது. அதுகுறித்து பேசவும் நிறைய இருக்கிறது. இன்னொரு முறை பேசுவோம்.


32 கருத்துக்கள்:
in covi mass hotel was very famous for Beef biryani n chili beff during our college days..i luv that..after reading this i r call those wonderful days of covi...
சார்வாள், பாண்டிச்சேரி வேலூர் பீப் பிரியாணி செண்டர் பற்றித் தங்களது கருத்தைப் பகிரவும்
திருவான்மியூர் பஸ் டெப்பொ அருகில் ஒரு சிறு கடை இருந்தது...இப்போ இருக்கான்னு தெரில. சென்னையில் வாழ்ந்த காலங்களில் சைவ சார்வாளாய் இருந்ததால் அதிகமாகத் தெரியவில்லை :(
அட்டகாசமான பதிவு ..திருச்சியில் படித்த போது சிங்காரத்தோப்பில் ஒரு சந்துக்குள் இருந்த சின்ன மெஸ்-சில் மாட்டிறைச்சி வறுவல் பரோட்டாவோடு ..இன்னும் நாவினிக்குது.
நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம் :) வெள்ளிகிழமை மதியம் டாண் என்று ஒரு மணிக்கு பெரிய மேடு அக்பர் ஹோட்டலுக்கு போய் சுட சுட சுவையான பீப் பிரியாணியை சுவைக்கும்படியாக அன்பு கட்டளை இடுகிறேன் ! மற்ற நாட்களிலும் கிடைக்கும் ...ஆனால் வெள்ளி சூப்பர் !(மட்டன் என்று சொன்னால் நம்ப வேண்டாம்...மட்டனை விட சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும் :) வழி : ரிப்பன் பில்டிங் அருகில் உள்ள ரோட்டை எடுத்து மசூதிக்கு முந்தின ரோட்டை எடுத்து முதல் லேப்டை எடுக்கவும் !(வெப்பெரிக்கு செல்லும் வழி )- Bloorockz Ravi
ajmeer is a best hotel...i miss ajmeer hotel
இப்போதும் முத்துரவுத்தர் டாப்பு தான் அஜ்மீர்
தான் சரியில்லாமல் போச்சு .........
சென்னையை பற்றி இப்படி விஷயம் தெரியாமல் இழிவு படுத்தி விட்டீர்களே
.ஆலந்தூர் ஜோதி, ராமக்ரிஷ்ணாவை விட சுக்குபாய் பீப் பிரியாணி பல ஆண்டுகளாக ஆலந்தூரில் பேமஸ்.மவுண்ட் ஸ்டேஷன்லிருந்து ராமகிருஷ்ணா தியட்டர் வரும் வழியில் இரண்டு கடைகளை பார்க்கலாம்.ரயில் நிலையத்தில் இருந்து வரும் போது எம் கே என் ரோட்டில் நுழைந்து இருந்து இரண்டாவது குறுக்கு சந்தில் நுழைய வேண்டும்.பிரியாணி.சூப் இரண்டிற்கும் இணையே கிடையாது.மூன்று ரூபாயில் quaarter என்று ஆரம்பித்து இப்போது பதினைந்து ரூபாய்க்கு கிடைக்கிறது. ஒருவர் சாதாரணமாக நான்கு quarter உள்ளே தள்ளலாம்.
அடுத்து மீனம்பாக்கம் ஏர்லைன்ஸ் ஹவுஸ் (அண்ணா சாலையில் )அருகில் யூசுப் பாய் பிரியாணி சென்டர்.இங்கு மதியம் மட்டும் அற்புதமான பீப் பிரியாணி கிடைக்கும்.மெயின் ரோடில் இருக்கும் அம்பேத்கர் சிலைக்கு அருகில் ஒரு சின்ன குறுகல் வழியில் சென்றால் கடையை அடையலாம்.
சென்னையை பற்றி இப்படி விஷயம் தெரியாமல் இழிவு படுத்தி விட்டீர்களே
.ஆலந்தூர் ஜோதி, ராமக்ரிஷ்ணாவை விட சுக்குபாய் பீப் பிரியாணி பல ஆண்டுகளாக ஆலந்தூரில் பேமஸ்.மவுண்ட் ஸ்டேஷன்லிருந்து ராமகிருஷ்ணா தியட்டர் வரும் வழியில் இரண்டு கடைகளை பார்க்கலாம்.ரயில் நிலையத்தில் இருந்து வரும் போது எம் கே என் ரோட்டில் நுழைந்து இருந்து இரண்டாவது குறுக்கு சந்தில் நுழைய வேண்டும்.பிரியாணி.சூப் இரண்டிற்கும் இணையே கிடையாது.மூன்று ரூபாயில் quaarter என்று ஆரம்பித்து இப்போது பதினைந்து ரூபாய்க்கு கிடைக்கிறது. ஒருவர் சாதாரணமாக நான்கு quarter உள்ளே தள்ளலாம்.
அடுத்து மீனம்பாக்கம் ஏர்லைன்ஸ் ஹவுஸ் (அண்ணா சாலையில் )அருகில் யூசுப் பாய் பிரியாணி சென்டர்.இங்கு மதியம் மட்டும் அற்புதமான பீப் பிரியாணி கிடைக்கும்.மெயின் ரோடில் இருக்கும் அம்பேத்கர் சிலைக்கு அருகில் ஒரு சின்ன குறுகல் வழியில் சென்றால் கடையை அடையலாம்.
சார்,
நீங்கள் மாட்டுக்கறி சாப்பிட்டால் நாங்களும் சாப்பிட வேண்டுமா.
அதிஷா, சென்னையில் இருக்கும் சேட்டன்களிடம் கேட்டால் நல்ல பீஃப் பிரியாணி எங்கு கிடைக்கும் என்று கரீட்டா சொல்வார்கள். நாயரும் டீக்கடையும் மாதிரி சேட்டனும் பீஃபும் இணையாபிரியாதவைகள்....:))
//ஜோ/Joe, October 7, 2011 3:09 PM
அட்டகாசமான பதிவு ..திருச்சியில் படித்த போது சிங்காரத்தோப்பில் ஒரு சந்துக்குள் இருந்த சின்ன மெஸ்-சில் மாட்டிறைச்சி வறுவல் பரோட்டாவோடு ..இன்னும் நாவினிக்குது.
//
நீங்க சொல்றது கேரளா மெஸ்.
இன்னமும் அதே சுவையுடன், அதே ஜோசப் காலேஜ் பசங்க கும்பலுடன் சீரும் சிறப்புமா இருக்கு அந்த கடை.
கோவை கோட்டை மேட்டுல நியூ அபிதா பிரியாணி கடை இருக்கிறது.மிகவும் ரொம்ப சுவையுடன் இருக்கிறது .முத்துராவுத்தர் கடை இப்போ சுமார்தான்.அப்புறம் காந்திபுரம் இரண்டாவது வீதியில் சீப் அண்ட் பெஸ்ட் கடை இருக்கிறது .அங்கும் கிடைக்கும் .ஆனால் சுவை குறைவு .http://kovaineram.blogspot.com/2011/06/blog-post_24.html
இந்த வகையில் நான் கேரள மக்களை ஆஹா ஓஹோவென்று பாராட்டுவேன். ஆகப்பெரும்பான்மையான இந்துக்கள் அங்கே மாட்டுக்கறி சாப்பிடுகின்றார்கள். நான் கொச்சியில் ஒன்றரை வருடம் இருந்தேன். ஓட்டலில் மட்டன் (ஆட்டுக்கறி) சாப்பிட்டுவிட்டு வந்த பின் காய்ச்சல் வந்துவிட்டது. கேரள நண்பர்கள் எனக்கு செய்த அட்வைஸ்: ‘ஐயோ! இங்க ஹோட்டல்ல ஆட்டுக்கறி சாப்டாதே! பழைய கறியா இருக்கும்! மாட்டுக்கறி சாப்டு!’. முக்கியமான தகவல்: நான் வேலை செய்த நிறுவனத்தில் (பாதுகாப்புத்துறை) கேண்டீனில் மதிய உணவில் சூப்பரான சுவையான மாட்டுக்கறி எப்போதும் உண்டு! ...../ கோட்டைமேட்டுக்கென்று ஒரு பிரத்யேக வாசனை இருந்தது. அது மாட்டுக்கறியின் மணம்/....அதிஷா, ஒரு காலத்தில் அங்கே தீயில் கருகிய மனுசக்கறி வாசமும் மூக்கையும் இருதயத்தையும் ஒருசேரத் துளைத்ததே! (ம் உள்ளூர் மனிதர்களையே கேவலப்படுத்தும் அந்த செக்போஸ்டுக்கள் இப்போதும் உண்டோ? .....இக்பால்
என்ன சார், மாட்டுக்கறியை பத்தி இவ்வளவு விலாவரியாக எழுதியிருக்கிறீர்கள்..? ஆச்சர்யம் தான்...
எனக்கு பங்களாதேஷில் வழமையாக சொல்லப்ப்படும் ஒரு சொல் ஞாபகத்திற்கு வருகிறது..
கொரு மன்ஷோ நா காயிலே
ஷுக்ரபார் மஸ்ஜிதே நா ஜாயிலே
பூரா பூரி முஸல்மான் நயி..
அதாவது -
மாட்டுக்கறி சாப்பிடாதவாளும்
வெள்ளிக்கிழமைக்கு பள்ளிவாசலுக்கு போகாதவாளும்
முழுமையான முஸ்லீமாக இருக்க முடியாதுங்கறேன்...
இப்படி அர்த்தம் வரும்.
தகவல் # 1
பீப் என்றாலே கேரள உணவங்கள் என்பது எழுதப்படாத விதி. அது உங்கள் கட்டுரையில் விடுபட்டது வருத்ததிற்குரிய விசயம்...
no problem இங்கே சென்னையில் குமரகம், நந்தனம் போன்ற கேரள உணவகங்களில் பீஃப் வகைகள் ஏராளம், தாராளமாக கிடைக்கும்... குமரகத்தில் ஒரு பீஃப் ரோஸ்ட் பார்சல் 75/-க்கு வாங்கினால் ஒரு புல்லுக்கு தாங்கும்..
தகவல் # 2
தோழி ஒருவரின் வீட்டின் அருகாமையில் இருந்த அருமையான கையேந்தி பவனில் பீப் ஃப்ரை சிறப்பாக இருக்கும் என்று பல நாள் சொல்லக் கேள்விப்பட்டேன்.. ஆசையாக ஒருமுறை இதற்காகவே சென்ற பொழுது... சில நாட்கள் முன்புதான் அங்கு பீஃப் விற்பதையே நிறுத்தி விட்டதாக அறிந்தேன்...
காரணம்... அங்கு எதிர் ஃப்ளாட்டில் உள்ள பெல்ட்களின் சதி என்று அறிந்தபோது வந்த கோபம் இருக்கே...
அது போட்டும், இங்கு அதை பகிர்ந்து கொள்வதில் திருப்திபட்டுக்கொள்கிறேன்... நன்றி வணக்கம்....
அப்படியே அந்தக்காலத்து சாரு நிவேதிதாவைப் படிப்பதுபோல இருக்கிறது. கீப் இட் அப்.
அப்படியே சாப்பிட்ட உணர்வைக் கொடுக்கிறது உங்கள் எழுத்து!பிரியாணி(மாட்டு)சாப்பிட்டு வாழக் கடவது!
அருமையான் பதிவு ,
கோவை காந்திபுரம் ஹோட்டல் 7 பீஃப் பிரியாணி சுவை நம்க்கு பிடித்த ஒன்று .பசியை கிளப்பி விட்ட பதிவு.பீஃப் பிரியாணி ஒரு சுவை என்றாலும்,நமக்கு பிடித்தது பீஃப் உப்புக் கண்டம்தான்.ஆஹா என்ன ருசி! அதை பற்றி எழுதாமல் விட்டது பெரும் தவறு!!!!!!
நன்றி
இவ்வளவு சுவையா பதிவ போட்டுட்டு தலைப்ப மட்டும் ஏதோ தெலுங்கு பட டைட்டில்லு மாதிரி வைச்சிட்ட அதிஷா... சரிதான் உம்ம லொள்ளு அப்படி ;)
@ poovannan
இரண்டுமுறை சுக்குபாய்ல சாப்பிட்டுயிருக்கேன் டிவைன்
சே ஒரு 15 வருஷம் பாலகுமாரனயெல்லாம் படிச்சி வேஸ்டாகி நான்வெஜ் பக்கமே போகாம இருந்த மனம் இப்போ... பிரியானியின் மீது மோகம் கொல்/ள்கிறது :)
Boss ajmeer briyani niyabaga paduthiyatharku nandri. ATMs ole udumalipettaileyum mugamathu makal samaikum briyani super. Tharpothu 28 natkal dry aged STEAK pound $28 vangi athan meethu Cigago weber grill spice rub pottu 600 F il grill seithu sappidum Newyork Strip, imm saivapatchiniyana enmanaivi vettukule kondu varathirkal, appadiye veetai suthi backyard sendru grill panni sappittutu vanga appadingarange. Imm karpura vasanai theriyathavange....
பாஸ் அஜ்மீர் பிரியாணி கோவை நினைவு படுத்தியமைக்கு நன்றிகள். இதே மாட்டுக்கறி Newyork ஸ்ட்ரிப் ௨௮ நாட்கள் dry ஏஜ் செய்து, பவுண்ட் $ 28 வாங்கி., அதன்மீது Chicago weber steak rub போட்டு 600 F சூட்டில் கிரில் செய்து சாப்பிடும் சுகமே தனி பாஸ். வீடாம்மா சைவபசினி, steak வாங்கி வந்து வீட்டின் பின்புறம் சென்று கிரில் செய்து சாப்பிடவேண்டி உள்ளது. கஷ்ட பட்டாலும் சாப்பிடும்போது இதெல்லாம் சகஜம்னு ஆயிடுது.
ammam athu ethukku intha thalaippu?
ammam athu ethukku intha thalaippu?
Boss Try alandur Sukku bhai briyani. Qtr 30 and half 60 (costlier than chicken briyani in this area).
Cheers
Christo
அண்ணே சென்ரல் dyfi ஆபிஸ் பக்கத்துல ஒரு பீஃப் பிரியாணி கடை இருக்கு.முதன் முதல்ல பீஃப் பிரியாணி சாப்பிட்டதால அது மட்டமா சூப்பரானு எனக்குத் தெரியல. ஒரு தோழர், சென்னையில் அவர் அறிந்து அது நல்ல கடை என்று சொன்னார் .தோழர் கவாஸ்கர் அல்லது தோழர் கமலக்கண்ணனை தொடர்பு கொண்டால் மேலும் தகவல்கள் கிடைக்கும்... :)
///மாட்டுக்கறி என்றால் எங்களுக்கு அவ்வளவு இஷ்டம். உயிர்! அதற்காக எதையும் செய்யதுணிந்திருக்கிறோம். என்னது மாட்டுக்கறியா... உவ்வ்வ்வ்வே! என்பவர்கள் உடனடியாக விண்டோவை மூடி வைத்துவிட்டு ஓடிடுங்க!///
விண்டோவை மூடியே தொலைத்திருக்கலாம். ஏண்டாப்பா முழுவதும் படித்தோம் என்றாகிவிட்டது. கணிப்பொறி திரையின்மேல் வாந்தி எடுக்கவில்லை. அந்தமட்டும் லாபம்.
அதிஷா ஏ-ஒன் பீப் பிரியாணிக்கு நான் கியாரண்டி... நீ ரெடியா மாப்ள
எல்லாம் சரி தலைப்புதான் இடிக்குது. தமிழில் ”கோமாதா எங்கள் குலமாதா” என்று எழுதிவிட்டு மா(தா)ட்டுக் கறி சாப்பாட்டை பற்றிய சமாச்சராங்கள் இருக்கிறது. தலைப்பிடும் போது கவனம் கொள்ளுங்கள்
தலைவா, அண்ணா நகர் சாந்தி காலனி ரோட்டு கடைசில உள்ள ராத்திரி கடையில நல்ல பீப் சில்லி போடுறாங்க, சாப்டுட்டு சொல்லுங்க...
Post a Comment