Pages

12 June 2008

தாலாட்டு பாடல்

ஆராராரிராராரோ ............................

ஆறு லட்சம் வண்ணக்கிளி ,

செம்பவழ தொட்டிலிலே...................

சீராளா கண்ணுறங்கு ,

பச்சை வண்ணத்தொட்டிலிலே......................

பாலகனே கண்ணுறங்கு

குறுத்து வாழை போல..................

குதித்தாடும் பாலகனே,

மாம்பழ மேனியனே....................

மயங்கி நீயும் கண்ணுறங்கு

ஆராராரிராராரோ ஆறு லட்சம் வண்ணக்கிளி

காலையில் என் தங்கையின் குழந்தையை அவள் இந்த பாடலை பாடி தூங்க செய்ய , இந்த பாடலை எங்கோ கேட்டது போல் இருந்தாலும் , அதை பற்றிய விபரம் தெரியவில்லை, தங்கையிடம் கேட்டபோது தன் பள்ளியில் படித்ததாக சொன்னாள் .

பாடலை கேட்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது, அதனால் பதிவிட்டு விட்டேன் .

எத்தனைதான் புது புது இசையும் இசைக்கருவிகளும் வந்தாலும் , தாலாட்டு பாடலுக்கு இணை எதுவுமே இல்லை.