ரஜினியை தோற்கடித்த ஜே.கே.ரித்திஷ் - நாயகன் திரைப்பட அதிரடி சரவெடி விமர்சனம்
>> 26 August 2008
நாயகன் விமர்சனம் :
பல மாதங்களுக்கு முன்பே தயாராகி , தசாவதாரம்,குசேலன்,குருவி போன்ற பெரிய நட்சத்திரங்களின் படங்களின் வருகையால் , பல மாதங்கள் நல்ல திரையரங்குகளுக்காக காத்திருந்து சென்ற வாரம் வெளியாகியிருக்கிறது நாயகன் திரைப்படம் , எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி , ஜே.கே.ரித்திஷின் சேட்டைகளை மட்டுமே கண்டு ரசிப்பதற்காக மட்டுமே அந்த திரைப்படத்திற்கு செல்ல நேரிட்டது . அது தவிர இது ஆங்கிலத்தில் வெளியான CELLULAR திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி என்று நண்பர்கள் கூறியதால் , படத்தை பார்க்க வேண்டும் என்கின்ற ஆவல் அதிகமானது .
படத்தின் ஆரம்பகாட்சி இதுவரை எந்த பெரிய நடிகருக்கும் வைத்திடாத அளவுக்கு மிக பிரமாண்டமாகவும், அதை தொடர்ந்து ஜேகே ரித்திஷை புகழ்ந்து பல வேறு வேடங்களில் ( 15 வேடங்கள் ) அவரே பாடுவது போலவும் தொடங்குகிறது , முதல் 15 நிமிடங்கள் அந்த தேவையில்லாத பாடலால் எரிச்சலூட்டினாலும் , அதற்கு பிறகு வேகமெடுக்கும் திரைக்கதையும் , அதற்கேற்ற பாத்திரங்களின் நடிப்பும் , எரிச்சலூட்டாத பிண்ணனி இசையும் , நம்மை படத்தின் இறுதிவரை அடுத்து என்ன என்கிற ஆவலுடன் கொண்டு செல்கிறது .
படத்தின் மிக முக்கிய இரு பாத்திரங்களான சக்தி( ரமணா என்னும் புதுமுகம் ) மற்றும் சந்தியா ( '' உயிர் ''சங்கீதா ) மிக அற்புதமாக நடித்துள்ளனர் . படத்தின் வில்லனாக ஆனந்தராஜ் , பல நாட்களுக்கு பிறகு சிறப்பானதொரு வேடத்தில் அசல் ஆங்கில படத்தின் வில்லனை விட ஒரு பங்கு அதிகமாகவே நடித்துள்ளார் .
படத்தில் பாடல்கள் மிகசுமார் ரகமே , திரையரங்கில் பெண்கள் கூட பாடல் காட்சிகளில் வெளியில் செல்வதை காண நேரிட்டது . இசையமைப்பாளர் பாடல்களில் கோட்டை விட்டாலும் பிண்ணனி இசையில் பிளந்து கட்டுகிறார் . படத்தின் பிண்ணனி இசை ஒரு படத்தின் பிரமாண்டத்தை காட்ட எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து செய்திருக்கிறார் , அவருக்கு பாரட்டுக்கள் .
படத்தில் தனியாக காமெடி டிராக் இல்லாத குறையை ஜே.கே.ரித்திஷ் நிவர்த்தி செய்கிறார் , படம் முழுக்க அவர் வரும் காட்சிகளில் மக்களின் சிரிப்பொலி விண்ணை பிளக்கிறது . முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு வடிவேலுவை மிஞ்சும் அளவுக்கு காமெடியில் கலக்குகிறார் . மலைக்கோட்டை படத்தில் வரும் வடிவேலுவின் சிரிப்பு போலீஸ் வேடத்திற்கே சவால் விடுகிறார் . அவர் பேசும் சீரியஸ் வசனங்களும் கூட நமக்கு வெடிச்சிரிப்பை ஏற்படுத்துகிறது .திரையுலகில் விஜயகாந்திற்கு ஒரு வாரிசு உருவாகிவிட்டது . இவருக்கு நகைச்சுவை இயல்பாக வருகிறது , இனிவரும் படங்களில் முழு நகைச்சுவையை முயற்ச்சிக்கலாம் .( படத்தில் இவர் எதற்கு நடித்தார் என யாருக்குமே புரியவில்லை , படத்தில் இவர் வரும் காட்சிகளை நீக்கி விட்டு பார்த்தாலும் , படம் முழுமையாக இருக்கும் )
இவர்களைத்தவிர ராதாரவி,ஸ்ரீமன்,பாண்டியராஜன்,கீர்த்தி சாவ்லா என பலரும் தத்தமது வேடங்களை பாத்திரத்திற்கேற்றவாரு செய்துள்ளனர் .
