சென்னைப்பதிவர் சந்திப்பு 08.06.2008 : சில கேள்விகளும் பதில்களும்

>> 09 June 2008

சென்னையில் 08.06.2008 அன்று நடந்த வலைப்பதிவர் சந்திப்பு குறித்த ஒரு கேள்வி பதில் ஆய்வறிக்கை :





கேள்வி : சந்திப்பு எங்கே எப்போ எதுக்கு நடந்தது ?
பதில் :
சென்னை சந்திப்பு 08.06.2008 அன்று மாலை 5.30 மணியிலிருந்து 8.30 மணிவரை , மெரினா காந்தி சிலை பின்புறமுள்ள வரண்ட குளத்தில் , நண்பர் பாஸ்டன் பாலா அவர்களது வருகையை முன்னிட்டு நடந்தது .

கேள்வி : இந்த சந்திப்புக்கு யாரேல்லாம் வந்தாங்க?
பதில் :
பாஸ்டன் பாலா, லக்கிலுக்,டோண்டு ராகவன் , பைத்தியக்காரன் , மருத்துவர் புருனோ , வழக்கறிஞர் சுந்தர்ராஜன் , கடலையூர் செல்வம் , சுகுணா திவாகர் , மலர்வனம் லட்சுமி , கென் , முரளிக்கண்ணன் , ஜ்யோவ்ராம் சுந்தர் , வளர்மதி , ஜிங்காரோ ஜமீன் , வலைப்பதிவர் உதவிப்பக்கம் உதவி விக்கி , பாலபாரதி மற்றும் நான் .

கேள்வி : என்னல்லாம் பேசினீங்க ?
பதில் :
1 . அடுத்த வார தமிழ்மண நிர்வாகிகளுடனான சென்னை சந்திப்பில் அவர்களிடம் முன் வைக்க வேண்டிய பிரச்சனைகள்.
2. வலையுலகில் பாலியல்
3. பூங்கா இதழ்
4. வலைப்பதிவருதவி
5.சூடான இடுகைகளும் பின்னூட்டமும்.
6.உண்மைத்தமிழன் பின்னூட்ட பிரச்சனை
7.தமிழ்மண குறிச்சொற்கள் மற்றும் வகைப்படுத்துதல் பிரச்சனை

கேள்வி : சுவாரசியமான சம்பவங்கள் ?
பதில் :
சந்திப்பு தொடங்கி 10 நிமிடத்திலேயே மழை பெய்ய தொடங்கிவிட்டது , பதிவர்கள் மழைக்கு ஒதுங்க இடமின்றி கலைக்கப்பட்ட எறும்புக்கூட்டம் போல சிதறி ஒடினர் . அங்கு அருகிலிருந்த மரம்தான் பாதி பதிவர்களை காப்பாற்றியது .
இந்த அடை மழையிலும் டோண்டு மட்டும் கடலை நோக்கி நடந்து போய் அலையோடு விளையாடிக்கொண்டிருந்தார் . சில பதிவர்கள் கொட்டும் மழையிலும் நனைந்தபடி புகைப்பிடித்தனர் .
மழை நின்ற பிறகு மீண்டும் பழைய இடத்துக்கே பதிவர்கள் திரும்ப மீண்டும் சந்திப்பு தொடர்ந்தது .

கேள்வி : சாப்பிட குடிக்க எதாவது குடுத்தாய்ங்களா?
பதில் :
மஞ்சள் நிற இனிப்பும் , முறுக்கும் அனைத்து பதிவர்களுக்கும் தரப்பட்டது . குடிக்க குடிநீருடன். சந்திப்பு முடிந்த பின் அனைவருக்கும் தேநீர் தரப்பட்டது . ( உபயம் : பாலா & பாலா )

கேள்வி : ரொம்ப எதிர் பார்த்தும் யாரெல்லாம் வரல ?
பதில் :
நான் எதிர்பார்த்து வராதவங்க , வினையூக்கி,ஜிம்ஷா மற்றும் உண்மைத்தமிழன்

கேள்வி : மொத்தமா 20 பேருதான் வந்திருப்பாங்க போலருக்கே , சென்னைல அவ்வளோதான் பதிவருங்களா?

