Pages

03 August 2008

ஒரு பிட்டுபட விமர்சனமும் குசேலன் ஓப்பீடும்




சமீபத்தில் 2008ல் வெளியாகி சக்கை போடு போடும் ஒரு பிட்டு பட விமர்சனம் ;
ஹிரோ ஹீரோயின் இல்லாத படம் என விளம்பரப்படுத்த பட்ட பத்து பத்து படத்திற்கு சனிக்கிழமை செல்ல நேர்ந்தது , அரங்கு நிறைந்த காட்சிகளாக சென்னை தேவி தியேட்டரில் ஓடி கொண்டிருக்கும் இத்திரைப்படத்தில் தமிழக '' மல்லிகா செராவத்'' சோனா, போஸ் வெங்கட்,தலை வாசல் விஜய் , மற்றும் பல புதுமுகங்களும் நடித்துள்ள இந்த படத்தை இயக்கியிருப்பவர் சத்யம் , தயாரிப்பு இந்தியன் ட்ரீம் மேக்கர்ஸ் எனப்படும் அமெரிக்க கம்பேனி .

கூவம் ஆற்றில் சூட்கேசில் பிணமாக கிடக்கும் பிரபல டைரக்டரான தலைவாசல் விஜயிடமிருந்து படம் துவங்குகிறது , அங்கேயிருந்து அவரது கொலை குறித்த விசாரணை துவங்குகிறது , படிபடியாக விசாரணை ஒவ்வோரு கட்டத்திற்கு செல்லும் போதும் ஒரு புது முடிச்சு அவிழ்க்கப்படுகிறது .

இதில் ஒரு முரட்டுத்தனமான வக்கீல் , தலைவாசல் விஜயின் மனைவி , அவரது கள்ளக்காதலன் , தெருசண்டையாளர் , போலிஸ் என படம் பல கதாபாத்திரங்களுடன் பயணிக்கிறது . இறுதியில் கொலைக்கு காரணமானவர் கண்டுபிடிக்கப்பட்டாரா என்பதே படத்தின் முடிவு .

10-10 அமெரிக்க அதிபர் சுட்டுக்கொல்லப்பட்ட நேரம் , வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த அந்த நேரத்தையே படத்தின் முக்கிய கருவாக எடுத்துக்கொண்டு , அந்த குறிப்பிட்ட நேரத்தில் கொல்லப்படும் ஒரு கதாப்பாத்திரத்தையும் அவனை சுற்றி உள்ளவர்களை கொண்டு அவனது கொலைக்கான காரணத்தையும் அவனை கொன்ற கொலைகாரரையும் சென்றடையும் திரைக்கதையையும் எடுத்துக்கொண்ட இயக்குனருக்கு ஒரு '' ஷொட்டு '' , அதை மிக நேர்த்தியாக கொண்டு சென்று மிக புத்திசாலித்தனமாக படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சிவரை திரையில் வரும் அத்துனை பாத்திரங்களின் மீதும் ( நமக்கு அண்டா குண்டா மீதெல்லாம் ) சந்தேகம் வரவழைக்கும் காட்சி அமைப்புகள் . அதற்கேற்ற பிண்ணனி இசையும் திகிலடைய வைக்கும் கேமராவும் நம்மை அசத்துகின்றன. இந்திய திரைப்பட வரலாற்றில் இது போன்ற படங்கள் அத்தி பூத்தாற் போலவே வருகின்றன .


படத்தில் கதாநாயகன் மற்றும் கதாநாயகி என யாரும் இல்லை என்றாலும் படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதி வரை நம்மை சீட்டை விட்டு அகலவிடாமல் சூட்டை கிளப்புகிறார் '' சோனா ''.

படத்தில் அவர் வரும் காட்சிகளில் தியேட்டரே மயான அமைதிக்கு சென்று விடுகிறது . கவர்ச்சியின் எல்லை எதுவென யாருமே அவருக்கு சொல்லிதரவில்லை போலும் ஆபாசத்திற்கும் கவர்ச்சிக்கும் இடையே அவரது உடல் ஊசலாடுவது ரசிகர்களுக்கு நல்ல விருந்து . அவரும் அவரது கள்ள காதலனும் , அந்த கள்ளக்காதல சிறுவனை மயக்க சோனா எடுக்கும் முயற்சிகளும் தித்திக்கும் தீபாவளி . திரையுலக வரலாற்றில் சோனா நிச்சயம் ஒரு நாள் ஒர் உயரிய இடத்தை தக்க வைப்பார் . அவரது அபரிமித கவர்ச்சி படத்திற்கு மிகப்பெரிய ஊட்டச்சத்து .