எடிட்டிங் மற்றும் கேமரா பல இடங்களில் அசத்துகின்றன , காட்சிக்கேற்றாற்ப் போல நிறங்களை மிகச்சரியாக உபயோகித்த கேமராமேனுக்கு ஷோட்டு . இயக்குனர் சரவணசக்தியின் இயக்கம் மிக அருமை .
இந்த படத்தில் விஜய் நடித்திருந்தால் நிச்சயம் அவருக்கு இன்னொரு கில்லியாக அமைந்திருக்கும் .
படத்தின் பாடல்கள் மட்டுமே மைனஸ் , மற்ற அனைத்தும் பிளஸ். படத்தில் தேவையில்லாத கவர்ச்சி மற்றும் வன்முறையில்லை என்பது மிகவும் பாராட்டுக்குரியது . லோ பட்ஜட் படங்களுக்கே உரித்தான கவர்ச்சி காட்சிகள் இல்லாதது மகிழ்ச்சியை தருகிறது . இது போல இன்னும் பல லோ பட்ஜட் படங்கள் வந்தால் முண்ணனி ஹீரோக்களின் டவுசர்கள் கழண்டுவிடும் .
இப்படம் நம் எதிர்பார்ப்பிற்கும் மேல் இரண்டரை மணிநேர சுவாரசியத்தை தருகிறது . படம் முடிந்து வெளியே வருகையில் நிச்சயம் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி அனைவர் மனதிலும் . பி & சி சென்டர் ரசிகர்களுக்காக சமீபத்தில் வெளியான மிகச்சிறந்த படம் இதுதான்.
மொத்தத்தில் நாயகன் - பேரை காப்பாற்றிவிட்டான்
இந்த படத்திற்கு எனது மார்க் 41/100 ( விகடன் மார்க்கோடு ஒத்து போனால் மகிழ்ச்சிதான் )
_____________________________________________________________________________________
சரி இதில் ரித்திஷ் எங்கே ரஜினியை தோற்கடித்தார் என நீங்கள் கேட்பது புரிகிறது , பாத்திரதேர்வில் வெற்றியடைந்திருக்கிறார் ரித்திஷ் என்பதே உண்மை , நாயகன் படத்தின் மிக முக்கிய பாத்திரமான சக்தியை தான் எடுத்துக்கொண்டு நடிக்காமல் தனக்கேற்ற ஒரு பாத்திரத்தையும் , தனக்காக கதையை கடித்து குதறாமல் அப்படியே படத்தின் கதையை படமாக்க உதவியமையாலுமே , அவர் ரஜினியை மிஞ்சுகிறார்.
அது தவிர கதை தேர்வு , என்னதான் தான் பணம் கொடுத்து நடித்தாலும் ( 10 கோடியாம் ) ஒரு நல்ல கதையை தேர்வு செய்ததில் ரித்திஷ் முன்னோக்கியே இருக்கிறார் . படத்திற்கு பணம் போட்டாலும் பெரும்பாலான காட்சிகளை ஆக்கிரமிக்காமல் இருந்தமையிலும் ரஜினியை வெல்கிறார் .
இது போல பல காரணங்களால் ரஜினி குசேலனில் செய்த பல தவறுகளை , தனது இரண்டாம் படத்திலேயே புரிந்து கொண்டிருக்கிறார் , இந்த விசயத்தில் ஜே.கே.ஆர் ரஜினியை முந்தி விட்டார் என்பது உண்மை .
___________________________________________________________________________________
ஒரு குட்டி பொதுநல அறிவிப்பு சென்னை நேயர்களுக்கு மட்டும் :

சென்னையில் இந்த வார இறுதியில் ஆகஸ்ட் 31ஆம் தேதி GIVE LIFE என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மாராத்தான் ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது . இந்த மாரத்தான் ஓட்டத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் , அதில் கலந்து கொள்ள ரூ.100 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது , மாணவர்களுக்கு ரூ.50 , இந்த தொகை ஆதரவற்ற அநாதை குழந்தைகளுக்கு செல்வதால் அனைத்து சென்னை மக்களும் இந்த மாரத்தான் ஓட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுகிறேன் . இதில் கலந்து கொள்ள நாம் நேரிலும் ஆன்லைனிலும் பதிவு செய்யலாம் .