பதில் :

:-)

கேள்வி : இந்த பதிவர் சந்திப்பு அரேஞ்ச் பண்றதுலாம் யாரு ? அதுனால அவங்களுக்கு என்ன லாபம் ?
பதில் :
பதிவர் சந்திப்பு ஏற்பாடு திரு.பாலபாரதி அவர்கள் , அவருக்கு நன்றி , இது போன்ற சந்திப்புகளால் அவருக்கு எதுவும் நன்மை இருப்பதாக தெரியவில்லை .

கேள்வி : அப்ப யாருக்குதான் லாபம் ?
பதில் :
லாபம் , நட்டம் பற்றி பேச இது வியாபாரம் இல்லை , இது நம் உணர்வு , ஆவல் மற்றும் எண்ணங்கள் சார்ந்த விடயம் .

கேள்வி : புதுப்பதிவர்கள் இது மாதிரி சந்திப்புக்கு வர தயங்கறாங்களாமே ?
பதில் :
இருக்கலாம் . அவர்களுக்கு ஆரம்ப காலத்தயக்கம் இருக்கத்தான் செய்யும் . ஆனால் புதுப்பதிவர்கள் கட்டாயம் இது போன்ற சந்திப்புகளில் கலந்து கொள்ளவேண்டும் , ஏனெனில் அவர்கள் தான் தமிழ்வலைப்பதிவுகளின் எதிர்காலம். அவர்களை இழந்தால் வலைப்பதிவுகளில் தமிழ் மெல்லச்சாகும்.

கேள்வி : சந்திப்புக்கு கனெக்ஸனில்லாத கேள்வினாலும் பதில் சொல்லு , இந்த மோகன் கந்தசாமி இன்னா மேட்டருபா ?
பதில் :
இது ஒரு கந்தசாமியின் குமுறல் அல்ல , இது போல பலரும் எண்ணியிருக்கிறார்கள் .
மூத்த பதிவர் , பீத்த பதிவர் என யாரும் இல்லை நாம் எல்லோருமே பதிவர்கள் அவ்வளவுதான் . நல்ல எழுத்திற்கு நிச்சயம் சரியான அங்கீகாரம் கிடைக்கும்.

கேள்வி : இந்த மொக்கை சந்திப்புக்கெல்லாம் பதிவு போடறியே உனக்கெல்லாம் வேற வேல இல்ல ?

பதில் :
அதெல்லாம் சந்திப்புக்கு வராதவங்க சொல்லக்கூடாது .



கேள்வி : ஏன் இவ்ளோ சீரிஸா சந்திப்பு பத்தி எழுதிருக்க ?
பதில் :
சந்திப்பு பூரா ஒரே காமெடி நைனா , அல்லாரும் இன்னா சிரிப்புன்ற !!!!!
அதான்பா அத பத்தி எழுத சொல்லவாவ்து சீரிஸா.........
ஓகே ஓகே டென்ஸனாவாத!!!!!!


அத்த வாரம் மீட் பண்றேன்.


பின் குறிப்பு : இந்தப்பதிவில் மட்டும் மூத்த பதிவர்களின் பின்னூட்டங்கள்( யாராவது போட்டா!!!! ) வெளியிடப்படமாட்டாது . இச்சந்திப்பை பற்றி மேலும் தெரிந்து கொள்ள , உங்கள் சந்தேகங்களை பின்னூட்டமிடவும் .

42 கருத்துக்கள்:

முரளிகண்ணன் June 9, 2008 3:49 PM  

\\சந்திப்பு பூரா ஒரே காமெடி நைனா \\
இதில ஏதும் உள்குத்து இல்லையே?

உண்மைத் தமிழன்(15270788164745573644) June 9, 2008 4:23 PM  

//பின் குறிப்பு : இந்தப் பதிவில் மட்டும் மூத்த பதிவர்களின் பின்னூட்டங்கள்( யாராவது போட்டா!!!! ) வெளியிடப்படாது//

மூத்தப் பதிவர்கள் என்பவர்கள் யார்..?

உடனே சொன்னால் 'ஆரம்பிக்கலாம்'..

கிரி June 9, 2008 5:23 PM  

//கேள்வி : அப்ப யாருக்குதான் லாபம் ?
பதில் :
லாபம் , நட்டம் பற்றி பேச இது வியாபாரம் இல்லை , இது நம் உணர்வு , ஆவல் மற்றும் எண்ணங்கள் சார்ந்த விடயம்//

:-)

//பின் குறிப்பு : இந்தப்பதிவில் மட்டும் மூத்த பதிவர்களின் பின்னூட்டங்கள்( யாராவது போட்டா!!!! ) வெளியிடப்படாது //

அடங்கொக்கமக்கா...ரொம்ப தான் சூடா இருக்கீங்க..

