Pages

19 June 2008

அலிபாபாவும் அபத்த சினிமாக்களும்.................1



சினிமா என்றாலே எல்லோருக்கும் ஒரு அபரிமிதமான ஆர்வம் எப்போதும் உண்டு , சின்னக்குழந்தை முதல் பல்லில்லா பாட்டி வரை அனைவரையும் கவரும் சினிமா நம் அலிபாபாவை மட்டும் ஏனோ கவருவதில்லை , அவன் இது வரை மசாலா முதல் மங்கலான வெளிச்சத்தில் வருகின்ற உலகசினிமா வரை பார்த்திருக்கிறான் , ஆனால் அவனுக்கு மட்டும் எதுவுமே பிடிப்பதில்லை. எந்த சினிமா பார்த்தாலும் ஆயிரம் குறைகள் சொல்வான் . அது சுவாரசியமாகவும் , ரசிக்கும் படியும் , கலகலப்பாகவும் , சமயங்களில் ஆபாசமாகவும் எரிச்சலூட்டக்கூடியதாகவும் இருக்கும் . அவனுக்காகத்தான் இப்போது காத்திருக்கிறேன் .



வீட்டின் அழைப்பு மணி ஓசை கேட்டு கதவை திறந்தால் அலிபாபா '' வாடா அலிபாபா '' , '' ஹாய் மச்சி , என்னடா ரொம்ப நேரமா வெயிட்டிங்கா!! மன்னிச்சுரு மச்சி , தசாவதாரம் போய்ட்டு இப்பதான் வரேன் '' என்றபடியே சோபாவில் அமர்ந்தான் . '' என்னடா விட்டுட்டு போயிட்ட? '' , என்று ப்ரிட்ஜை திறந்து ஒரு பாட்டில் தண்ணீரை கொடுத்தேன் .


''எப்படிடா படம் '' என்றேன் , தண்ணீரை குடித்த படி '' டேய் ___ வேற எதுனா பேசுடா ____ '' என்றான் . எனக்கு அவன் வாயிலிருந்து வந்த கெட்ட வார்த்தைகளிலேயே புரிந்தது .


அவனாகவே பேசட்டும் என நான் காத்திருக்க அவனாகவே ஆரம்பித்தான் ,''மச்சி இன்னும் எத்தினி படத்துலதான் இந்த டாக்டர்கள கோமாளி ஆக்குவாங்கனு தெரியலடா''ஆஹா ஆரம்பிச்சுட்டான் என எண்ணிக்கொண்டு அவனை கவனிக்க தொடங்கினேன் .



'' மச்சி இந்த தசாவதாரத்துல '' என அவன் ஆரம்பிக்க, நான் '' மச்சி வேணான்டா ஏற்கனவே பல பேரு அந்த படத்த பத்தி போதும் போதுங்கற அளவுக்கு விளக்கிட்டாங்க வேணான்டா , என்ன விட்று'' என நான் எழுந்து ஓட '' மச்சி நான் அந்த படத்தப் பத்தி சொல்ல வரலடா , அந்த படம் பார்த்த உடனே வேற ஒன்னு தோணிச்சுடா நாயே அதுக்குள்ள , எதோ ராமுவ பார்த்த கலைஞராட்டமா ஓட்ற..'' என்று என்னை பிடித்து உட்கார வைத்தான் .



ஸ்ஸ்ஸப்பா அப்ப இது அதில்லையா என பெருமூச்சு விட்டபடி '' அப்படி என்னடா மேட்டரு '' என்றேன் .



'' மச்சி , நீ நிறைய தமிழ் படங்கள்ல கவனிச்சிருக்கியா , இந்த டாகடருங்க இது மெடிக்கல் மிராக்கிள்னு சொல்றத , ஒரு நோயாளி பிழைச்சிட்டான்னா முதல்ல பேசண்டயே எழுப்பி விட்டு சார் நீங்க எப்படி பிழைச்சிங்கன்னே தெரியல , இட்ஸ மெடிக்கல் மிராக்கிள்ம்பாரு , அதுல பாரு நம்ம படங்கள்ள ஹிரோவோ இல்ல அவன சார்ந்தவங்களுக்கோ கேன்சர், மூளைல கட்டி , கிட்னில கல்லு, வயித்துல மண்ணுனு எது இருந்தாலும் வில்லன் கரீட்டா அத்ததான் சுடுவான் , சுடும் போது அதும் பிச்சுகிட்டு போயிடுமாம் , அந்த சீனுக்கு முன்னாடி சீன்லதான் டாக்டர் சொல்லுவாரு அந்த ஆபரேசனுக்கு 10 லட்சம் செலவாகும்னு , கடைசில பார்த்தா சிம்பிளா வில்லன் ஆபரேசன ஃப்ரீயாவே முடிச்சு குடுத்துருவாரு . அத விட கொடுமை இந்த 5 நிமிஷம் லேட் மேட்டரு , '' என சொல்லி முடித்து பாட்டில் தண்ணீரை குடிக்க ஆரம்பித்தான்.



'' அது என்னடா 5 நிமிஷ மேட்டரு , எதுனா கிளுகிளு விஷயமா , சொல்லுடா என் பிளாக்ல போட்டுக்கறேன் , இப்பலாம் அதுக்குதான் மவுசு '' என்று ஆர்வமாக கேட்க ,



'' தூ.... அதில்லடா , நம்ம டாக்டருங்க விசயம்தான் , நானும் பார்த்த வரைக்கும் எல்லா சினிமாலயும் அதென்னவோ ஹீரோ யாரையாவது காப்பாத்தி ஆஸ்பத்திரிக்கு கூட்டினு போனா , எல்லா டாக்டரும் சொல்லி வச்சமாதிரி சொல்ர வசனம் , சார் 5 மினிட்ஸ் லேட் ஆகிருந்தா கூட பேஸன்ட உயிரோட பார்த்திருக்க முடியாதுன்னு , அப்பறம் அந்த பேஸன்ட் கிட்டயும் அவரே ஹீரோவ அறிமுகப்படுத்துவார் , இவருதாங்க உங்கள காப்பாத்தினாரு , நீங்க நன்றி சொல்றதுனா கூட இவருக்கே சொல்லுங்கனு , இவரு சரிநான நேரத்துக்கு உங்கள இங்க கொண்டு வரலனா உங்கள உயிரோட பர்த்திருக்க முடியாதுனு பேஸன்ட பயமுருத்துவாரு , நம்ம டைரக்டருங்கல்லாம் டாக்டருங்கள ஏன் இப்படி கோமாளி மாதிரியே காட்றாங்கனு புரியல , அட டாக்டருங்கள இதோட விட்டா பராவால்ல இன்னும் நிறைய காமெடிலாம் இருக்கு , அதும் அந்த உண்மைனு ஒரு விசயமிருக்கே...'' என சொல்லி கொண்டிருக்கும் போது அவன் அலைப்பேசி மணி அடித்தது , எல்லோரும் இசையாக அழைப்பு மணி வைத்திருந்தால் இவன் ஏதோ வசனம் ( நல்லத நாலு பேருக்கு சொல்லனும்னு ..... என வி.எஸ்.ராகவன் பேசுகிறார் ) வைத்திருக்கிறான் . அலைபேசியில் பேசிவிட்டு அடுத்து என்ன சொல்ல போகிறானோ என ஆர்வமாக இருந்த என்னிடம் '' ஸாரி மச்சி , அவ பீஸாஹட்ல வெயிட்டிங்கடா , அர்ஜென்டா போகனும்டா , இந்த வீக் ஃபுல்லா டே சிப்டுடா , அடுத்த வீக் மீட் பண்ணுவோம்'' என கண்ணிமைக்கும் நேரத்தில் சொல்லிவிட்டு பல்சரை நோக்கி ஒடினான் .


அது என்ன உண்மை விசயம் , சரி அடுத்த வாரம் அலிபாபா வரட்டும் கேட்போம் என எண்ணிய படி டிவியை போட கலைஞரும் , ராமுவும் பிரிந்துவிட்டார்கள் என சன் செய்தி சொல்லிக்கொண்டிருந்தது , அப்படியே அதில் மூழ்க ஆரம்பித்தேன்.......


__________________________________________________________________________________________


அடுத்த வாரம் வருவான்............................