சோனா தவிர தமிழகத்தை கலக்கிய பத்மா,லக்ஷா ,அபிநயாஸ்ரீ என பல குறைந்த பட்ச கவர்ச்சி காட்டும் நாட்டு வெடிகுண்டுகள் பல படத்திலிருந்தாலும் சோனாவின் கவர்ச்சிக்கு முன் இவர்கள் காணாமல் போகின்றனர் . சோனா எவ்வளவு கவர்ச்சி காட்டினாலும் சலிப்பு தட்டவில்லை . படத்தை பிரமாண்டமாக தயாரிக்கவில்லை எனினும் அந்த குறைகளை இந்த கவர்ச்சி குண்டுகள் ஈடு செய்கின்றன .

படத்தின் ஹைலைட்டாக நான் கருதுவது சிறுவன் மேலே நின்று மின்விசிறியை ரிப்பேர் செய்ய அவனுக்கு கீழே நாற்காலியை பிடித்தபடி நிற்கும் சோனாவின் கவர்ச்சி இளசுகளுக்கு மட்டுமல்லாது பெருசுகளுக்கும் நல்ல தீனியாக அமையலாம் .

இசை L.V.கணேசன் , மிக அற்புதமாக இசையமைத்திருக்கிறார் , பிண்ணனி இசை பட்டையை கிளப்புகிறது , அவருக்கு ஒரு சபாஷ் . இவர் பல டி.வி சீரியல்கள் மற்றும் சன் டிவியில் வரும் அசத்த போவது யாரு க்கும் இசையமைப்பவர் . அவருக்கு நல்ல எதிர்காலமுண்டு .

கலை இயக்குனருக்கு அதிக வேலை இல்லாத போதும் சிரத்தை எடுத்து செய்திருக்கிறார் .

கேமரா மிக அருமையான யாரும் எதிர்பாராத கோணங்களில் படமெடுக்கப்பட்டுள்ளது .

தியேட்டரில் பல பெண்களையும் பார்க்க முடிந்தது , அவர்களுக்காகவே '' மெட்டி ஒலி '' போஸ் மாமா என்று அன்போடு பெண்களால் அழைக்கபடும் போஸ் வெங்கட்டை நடிக்க வைத்துள்ளனர் போல அவர் மிக அழகாக இருக்கிறார் , நன்றாக நடிக்கவும் செய்கிறார் .

படத்தில் குறைகளாக பார்ப்பது , ஒலிப்பதிவு வாயசைவுக்கும் பேச்சுக்கும் நிறைய இடஙகளில் சொதப்புகிறது சமயத்தில் டப்பிங் படம் பார்க்கும் உணர்வு , சோனாவின் அதிகபட்ச கவர்ச்சி ( மிக அதிகபட்ச கவர்ச்சி முயற்சி ; )


சமயங்களில் குடும்பத்தோடு வந்தவர்களை நெளியவைக்கலாம் . இது இயக்குனரின் கன்னி முயற்சியாகையால் அவரது சிலபல குட்டி குட்டி தவறுகளை மன்னிக்கலாம் .

இப்படத்தை தனியாக பார்க்க முயற்சிக்கவும் , நன்றாக அகமகிழ்ந்து காண ஏதுவாக அமையும் . படத்திற்கு பல பெண்களும் வந்திருந்தது நம் நாட்டில் பெண்களின் ஆண்களுக்கிணையான முன்னேற்றத்தை காட்டுவதாக இருந்தது .

படத்திற்கு மதிபெண்ணும் பத்துக்கு பத்து , அருமையான கதைக்கும் பெண்களும் ரசிக்கும்படியும் படத்தை இயக்கிய இயக்குனருக்கு 5 , கதை தொய்வடையும் போதெல்லாம் தன் சதையால் தூக்கி நிறுத்திய சோனாவிற்கு 5

மொத்தத்தில் பத்து பத்து , பத்துக்கு பத்து -

10/10


இனி குசேலன் படம் குறித்த எனது பார்வை :


ஆறு கோடி குசேல ஏழைகள் மற்றும் ஒரு கோடீஸ்வர குபேர ரஜினி , குறித்த படமாகவே இது படுகிறது ,

ரஜினியை வாழவைக்கும் ஆறுகோடி லூசு தமிழர்களின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக பசுபதி அவர் படம் முழுவதும் பிச்சை எடுக்காத குறையாக அலைகிறார் .

ஆறுகோடி குசேலர்களால் உயர்ந்த குபேர ரஜினி பட்டுமெத்தையில் படுத்துக்கொண்டு தன்னை குறித்து விமர்ச்சிப்பவரை பைத்தியமாக்குகிறார் . அந்த பைத்தியத்தின் கேள்விகளுக்கு கேவலமான பதில்களை அளிக்கிறார் .

ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுண் தங்க காசு தந்த _______ (உங்களுக்கு தெரிந்த மிக மோசமான கெட்டவார்த்தையால் நிரப்பிக்கொள்ளவும் )தமிழர்களுக்கு ரஜினி என்றுமே எட்டாகனிதான் என்பதே படம் நமக்கு உணர்த்தும் செய்தி , படம் முழுவதும் விரவி கிடக்கும் ரஜினியை புகழ்ந்து தள்ளும் வசனங்கள் , கேணத்தனமாக நடந்து கொள்ளும் அழுத்தமில்லாத சற்றும் மனதில் பதியாத பசுபதியின் பாத்திரம் ( பசுபதி வெயில் பட ஞாயபகத்திலேயே இருக்கிறாரா ) அவைகளால் அந்த கிளைமாக்ஸ் காட்சி அதனாலே தானோ என்னவோ இழவு மனதில் ஒட்டவில்லை .

கேமரா,பிண்ணனி இசை,பாடல்கள் , துணை நடிகர்கள்,கலை வடிவமைப்பு என பலரும் சொதப்பியுள்ளனர் .

பத்து பத்து படத்துடன் ஒப்பிடும் போது குசேலனே எனக்கு பிட்டுபடமாக படுகிறது , பத்து பத்து படத்தில் கவர்ச்சி எந்த இடத்திலும் திணிக்கப்படவில்லை , அது கதையின் ஓட்டத்தோடு வருவதால் நமக்கு உருத்தவில்லை , குசேலன் படத்தில் நயன்தாரா , சோனா முதலான பல நடிகைகளும் கதைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாது வந்து கவர்ச்சி காட்டுகின்றனர் . இது தவிர தேவையில்லாமல் இரட்டை அர்த்த வசனங்கள் வேறு .


குசேலன் படம் 20 ஆண்டுகளுக்கு முன்னால் இதே கவிதாலாயாவால் எடுக்கப்பட்டிருந்தால் பசுபதி பாத்திரத்தில் ரஜினியும் , சூப்பர் நடிகராக சரத்பாபுவும் , எஸ்.பி.முத்துராமன் அவர்கள் இயக்கத்தில் மிகைப்படுத்தப்படாத திரைக்கதையும் , கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்களுடன் , இசை ஞானியின் இசையில் வந்திருக்கும் , நிச்சயம் வரலாற்றில் மிக முக்கிய திரைப்படமாகவும் இருந்திருக்கும் . இதை நினைத்தாலே இனிக்கிறது . ரஜினியால் அது போல இன்று நடிக்க முடியாத அளவுக்கு அவரை எது தடுக்கிறது எனத்தெரியவில்லை . ( ஒரு ரஜினி ரசிகனாக ரஜினியிடம் நான் எதிர்பார்ப்பது அந்த பழைய ரஜினியைத்தான் )

இதற்குமேலும் பத்து பத்து படத்தை குசேலனோடு ஒப்பிட்டு 10-10 படத்தை அசிங்கபடுத்த நான் விரும்பவில்லை .

குசேலனில் ,கத பறயும் போள் எனும் நல்ல ஒரு உணர்வு சார்ந்த கதையை நாறாடித்த குற்றத்துக்காக மதிப்பெண்கள் மைனஸில் .


மகா மட்டமாக படத்தை இயக்கிய பி.வாசு அவர்களுக்கு -5 ,


ஒரு நல்ல கதையை தனக்காக மாற்றியமைக்க துணை போன ரஜினிகாந்திற்கு -5



-10 / 10



நீ யார்ரா ரஜினிக்கு மார்க்கு போடணு நீங்க கேக்கறது எனக்கு புரியுது , ரஜினிய வளர்த்து விட்ட ஆறு கோடி குசேலன்கள்ள நானும் ஒருத்தன் அந்த உரிமைலதான் போட்டேன் .

பதிவை கடைசி வரை படித்த மற்றும் பாதியிலேயே கடைசி வரிக்கு வந்த அன்புள்ளங்களுக்கு நன்றி