உங்கள் தகவலுக்கு நன்றி அதிஷா.

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//பின் குறிப்பு : இந்தப் பதிவில் மட்டும் மூத்த பதிவர்களின் பின்னூட்டங்கள்( யாராவது போட்டா!!!! ) வெளியிடப்படாது//

மூத்தப் பதிவர்கள் என்பவர்கள் யார்..?

உடனே சொன்னால் 'ஆரம்பிக்கலாம்'..//

:-)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

அதிஷா June 9, 2008 5:24 PM  

//இதில ஏதும் உள்குத்து இல்லையே?//

உள்குத்து இல்லாம கேள்வி பதிலா???

;-)

அதிஷா June 9, 2008 5:25 PM  

//
மூத்தப் பதிவர்கள் என்பவர்கள் யார்..?

//

இங்க யாரு பின்னூட்டம்லாம் வரலியோ அவங்கதாண்ணா......
;-)

//உடனே சொன்னால் 'ஆரம்பிக்கலாம்'..
//
என்ன மூ.ப.வ.க வா?

ஜிம்ஷா June 9, 2008 6:52 PM  

...இங்க யாரு பின்னூட்டம்லாம் வரலியோ அவங்கதாண்ணா......///


அதனால நான் வந்து அட்டன்டென்ஸ் போட்டுட்டேன்.

Jothivel Moorthi.AC June 9, 2008 7:10 PM  

என்ன மறந்துடீங்களே!

பினாத்தல் சுரேஷ் June 9, 2008 7:27 PM  

நான் மூத்த பதிவரா இல்லையா எனத் தெரிந்து கொள்ள இந்தப் பின்னூட்டம்!

கிரி June 9, 2008 8:27 PM  

//பின் குறிப்பு : இந்தப் பதிவில் மட்டும் மூத்த பதிவர்களின் பின்னூட்டங்கள்( யாராவது போட்டா!!!! ) வெளியிடப்படாது//

என் பின்னூட்டம் வரலையே..அப்ப நான் மூத்த பதிவரா....வந்து மூணு மாசம் கூட ஆகலையே ... அப்படி இல்லைனா எனக்கு வயசும் ஒண்ணும் ரொம்ப ஆகிடலையே (ஹீ ஹீ மூத்த பதிவர் னு சொல்றதுக்கு)..என்ன கொடுமையா இது.. அதிஷா.. எனக்கு உண்மை தெரிந்தாகனும்...இல்லைனா..அடுத்த பதிவர் சந்திப்பில் ஆட்டோ வரும் :-))) ஹீ ஹீ ரோடு நா ஆட்டோ கார் எல்லாம் வருவது சகஜம் தானே..அதை தான் சொன்னேன்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ARUVAI BASKAR June 9, 2008 8:28 PM  
This comment has been removed by the author.
ARUVAI BASKAR June 9, 2008 9:12 PM  

அன்பு ஆதிஷா ,
மிகவும் நன்றாக பதிவர் சந்திப்பினை பற்றி எழுதியுள்ளீர்கள் .
உங்கள் எழுத்து நடை யும் வளர்ந்து கொண்டே varukirathu .
கீப் இட் அப்
அன்புடன்
அருவை பாஸ்கர்
(வேற ப்லோக்கிர்க்கு எழுதிய கமெண்ட் தவறுதலாக இங்கே பேஸ்ட் செய்ய பட்டு vittathu அதனால் தான் அதனை அழித்து விட்டேன் )

அதிஷா June 9, 2008 9:59 PM  

//அடங்கொக்கமக்கா...ரொம்ப தான் சூடா இருக்கீங்க..
//

வாங்க கிரி , ;-)

அதிஷா June 9, 2008 10:00 PM  

ஜிம்மு இங்க வந்து அட்டென்டன்ஸு போடுங்க

சந்திப்புக்கு ஏன் வரல?

அதிஷா June 9, 2008 10:02 PM  

மன்னிச்சுருங்க ஜோதி....

உங்க பேர குறிச்சுகல...

வருகைக்கு நன்றி

♠ யெஸ்.பாலபாரதி ♠ June 9, 2008 10:38 PM  

புதிய முறையில்.. எழுதிய விதம்.. அழகு! :)

karikalan June 9, 2008 11:20 PM  

நன்றி ஆதிஷா.

சென்னை பதிவர் சந்திப்பு பற்றி தெரிந்துக்கொள்ள, நேற்றிலிருந்து பதிவுகளை தேடிக்கொண்டிருகிறேன். யாருமே இன்னும் எழுதவில்லை. நீங்கள்தான் ஃபர்ஸ்ட் என நினைக்கிறேன்.
நன்றி மீண்டும்.
(இது டோண்டு சார் பதிவில் எழுதியது)


இப்பதான் டோண்டு சார் பதிவுலே பின்னோட்டமிட்டிட்டு வறேன். அவர் கொடுத்த லிங்ல தான் உங்க பதிவிற்கே வரேன். வந்தவனை ஏமாத்தலே, நன்றி !

ரொம்ப அருமையா இருக்கு, உங்க பதிவர் சந்திப்பு பற்றி நீங்க எழுதியது .
நன்றி மீண்டும்

Vicky June 9, 2008 11:39 PM  

நானும் !! மூத்த பதிவரா இல்லையா எனத் தெரிந்து கொள்ள இந்தப் பின்னூட்டம்!

btw கேள்வி பதில் format நல்லாயிருக்கு :)

புருனோ Bruno June 10, 2008 2:12 AM  

//லாபம் , நட்டம் பற்றி பேச இது வியாபாரம் இல்லை , இது நம் உணர்வு , ஆவல் மற்றும் எண்ணங்கள் சார்ந்த விடயம் .//

நச்

பொதிகைத் தென்றல் June 10, 2008 5:48 AM  

சென்னைப் பதிவர் பற்றிய முழுத் தகவலையும் கேள்வி பதில் பாணியில் அருமையான அழகு தமிழ் நடையில்
தந்தற்கு நன்றி.
தலைநகர் சென்னை பதிவாளார்களில் பிரபலமானவ்ர்கள் 20 பேரின் பற்றிய தகவலுக்கும் நன்றி.
(மூத்த பதிவாளர் யார் என்பது விடுகதையா?-பின்னூட்டதில் பதிலிருக்கா?)

அதிஷா June 10, 2008 9:02 AM  

வாங்க பினாத்தல்

அது நீங்க இல்ல

அதிஷா June 10, 2008 10:08 AM  

வாங்க கிரி,

//அதிஷா.. எனக்கு உண்மை தெரிந்தாகனும்...இல்லைனா..அடுத்த பதிவர் சந்திப்பில் ஆட்டோ வரும் :-))) //

தயவு செஞ்சு அத பண்ணுங்க...
அவங்களுக்கும் வலைப்பதிவ பத்தி சொல்லி குடுத்திடலாம்

;-)

அதிஷா June 10, 2008 10:11 AM  

பாஸூ இன்னாதிது , சாம்பார் வடைல போட்ற கமெண்ட்லாம் இங்க போட்டுகிட்டு..?

அடுத்த சந்திப்புக்காவது வாங்க

அதிஷா June 10, 2008 10:13 AM  

பாலாண்ணா முதல் தடவையா நம்ம பதிவு பக்கமா வரீங்கனு நினைக்கிறேன்..

வருகைக்கு நன்றி

லக்கிலுக் June 10, 2008 10:14 AM  

//வலையுலகில் பாலியல் //

யோவ் அது வலையுலகில் பாலியல் இல்லைய்யா.. சிறு பத்திரிகையாளர்களின் பாலியல் வறட்சி :-)

அதிஷா June 10, 2008 10:15 AM  

வாங்க கரிகாலன் ,
//நேற்றிலிருந்து பதிவுகளை தேடிக்கொண்டிருகிறேன். யாருமே இன்னும் எழுதவில்லை. //

3பேரு எழுதிருக்கோம்:-)

ஜிங்காரோ ஜமீன் June 10, 2008 10:26 AM  

நீங்க முதலில் பதிவு போடுவீங்கன்னுதான் நாங்க காத்துக்கிட்டு இருந்தோம். ம்.. அருமையான பதிவு. அதுசரி... ஏன் புகைப்படம்லாம் வெளியிடலை?

டி.பி.ஆர் June 10, 2008 10:27 AM  

நான் வந்து பின்னூட்டம் போட்டுட்டேன். அதனால நான் 'மூத்த (experienced) பதிவர்' இல்லை. வயதில் மட்டுமே மூத்த பதிவர் நான். ஆகையால் இந்த பின்னூட்டத்தை அனுமதிப்பீர்கள் என நம்புகிறேன்.