அது பற்றிய விபரங்கள் மற்றும் கலந்து கொள்ள பதிவு செய்ய இங்கே செல்லவும்
நம்மாள் முடிந்த உதவிகளையும் அந்த நிறுவனத்தின் 13600 குழந்தைகளுக்கு வழங்கலாம் என அந்த நிறுவனத்தின் வலைப்பக்கத்தில் கூறப்பட்டுள்ளது .
நான் இந்த ஓட்டத்தில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளேன் , நீங்களும் ஓட இருந்தால் சனிக்கிழமை என்னிடம் தெரிவிக்கவும் .
சேர்ந்து ஓடலாம் வாங்க ஒரு நல்ல காரியத்துக்கு
____________________________________________________________________________________


29 கருத்துக்கள்:
நாயகன் பட விமர்சனம் அருமை. JK riteesh ஐ குறை சொல்லும் போக்கை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
is it better than kuruvi, kuselan & satyam?
மலைக்கோட்டை => மருதமலை
உதயம் தியேட்டர் வாசல் பேனர்களிலும் எல்லா ஹீரோக்களையும் மிஞ்சி விட்டார்
அடுத்த முதல்வர்னா சும்மாவா???
நர்சிம்
:-)))...
என்னதிது சின்னபுள்ள தனமா இருக்கு ராஸ்கல்ஸ்...
பாட்டு நல்ல இல்லையா...
நிலா நிலா ஓடி வா பாடல்.. இந்த வருசத்து பிளாக் பஸ்டர் மாமே
தோழர்!
தாங்களும் இந்த திரைக்காவியத்தை கண்டு ரசித்தீர்களா? What a coincidence?
//லக்கிலுக் said...
தோழர்!
தாங்களும் இந்த திரைக்காவியத்தை கண்டு ரசித்தீர்களா? What a coincidence?//
உங்க ரெண்டு பேருக்கும் இதே கூத்தா போச்சுய்யா...
//உங்க ரெண்டு பேருக்கும் இதே கூத்தா போச்சுய்யா...//
எதுக்கு தோழர் பரிசல் இப்படி டென்ஷன் ஆகிறார்? :-(
தோழர் அதிஷா படம் பார்த்ததுக்காகவா?
படம் பாதத்துக்கு இல்ல.....உங்க கூட சேந்து அவரும் பாக்க முடியாம போனதுக்கு.
மீ த first & 10th !!
\\
உங்க ரெண்டு பேருக்கும் இதே கூத்தா போச்சுய்யா...
\\
பரிசல் அண்ணாச்சி
ஒலகமே ஒரு கூத்து மேட அது நாமல்லாம் தினத்திக்கும் வேஷம் கட்றவங்கோ
\\
எதுக்கு தோழர் பரிசல் இப்படி டென்ஷன் ஆகிறார்? :-( \\
லக்கி நானும் நீங்களும் இணைந்து படம் பார்த்ததாக அவர் எண்ணுகிறார்
நான் அமர்ந்திருந்தது E-18ல்
நீங்கள் D-18ல்
வாட்ட கோ இன்சிடன்ஸ்
\\
நாயகன் பட விமர்சனம் அருமை. JK riteesh ஐ குறை சொல்லும் போக்கை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
\\\
ரஜினி கொஞ்ச நாள் லீவு அதான்
முரளி அண்ணா
குருவி,குசேலடு,சத்யத்தோடு ஒப்பிட்டால் நாயகன் படத்திற்குத்தான் அசிங்கம்
தவறை சுட்டிகாட்டியமைக்கு நன்றி சரவணக்குமரன்
அது என்ன ஜே.கே.ரித்திஷ்(நாதாரி பெயர பாரு),
ஒ! இந்த டுத் பிரஷ், பெயின்ட் பிரஷ் மாதிரி ஜே.கே.ரித்திஷா
முதலில் தமிழ் ஹிரோக்கு தமிழ்ல பெயர் வைக்கனும்
இஷ்டத்துக்கு பெயர் வச்சிட்டு வந்திடவேண்டியது
இந்த பின்னுட்டத்தை பாரத்திட்டு பல பேர்க்கு
உனக்கு ஏன் இந்த வேலை என்று கேட்க தோனலாம், அப்படி கேட்க நினைக்கும் அனைவருக்கும் அதே கேள்வி
Why you are unneccesary pulling rajini's name? Don't go for cheap publicity!!.Your comparison between kuselan (rajini) and nayagan (rithish) is ridiculus.Again, don't try to get CHEAP publicity.
:)
//தனக்காக கதையை கடித்து குதறாமல் அப்படியே படத்தின் கதையை படமாக்க உதவியமையாலுமே , அவர் ரஜினியை மிஞ்சுகிறார்.
