Pages

16 June 2008

தசாவதாரம் சமைப்பது எப்படி : சமையல் குறிப்புகள்

இன்று நமது சமையல் பகுதியில் படிக்க இருப்பது , புதிதாக வெளியாகியுள்ள தசாவதாரம் என்கிற விலையுயர்ந்த டிஷ் . இந்த பதார்த்ததோட சிறப்பு என்னவென்றால் ஒரே டிஷ்ஷில் 10 டிஷ் , உதாரணமாக ஒரே இடுகையில் 10 இட்டலிகள் போல , இந்த டிஷ் எப்படி செய்வது என்பது பற்றி பார்ப்போமா.......

பட்ஜெட் : குறைந்தது 80லிருந்து 100 கோடி வரை செலவாகலாம் , அதனால் ஆஸ்கர் ரவிச்சந்திரனைப்போன்ற இ.வாய பைனான்சியரை கவுத்து விடுவது நன்று . ( இந்த பட்ஜெட்டில் சமைப்பவருக்கு கூலி 30 கோடி!!!!! )

தேவையானவைகள் :
1. 100 கிலோ மைதா மாவு ( 10 விதமாக சமைக்க 10கிலோ வீதம்)
2.கொஞ்சம் அழகு சாதனப்பொருட்கள்
3.ஆன்மீகம்,பகுத்தறிவு,அறிவியல் மற்றும் தற்கால அரசியல் பற்றிய அறிவு அவசியம்
4.குறைந்த விலையில் கிராபிக்ஸ் செய்ய 10 பேர்
5.கதை,வசனம் எழுத அறிவியல்,நகைச்சுவை,வரலாறு கொஞ்சம் தெரிந்த 5 பேர்.( பதார்த்தம் வெளியிடுகையில் அவர்களது பெயர் எக்காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது .)
6.நாம் என்ன சொன்னலும் கேட்க ஒரு பெரிய டைரக்டரு . ( அவர் பெயர் சும்மாவவது வெளியீட்டில் தெரிவித்தல் நலம் )
அவ்ளோதான்.

செய்முறை :

முதலில் நமக்கு 10 வித பதார்த்தங்களும் என்னென்ன வடிவத்தில் வேண்டும் என்பதை தீர்மானிக்கவும் , 10 விதமும் முடிவான பின் அதற்கேற்றாற் போல நம் கதாசிரிய கண்மணிகளிடம் சொல்லி ஒரு கதை,வசனம் தயார் செய்ய சொல்லவும் ( அவர்களும் எப்படியாவது கதை போல ஒன்றை தந்து விடுவார்கள் ) , அந்த கதையை வாங்கி ஆங்காங்கே கொஞ்சம் அரசியல் தூவவும் .

இப்போது வாங்கி வைத்திருக்கும் மைதா மாவை முகத்தில் வித விதமாக பூசி அழகு பார்க்கவும் , அதில் சிறந்ததாக 10ஐ தேர்ந்தெடுத்து வைத்து கொள்ளவும் . திரைக்கதையை தயார் செய்ய பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை , ஏற்கனவே தயாரித்த கதையை பிச்சு போட்ட புரோட்டவைப் போல ஆக்கிவிட்டால் திரைக்கதை தயார் . நம்மை நாமே புகழ்ந்து ஒரு பாடல் தயாரிக்கவும் . நம்ம டைரக்டரை அந்த பாடலில் நடனமாட விடவும் கொடுத்த காசுக்கு அவர் அதுவாவது செய்யட்டும் . அது இந்த பதார்தத்தை உண்பவர் கடைசியில் நம்மை பற்றி சிலாகிக்க உதவும் . இதையெல்லாம் ஊர் ஊராக சென்று படமாக்கவும் .( 10 விதமாக மைதா மாவை முகத்தில் அப்பிக்கொள்ள மறக்க வேண்டாம் ) . அதை அப்படியே வைத்து கொள்ளவும் (குறைந்தது 6 மாதம் ).

இப்பொது உங்கள் புதிய தசாவதாரம் டிஷ் தயார் . சரி இதை இப்படியே விற்றால் ஒருவரும் வாயில் கூட வைக்கமாட்டார்கள் , அதனால் அந்த பண்டத்தை விற்க ஜப்பானிலுருந்து ஜாக்கிசனையும், மும்பையிலுருந்து அமிதாப்பையும் காசு கொடுத்து அழைத்து வரவும் ( எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, நம்ம கைக்காசா போகிறது ) , நம்மூரில் இலவசமாகவே இது போன்ற விடயங்களில் ஆர்வமுள்ள தலைவரையும் அழைத்துக்கொள்ளவும் . 5 கோடி செலவில் விழா எடுத்து பண்டத்தை வெளியிடவும் . இந்த பதார்த்தத்தை ஊரில் உள்ள எல்லா கடையிலும் விற்று விடவும் . பிறகு ஊரின் பெரிய கடையில் நம்மைப்போலவே சமைப்பவர்களை அழைத்து ( இதற்கு காசு கொடுக்க தேவையில்லை ) இந்த பண்டத்தை பறிமாறவும் , அவர்களும் கண்ணை மூடிக்கொண்டு சூப்பர் என்பர் ( எல்லாரும் நம் ஆட்கள் அல்லவா ).
இவ்வளவும் செய்தால் நம்ம தமிழ் மக்கள் ஆர்வ மிகுதியாலேயே முதல் 10 நாட்களுக்குள் பண்டத்தை வாங்கி தின்று தீர்த்து விடுவார்கள் .( நாமும் போட்ட காசை எடுத்து விடலாம் )
10 நாட்களுக்கு பிறகு நமக்கு விற்றால் என்ன விற்கவில்லையென்றால் என்ன .

இதை தின்று வாந்தி, வயிற்றுபோக்கு வந்தால் நம்மவர்கள் என்ன செய்து விடுவார்கள் ,
படித்தவர்கள் பிளாக் எழுதுவர் , படிக்காதவர் டீக்கடையில் 2 நாள் பேசுவர் . அதன் பிறகு நம் அடுத்த படைப்பு குசேலனுக்காக நாக்கை 4 இன்ச் நீட்டிக்கொண்டு அலைய ஆரம்பித்துவிடுவர் . நமக்கு ஆகிற பிஸினஸ் ஆகி கொண்டேதான் இருக்கும் .

நன்றி நேயர்களே மீண்டும் குசேலன் சமைப்பது எப்படியில் சந்திப்போமா...

___________________________________________________________________________________________

டிசுகி : இப்பதிவு தசாவதாரம் படத்தின் விமர்சனம் அல்ல .