Monday, June 16, 2008

(19) Comments

தசாவதாரம் சமைப்பது எப்படி : சமையல் குறிப்புகள்

இன்று நமது சமையல் பகுதியில் படிக்க இருப்பது , புதிதாக வெளியாகியுள்ள தசாவதாரம் என்கிற விலையுயர்ந்த டிஷ் . இந்த பதார்த்ததோட சிறப்பு என்னவென்றால் ஒரே டிஷ்ஷில் 10 டிஷ் , உதாரணமாக ஒரே இடுகையில் 10 இட்டலிகள் போல , இந்த டிஷ் எப்படி செய்வது என்பது பற்றி பார்ப்போமா.......

பட்ஜெட் : குறைந்தது 80லிருந்து 100 கோடி வரை செலவாகலாம் , அதனால் ஆஸ்கர் ரவிச்சந்திரனைப்போன்ற இ.வாய பைனான்சியரை கவுத்து விடுவது நன்று . ( இந்த பட்ஜெட்டில் சமைப்பவருக்கு கூலி 30 கோடி!!!!! )

தேவையானவைகள் :
1. 100 கிலோ மைதா மாவு ( 10 விதமாக சமைக்க 10கிலோ வீதம்)
2.கொஞ்சம் அழகு சாதனப்பொருட்கள்
3.ஆன்மீகம்,பகுத்தறிவு,அறிவியல் மற்றும் தற்கால அரசியல் பற்றிய அறிவு அவசியம்
4.குறைந்த விலையில் கிராபிக்ஸ் செய்ய 10 பேர்
5.கதை,வசனம் எழுத அறிவியல்,நகைச்சுவை,வரலாறு கொஞ்சம் தெரிந்த 5 பேர்.( பதார்த்தம் வெளியிடுகையில் அவர்களது பெயர் எக்காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது .)
6.நாம் என்ன சொன்னலும் கேட்க ஒரு பெரிய டைரக்டரு . ( அவர் பெயர் சும்மாவவது வெளியீட்டில் தெரிவித்தல் நலம் )
அவ்ளோதான்.

செய்முறை :

முதலில் நமக்கு 10 வித பதார்த்தங்களும் என்னென்ன வடிவத்தில் வேண்டும் என்பதை தீர்மானிக்கவும் , 10 விதமும் முடிவான பின் அதற்கேற்றாற் போல நம் கதாசிரிய கண்மணிகளிடம் சொல்லி ஒரு கதை,வசனம் தயார் செய்ய சொல்லவும் ( அவர்களும் எப்படியாவது கதை போல ஒன்றை தந்து விடுவார்கள் ) , அந்த கதையை வாங்கி ஆங்காங்கே கொஞ்சம் அரசியல் தூவவும் .

இப்போது வாங்கி வைத்திருக்கும் மைதா மாவை முகத்தில் வித விதமாக பூசி அழகு பார்க்கவும் , அதில் சிறந்ததாக 10ஐ தேர்ந்தெடுத்து வைத்து கொள்ளவும் . திரைக்கதையை தயார் செய்ய பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை , ஏற்கனவே தயாரித்த கதையை பிச்சு போட்ட புரோட்டவைப் போல ஆக்கிவிட்டால் திரைக்கதை தயார் . நம்மை நாமே புகழ்ந்து ஒரு பாடல் தயாரிக்கவும் . நம்ம டைரக்டரை அந்த பாடலில் நடனமாட விடவும் கொடுத்த காசுக்கு அவர் அதுவாவது செய்யட்டும் . அது இந்த பதார்தத்தை உண்பவர் கடைசியில் நம்மை பற்றி சிலாகிக்க உதவும் . இதையெல்லாம் ஊர் ஊராக சென்று படமாக்கவும் .( 10 விதமாக மைதா மாவை முகத்தில் அப்பிக்கொள்ள மறக்க வேண்டாம் ) . அதை அப்படியே வைத்து கொள்ளவும் (குறைந்தது 6 மாதம் ).

இப்பொது உங்கள் புதிய தசாவதாரம் டிஷ் தயார் . சரி இதை இப்படியே விற்றால் ஒருவரும் வாயில் கூட வைக்கமாட்டார்கள் , அதனால் அந்த பண்டத்தை விற்க ஜப்பானிலுருந்து ஜாக்கிசனையும், மும்பையிலுருந்து அமிதாப்பையும் காசு கொடுத்து அழைத்து வரவும் ( எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, நம்ம கைக்காசா போகிறது ) , நம்மூரில் இலவசமாகவே இது போன்ற விடயங்களில் ஆர்வமுள்ள தலைவரையும் அழைத்துக்கொள்ளவும் . 5 கோடி செலவில் விழா எடுத்து பண்டத்தை வெளியிடவும் . இந்த பதார்த்தத்தை ஊரில் உள்ள எல்லா கடையிலும் விற்று விடவும் . பிறகு ஊரின் பெரிய கடையில் நம்மைப்போலவே சமைப்பவர்களை அழைத்து ( இதற்கு காசு கொடுக்க தேவையில்லை ) இந்த பண்டத்தை பறிமாறவும் , அவர்களும் கண்ணை மூடிக்கொண்டு சூப்பர் என்பர் ( எல்லாரும் நம் ஆட்கள் அல்லவா ).
இவ்வளவும் செய்தால் நம்ம தமிழ் மக்கள் ஆர்வ மிகுதியாலேயே முதல் 10 நாட்களுக்குள் பண்டத்தை வாங்கி தின்று தீர்த்து விடுவார்கள் .( நாமும் போட்ட காசை எடுத்து விடலாம் )
10 நாட்களுக்கு பிறகு நமக்கு விற்றால் என்ன விற்கவில்லையென்றால் என்ன .

இதை தின்று வாந்தி, வயிற்றுபோக்கு வந்தால் நம்மவர்கள் என்ன செய்து விடுவார்கள் ,
படித்தவர்கள் பிளாக் எழுதுவர் , படிக்காதவர் டீக்கடையில் 2 நாள் பேசுவர் . அதன் பிறகு நம் அடுத்த படைப்பு குசேலனுக்காக நாக்கை 4 இன்ச் நீட்டிக்கொண்டு அலைய ஆரம்பித்துவிடுவர் . நமக்கு ஆகிற பிஸினஸ் ஆகி கொண்டேதான் இருக்கும் .

நன்றி நேயர்களே மீண்டும் குசேலன் சமைப்பது எப்படியில் சந்திப்போமா...

___________________________________________________________________________________________

டிசுகி : இப்பதிவு தசாவதாரம் படத்தின் விமர்சனம் அல்ல .
19 Responses to "தசாவதாரம் சமைப்பது எப்படி : சமையல் குறிப்புகள்"
June 16, 2008 2:05 PM
\\அந்த பண்டத்தை விற்க ஜப்பானிலுருந்து ஜாக்கிசனையும்\\
தம்பி அது தயாரிப்பாளர் ஆசை
June 16, 2008 2:31 PM
//இதை இப்படியே விற்றால் ஒரு நாய் கூட வாய் வைக்காது//

வித்தியாசமாகவும், விவகாரமாகவும் எழுதியிருக்கிறீர்கள் அதிஷா. பாராட்டுக்கள். மேலே குறிப்பிட்டுள்ள வார்த்தைகளைத் தவிர மற்ற அனைத்து வார்த்தைகளையும் நான் ரசித்து படித்தேன். ஒரு நாய்கூட வாய் வைக்காது என்று வெளியிடுவதற்கு பதிலாக, ஒருவரும் சாப்பிட மாட்டார்கள் என்று எழுதியிருக்கலாமே...! குறையாக சொல்லவில்லை, ஆலோசனையாக சொல்கிறேன்.
June 16, 2008 9:53 PM
Thanks Athisha...!
June 16, 2008 10:10 PM
//ஜப்பானிலுருந்து ஜாக்கிசனையும்//

Hong Kong that is :)))))
rapp said :
June 17, 2008 12:25 AM
ஆஹா நிஜமாகவே நெம்ப சூப்பர். ரொம்ப வித்தியாசமான முயற்சி
//நம்மூரில் இலவசமாகவே இது போன்ற விடயங்களில் ஆர்வமுள்ள தலைவரையும் அழைத்துக்கொள்ளவும் //
பாவம் அவரென்னங்க பண்ணுவாரு, இந்த குடைச்சல் எல்லாரும் சேர்ந்துகிட்டு குடுத்தா. இப்டி கூட இருந்தே திட்டுற கூட்டத்துல இருந்து தப்பிச்சி தன்ன மதிக்கிற இந்த மாதிரி கொண்டாட்டங்களுக்கு வர்றார்.
June 17, 2008 9:40 AM
முரளிணா வாங்க....

கமலின் உந்துதல் இல்லாமல் தயாரிப்பாளர் இது போல செய்திருப்பாருனு எனக்கு தோனலை
June 17, 2008 10:19 AM
நன்றி நிருபரே
June 17, 2008 12:58 PM
மைதா மாவுல பரோட்டா போடுறது தான் கேள்வி பட்டிருக்கேன்.. கமல் இப்படி எல்லாம் உபயோகப்படுத்தி இருக்காரா ? சால்னா எல்லாம் கிடையாதா ??

Please visit

http://keysven.blogspot.com/
//நன்றி நேயர்களே மீண்டும் குசேலன் சமைப்பது எப்படியில் சந்திப்போமா..//

அய்யய்யோ!!!!!!அது வேறயா?
June 17, 2008 3:58 PM
செம காமெடியா எழுதியிருகீங்க
June 17, 2008 6:32 PM
வாங்க ராப் , வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

என்ன செய்ய தலைவருங்களுக்கு பல டென்ஷன்
இது மாதிரி விசயங்கள்தானே அவங்களுக்கு ரிலாகஷேசனே
June 17, 2008 6:36 PM
வாங்க கீவென்

;-)

______________________


வாங்க அப்துல்லா
வருகைக்கு நன்றி

______________________

பாரிஸ் திவா பாரட்டுக்கும் வருகைக்கும் நன்றி
Anonymous said :
June 17, 2008 7:59 PM
Seruppu,
June 17, 2008 8:26 PM
சூப்பர் அதிஷா !
நல்ல கற்பனை !
ம்ம் உங்களிடம் சரக்கு இருக்கு !
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்
June 17, 2008 9:09 PM
வாங்க பாஸ்கர்

நம்மகிட்ட சரக்குலாம் இல்லீங்க

டாஸ்மாக்ல மட்டும்தான்
Thiruu00 said :
June 17, 2008 10:25 PM
inta thiraipadattai kamal edukamal sharukanum amaitabh bachanum edutiruntal ungaluku rombe pidicirukkum....allatu oruttar ore naalil elai aagi adutta naalil panakkarar agindra katai endral athiradee enbiirkal...enna ulagamada itu.....
June 18, 2008 9:11 AM
\\inta thiraipadattai kamal edukamal sharukanum amaitabh bachanum edutiruntal ungaluku rombe pidicirukkum....\\

திரு
படம் யாரு எடுத்தாலும் சுவாரசியமான படமாக இருந்தால் எனக்கு நிச்சயம் பிடிக்கும்.

அடிக்கடி வாங்க
லேகா said :
June 19, 2008 7:21 PM
போலி பாசாங்கு இல்லாத விமர்சனம்...மிக்க நன்று..

பிரியமுடன்,
லேகா
http://yalisai.blogspot.com/
sharevivek said :
August 1, 2008 12:00 PM
அருமையான விமர்சனம்
புத்தி குர்மை மிகவும் அழகு
நிறைய எதிர் பார்கிறேன்
http://loosupaya.blogspot.com