//படத்திற்கு பணம் போட்டாலும் பெரும்பாலான காட்சிகளை ஆக்கிரமிக்காமல் இருந்தமையிலும் ரஜினியை வெல்கிறார்
தன் முகம் திரையெங்கும், படம் முழுவதும் தெரிய வேண்டுமென்று நடித்த கமலஹாசனைப் பற்றி உங்களால் சொல்ல முடியவில்லையா?
//தன் முகம் திரையெங்கும், படம் முழுவதும் தெரிய வேண்டுமென்று நடித்த கமலஹாசனைப் பற்றி உங்களால் சொல்ல முடியவில்லையா?//
திரையெங்கும் கமலின் முகம் தெரிந்ததால் தசாவதாரம் ஹிட் ஆனது. இங்கு பேசிக்கொண்டிருப்பது ரஜினியின் இடையூறால் குசேலன் படுதோல்வி அடைந்ததை பற்றி.
\\
தன் முகம் திரையெங்கும், படம் முழுவதும் தெரிய வேண்டுமென்று நடித்த கமலஹாசனைப் பற்றி உங்களால் சொல்ல முடியவில்லையா?
\\
தன் முகம் தெரியவேண்டுமென்பதற்காக அவரொன்றும் படத்தின் கதையை நாசமாக்க வில்லையே
//திரையெங்கும் கமலின் முகம் தெரிந்ததால் தசாவதாரம் ஹிட் ஆனது. //
Dasavatharam hit-aa?
Super.
Adhukku munnadi vandha padathila ellam kamal kundiyayaa kaamichaan? mugaththa kaamikkama?
@ அதிஷா
//லக்கி நானும் நீங்களும் இணைந்து படம் பார்த்ததாக அவர் எண்ணுகிறார்
நான் அமர்ந்திருந்தது E-18ல்
நீங்கள் D-18ல்
வாட்ட கோ இன்சிடன்ஸ்//
இதத்தான் வெரிகுட்டுன்னு சொல்லுவான் வெள்ளைக்காரன்!
பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சுன்னு சொல்லுவாரு தோழர் லக்கி!
அண்னன் படத்துல அண்ணன் தான் முக்கியம். கதை,திரைக்கடை எல்லாம் எவனுக்கு வேண்டும்?/
:)
//அதை தொடர்ந்து ஜேகே ரித்திஷை புகழ்ந்து பல வேறு வேடங்களில் ( 15 வேடங்கள் ) அவரே பாடுவது போலவும் தொடங்குகிறது//
:-))))))))))))))))))))
இன்னும் கொஞ்சம் 'தலை'யை பற்றி புகழ்ந்து எழுதியிருக்கலாம்
:(
அகில உலக ரிதிஷ் ரசிகர் மன்றம்
மங்களூர் கிளை
ஜே கே ரித்திஷ் இன் நாயகன் பட 200 அவது நாள் விழாவில் கமல் பேச்சு
ம்ம்ம் வெல் தமிழ் சினிமாவில் புதியவர்கள் வருவதற்கான காரண காரியங்கள் எபோதுமே உயிர்ப்புடன் இருப்பதற்கு இவ்விழா ஒரு சான்று... இந்த திரைப்பட நாயகனின் நாயகன் பற்றி பேசுவதாயின், வெல் அவர்க்கு நடிப்பு இலகுவாக வருகிறது, ஏன், தமிழ் சினிமாவில் நடிப்பும் அதன் தரமும் கூட சற்று இலகுவாகி வருகின்றதென்று சொல்வேன், அதற்கு காரணம், நாம் நமது வேர்களை மறந்து கிளைகளை பிடித்து தொங்குவது தான். அதை விட்டு விட்டால் கீழே விழுந்து விடுவோம் என்ற பயம் எனக்கு இல்லை என்பது, இன்று வரை தொங்கி கொண்டிருப்பவர்களுக்கு நன்றாக தெரியும், ஆனால், அவர்களுக்கு தெரியாதது, அவர்களின் வால் நுனியை பிடித்து தான் நான் கீழே இறங்கினேன் என்பது. தமிழ் சினிமாவில், வால்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பதைத்தான் அப்படி சொன்னேன். இங்கே பலரும், என்னவோ ஜே கே ரிதீச்திற்கு முன்பாகவே பிறந்தவர்கள் போல பேசியது எனக்கு வியப்பாக உள்ளது. எது எப்படி இருந்தாலும், தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு ஆரோகியமான பங்களிப்பு தர ரிதீஷை வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி.
Post a Comment