Pages

04 April 2013

ஐயாம் காட் ஒன்லி!




''பாஸ் நீங்க ஆத்திகரா நாத்திகரா?''

''என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது''

''அது தெரியாமத்தானங்க கேக்குறோம்.. சொல்லுங்க''

''நான் கடவுள்ங்க''

''அய்யே... காமெடி பண்ணாதீங்க''

''இல்லைங்க சீரியஸாதான் சொல்றேன்... நான் கடவுள்தான்ங்க''

''சரி.. எந்த கடவுள் .. சிவனா பார்வதியா கிருஷ்ணனா பிள்ளையாரா அல்லாவா இயேசுவா புத்தரா இல்ல புதுசா எதுனாச்சுமா''

''வினோன்னு புதுகடவுள். நானே கண்டுபுடிச்சேன்.. பேர் நல்லாருக்குல்ல''

''ஓ அப்படீனா நீங்க நிஜமாவே கடவுள்தான்.. அதை நாங்க நம்பணும்''

''ஆமாங்க''

''கன்பார்மா..''

''உண்மையாவே நான் கடவுள்தான்ங்க.. இதில சந்தேகப்பட ஒன்னுமேயில்ல''

''அப்படீனா கடவுளே உன்னை கையெடுத்து கும்பிடறேன்.. உனக்கு நான் தேங்கா உடைக்கிறேன்.. நான் கேக்கறத மட்டும் செஞ்சிடு..''

'' :-) "

''கடவுளே ஐ வாண்ட் அஞ்சலி.. உடனே ஏற்பாடு பண்ணிக்குடு கடவுளே.. ரூம்லாம் நானே புக் பண்ணிக்கறேன்.. ''

" :-) "

"அஞ்சலி இல்லாட்டி லட்சுமிராய் கூட ஓக்கேதான்.. ஏற்பாடு பண்ணிகுடுப்பியா கடவுளே.. கட்டாயம் தேங்கா உடைக்கிறேன், பொங்கல் வைக்கிறேன்..''

'' :-) "

"சொல்லு சாமீ பண்ணுவியா மாட்டியா''

'' :-) "

" டே லூசு சாமீ பண்ணுவியா மாட்டியா ''

'' :-) "

" என்னய்யா கடவுள் நீ எது கேட்டாலும் சிரிக்கற.. சரி ஏற்பாடுதான் பண்ணித்தர மாட்டே.. ஒரு மூன்னூர்ருவா குடு.. குவாட்டராச்சும் அடிக்கறேன் ''

'' :-) "

" என்ன கடவுளே.. இதுக்கும் சிரிப்புதானா.. நல்லா சமாளிக்கிறயா''

" ;-) ''

'' பார்ரா மறுக்கா மறுக்கா சிரிக்கறத... உன்னால முடியாதுனு சொல்லு இந்த நக்கல் சிரிப்பெல்லாம் வேணாம்''

'' அப்படியில்லைங்க.. கோயிலுக்கோ சர்ச்சுக்கோ மசூதிக்கோ புத்தவிகாரத்துக்கோ போய் என்ன வேணா கேட்டுப்பாருங்க பாஸ்.. எல்லா சாமியும் சிரிக்க மட்டும்தான் செய்யும்! நீங்க கேட்டாலும், சிரிச்சாலும், அழுதாலும் வேண்டினாலும் நோண்டினாலும் புன்னகைக்க மட்டுமே செய்யும்... ''

'' :-) "