பதிவர் கூட்டங்களூக்கு வரவேண்டாம் என்றெல்லாம் இல்லை. பல சமயங்களில் அலுவலக விஷயமாக வார இறுதி நாட்களிலும் சென்னையில் இருக்க முடிவதில்லை. அடுத்த ஞாயிறன்று ஊரில் இருந்தால் நிச்சயம் கூட்டத்திற்கு வருவேன். இப்போதெல்லாம் அடிக்கடி எழுத முட்வதில்லை என்றாலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தமிழ்மணம் வருவதுண்டு.

அதிஷா June 10, 2008 11:46 AM  

நன்றி நீங்க மூத்தப்பதிவரில்ல.

வாழ்த்துக்கு நன்றி

அதிஷா June 10, 2008 11:47 AM  

வாங்க விக்கி , வருகைக்கு நன்றி

KRP June 10, 2008 11:53 AM  

பதிவர்கள் சந்திப்பில் , ஆங்கிலம் கலக்காத தமிழில் எழுதவும் சொல்லுங்கள் .

அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/

அதிஷா June 10, 2008 12:41 PM  

வாங்க மருத்துவர் ஐயா...(புருனோ)

நன்றி

அதிஷா June 10, 2008 12:44 PM  

வாங்க பொதிகை தென்றல்

//மூத்த பதிவாளர் யார் என்பது விடுகதையா?-பின்னூட்டதில் பதிலிருக்கா//

already இருக்கு

அதிஷா June 10, 2008 1:28 PM  

//யோவ் அது வலையுலகில் பாலியல் இல்லைய்யா.. சிறு பத்திரிகையாளர்களின் பாலியல் வறட்சி :-)
//

சுட்டியமைக்கு நன்றிங்க இலைக்காரன்

அதிஷா June 10, 2008 1:30 PM  

//ஏன் புகைப்படம்லாம் வெளியிடலை?
//

ஜிங்கு போட்டோலாம் போட்டேன் பதிவுல வர மாட்டேங்குது

Jeeves June 10, 2008 1:32 PM  

bangalore la ethachchum plan irukkaa ?

அதிஷா June 10, 2008 1:32 PM  

டி பி ஆர் ...வருகைக்கு நன்றி

கோவி.கண்ணன் June 10, 2008 2:05 PM  

//கேள்வி : ரொம்ப எதிர் பார்த்தும் யாரெல்லாம் வரல ?
பதில் :
நான் எதிர்பார்த்து வராதவங்க , வினையூக்கி,ஜிம்ஷா மற்றும் உண்மைத்தமிழன்//

நானும் சென்னை வந்தபோது இவர்களை எதிர்பார்த்தேன். வரவில்லை. :(

அதிஷா June 10, 2008 7:59 PM  

//
பதிவர்கள் சந்திப்பில் , ஆங்கிலம் கலக்காத தமிழில் எழுதவும் சொல்லுங்கள் .
//
கேஆர்பி

நிச்சயம் சொல்றோம் , வருகைக்கும் யோசனைக்கும் நன்றி

அதிஷா June 10, 2008 8:03 PM  

ஜீவ்ஸ் ,

நான் பெங்களூருவுக்கு வந்தா கட்டாயம்

உங்கள சந்திக்கிறேன் ,

என்னால அதான் முடியும்

அதிஷா June 10, 2008 8:05 PM  

//நானும் சென்னை வந்தபோது இவர்களை எதிர்பார்த்தேன். வரவில்லை. :(
//
நீங்களுமா தல..

முதல் வருகைனு நினைக்கிறேன்

நன்றி அடிக்கடி வாங்க

ARUVAI BASKAR June 10, 2008 10:37 PM  

//அடுத்த சந்திப்புக்காவது வாங்க//

நான் வெறும் பின்னூட்டம் இடும் பதிவர் என்பதை தெரிவித்து கொள்கிறேன் .!!!!
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

பரிசல்காரன் June 12, 2008 12:46 AM  

பதிவர் சந்திப்பு நடத்தி, வலைப்பூக்களுக்கு நீரூற்றிக் கொண்டிருக்கும் தல யெஸ். பாலபாரதிக்கு சல்யூட்! இதுபோன்ற சென்னை சந்திப்புகளில், வாய்ப்பு கிடைத்தால் நான் வரலாமா? சென்னை பதிவாளர் மட்டும்தானா?

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP