தாலாட்டு பாடல்

>> 12 June 2008

ஆராராரிராராரோ ............................

ஆறு லட்சம் வண்ணக்கிளி ,

செம்பவழ தொட்டிலிலே...................

சீராளா கண்ணுறங்கு ,

பச்சை வண்ணத்தொட்டிலிலே......................

பாலகனே கண்ணுறங்கு

குறுத்து வாழை போல..................

குதித்தாடும் பாலகனே,

மாம்பழ மேனியனே....................

மயங்கி நீயும் கண்ணுறங்கு

ஆராராரிராராரோ ஆறு லட்சம் வண்ணக்கிளி

காலையில் என் தங்கையின் குழந்தையை அவள் இந்த பாடலை பாடி தூங்க செய்ய , இந்த பாடலை எங்கோ கேட்டது போல் இருந்தாலும் , அதை பற்றிய விபரம் தெரியவில்லை, தங்கையிடம் கேட்டபோது தன் பள்ளியில் படித்ததாக சொன்னாள் .

பாடலை கேட்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது, அதனால் பதிவிட்டு விட்டேன் .

எத்தனைதான் புது புது இசையும் இசைக்கருவிகளும் வந்தாலும் , தாலாட்டு பாடலுக்கு இணை எதுவுமே இல்லை.

14 கருத்துக்கள்:

ஜிம்ஷா June 12, 2008 4:00 PM  

ரொம்ப நன்னாருக்கு.

அதிஷா June 12, 2008 8:45 PM  

வருகைக்கு நன்றி ஜிம்மு , விக்னேஷ்

விஜய் June 13, 2008 9:58 AM  

பாட்டு சூப்பர். என் தங்கயும் அவள் குழந்தையை தாலாட்டு பாடி தூங்க வைப்பாள். அதெப்படி குழந்தைகள் தாய் பாடும் தாலாட்டில் தூங்குகின்றன என்பது புரியாத புதிர்.


இந்தியா தவிர மற்ற நாட்டிலெல்லாம் தாலாட்டு உண்டா. அங்குள்ள குழந்தைகளை என்ன சொல்லி தூங்க வைப்பார்கள் !!! :)

அன்புடன்,
விஜய்

முகுந்தன் June 13, 2008 10:27 AM  

ரொம்ப சரியாக சொன்னீர்கள். தாலாட்டு பாடல்களுக்கு இணை எதுவுமே இல்லை.
அதுவும் அந்த பாடலை பாடி முடித்து குழந்தை தூங்குவதை பார்க்கும் போது ஏற்படும் ஆனந்தம்... தனி சுகம்.....

பரிசல்காரன் June 14, 2008 1:12 AM  

நல்ல பாடல்.. தாலாட்டு என்றதும் எனக்கு ஞாபகத்திற்கு வருவது இளையராஜாவின் ஒரு பாடல்.. "கஸ்தூரி மானே, மானே, கண்ணீரில் நீந்தும் மீனே.."
என் பெரிய மகள் சின்னக் குழந்தையாய் இருந்தபோது இந்தப் பாடலைக் கேட்டால் உடனே தூங்கி விடுவாள்.

வல்லிசிம்ஹன் June 15, 2008 7:57 PM  

ஆறு லட்சம் வண்ணக்கிளிகளா. அற்புதமாய் இருக்கே.
இன்னும் ஏதாவது தாலாட்டு கிடைத்தால் போடுங்கப்பா.

அதிஷா June 16, 2008 11:27 AM  

//இந்தியா தவிர மற்ற நாட்டிலெல்லாம் தாலாட்டு உண்டா. அங்குள்ள குழந்தைகளை என்ன சொல்லி தூங்க வைப்பார்கள் !!! :)
//

வாங்க விஜய் , தாய்மை இருக்கும் இடங்களில் எல்லாம் கட்டாயம் தாலாட்டும்இருக்கும்

__________________________________

நிச்சயாமாக முகுந்தன் .......

அடுத்த முறை யாரேனும் தாலாட்டு பாடுகையில் கவனித்து பாருங்கள் பாடுபவர் கூட எவ்வளவு ஆனந்தமாய் பாடுகிறார் என்று

_________________________________

"கஸ்தூரி மானே, மானே, கண்ணீரில் நீந்தும் மீனே.."

வாங்க பரிசல் , தாலாட்டு பத்தி நீங்களும் ஒரு பதிவு போடுங்களேன்

__________________________________

\\
ஆறு லட்சம் வண்ணக்கிளிகளா. அற்புதமாய் இருக்கே.
இன்னும் ஏதாவது தாலாட்டு கிடைத்தால் போடுங்கப்பா.

\\

நிச்சயம் போடுறேன் வல்லி சிம்ஹன்

வருகைக்கு நன்றி

சென்ஷி June 16, 2008 10:16 PM  

தாலாட்டு பாடல் ரொம்ப நல்லாருக்குது.. :))

அதிஷா June 16, 2008 11:01 PM  

நன்றிங்க சென்ஷி

அகரம்.அமுதா June 18, 2008 9:28 PM  

மிக அருமையான தாலாட்டைத் தந்த அதிஷாவிற்கென் பாராட்டுக்கள்!

Venkat,  June 20, 2008 4:30 PM  

படிக்கும் போதே அப்படியே இளையராஜா பாடுன ஒரு Effect !!! ரொம்ப நன்றி அதிஷா...

அதிஷா June 20, 2008 11:15 PM  

நன்றி அமுதா....

___________________________________


வாங்க வெங்கட்.. வருகைக்கு நன்றி

kalpana,  August 31, 2010 1:03 PM  

வாழ்த்துக்கள்.

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP