சில்க்.......சில்க்......சில்க்............சில்க் ஸ்மிதா...!!!

>> 25 September 2008





1980களில் தமிழ்திரையுலகின் எல்லா திரைப்படங்களிலும் ஒரு காட்சியிலாவது சில்க் ஸ்மிதா இல்லாமல் இருந்ததில்லை , அவரது ஒரு பாடல் நடனமாவது எல்லா படங்களிலும் இருக்கும் , இன்று 35 வயதை கடந்த பலரது கனவுகன்னியாய் நிச்சயம் சில்க் ஸ்மிதா இருந்திருப்பார் , இன்றைய தலைமுறைக்கு சில்க்கின் அருமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.




சில்க்கின் அபார நடனத்திறமையும் , கண்களின் வசீகரமும் தமிழ்திரையுலகம் மட்டுமின்றி மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னட பட உலகிலும் ஒரு அழியாத சுவடை விட்டு சென்றுள்ளதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது , சில்க்கை பற்றி வீட்டில் பேசத்தயங்கும் இன்றைய குடும்பஸ்தர்கள் பலரது மனிதிலும் இன்றும் சில்க் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்.




1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் 23 ஆம் தேதி தமிழகத்தின் பல மத்திய வயதினருக்கும் அதிர்ச்சியளித்த தினம் , அடுத்த நாள் காலை செய்தித்தாளை பார்த்தவர்கள் பலருக்கும் மீளாத்துயரம் மனதில் குடிகொண்ட நாள் , தமிழ் திரையுலகின் பலரது உடல் தேவைகளுக்கும் பல முறை உதவியாய் இருந்து தன் வாழ்வைத்தொலைத்து , முதுமை குடிகொண்டு யாருமே கவனிக்கப்படா ஒரு சூழ்நிலை உருவாகும் தருவாயில் யாருக்கும் தெரியாமல் தற்கொலை செய்து கொண்டு இறைவனடி சேர்ந்தார் சில்க் . 90களின் தொடக்கத்தில் டிஸ்கோ சாந்தி மற்றும் சில கவர்ச்சி நடிகைகளின் வருகையும் அதனால் ஏற்பட்ட புகழின் வீழ்ச்சியும் சில்க்கை அவரது கடைசி காலங்களில் பெரிதும் பாதித்திருந்தது .




அவரது சாவிற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும் , இன்று வரை எனக்கு தெரிந்து அது நிராகரிப்பின் வலியாக மட்டுமே இருந்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம் , புகழுடன் வாழ்ந்த பல நடிகைகளும் தங்கள் முதுமையில் சுயமிழந்து புகழிழந்து சுற்றம் இன்றி , ஆதரவு தர யாருமின்றி தன்னை வாழ்த்திய பலராலும் தூற்றப்படும் கொடுமை திரையுலகிற்கே உரித்தானது .




திரையுலகில் இன்றும் ஒரு பெண்ணை போதைப்பொருளாக பார்க்கும் வழக்கம் இருந்துகொண்டுதான் இருக்கிறது , திரையுலம் போன்ற மீடியாக்கள் மட்டுமல்ல எந்த துறையாக இருந்தாலும் ஒருபெண் இது போன்ற இன்னல்களை அன்றாடம் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறாள் , இன்றைய சமூகம் பெண்ணை எந்த அளவில் வைத்திருக்கிறது என்பதற்கு சில்க்கின் வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம் .


அவரைக்குறித்து ஆயிரமாயிரம் கதைகளும் , கிசுகிசுக்களும் வந்தாலும் எதையும் மறுக்காமல் எதற்கும் கவலையின்றி , பல இன்னல்களுக்கும் நடுவே வாழ்ந்து மறைந்தவர் சில்க் .


சில்க் குறித்தும் அவரது இறப்பை நினைவு கூறும் இப்பதிவு பலருக்கும் நகைப்பைத்தரலாம் . சில்க் மட்டுமல்லாது எல்லா நடிகைகளையும் விபச்சாரியாக பார்க்க பழக்கிய சமூகம் நிச்சயம் நகைப்பைத்தருவதில் ஆச்சர்யமில்லை .


காலத்தால் மறுக்கப்பட்டு மறக்கப்பட்ட பல நூறு நடிகைகளில் என்றும் நம் உள்ளத்தில் நீங்க இடம் பிடித்த சில்க் அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் சில ..........


* சில்க் ஸ்மிதா ,1960ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி ஆந்திர மாநிலம் பெலுருவில் வருமையின் பிடியிலிருந்த ஒரு ஏழையின் குடும்பத்தில் முதல் பெண்ணாய் பிறந்தார்.


*அவரது இயற்பெயர் விஜயவாடா விஜயலட்சுமி


* அவர் தமிழில் வண்டிச்சக்கரம் கவர்ச்சி நடிகையாய் அறிமுகமானார் .


*200 தமிழ் படங்களுக்கும் மேல் நடித்து புகழ்பெற்றவர்.


*அவரது திரைப்படங்களில் மூன்றுமுகம் , மூன்றாம் பிறை, அலைகள் ஓய்வதில்லை ,போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கது .


* அவர் நடித்த லயனம் ( மலையாளம் ) திரைப்படம் , இன்றைய ஷகிலா திரைப்படங்களின் முன்னோடி எனக்கூறலாம் , அதுவே அவ்வகையில் வந்த முதல் திரைப்படமும் ஆகும்.


*ஒரு காலகட்டத்தில் பெரிய நடிகர்களான ரஜினி மற்றும் கமல் படங்களில் கூட சில்க்கின் ஒரு பாடலாவது இணைத்தால்தான் படத்தை வாங்குவோம் என விநியோகஸ்தர்கள் நிபந்தனை விதிக்கும் அளவுக்கு புகழ் பெற்றிருந்தார் .


*ஒரு கவர்ச்சி நடிகையாக மட்டுமின்றி பல நல்ல குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தன்னால் நடிக்கவும் முடியும் என்று நிரூபித்தவர் , சில்க் ஸ்மிதா.


* சில்க் நடித்த படங்களில் அவருக்கு பிண்ணனி குரல் கொடுத்தவர் ஹேமா மாலினி என்னும் டப்பிங் கலைஞர் , அந்த குரல் சாதாரணமாக மறக்கக்கூடியதா!! என்ன...


*சமீபத்தில் அவரது கடைசி திரைப்படத்தை இயக்கிய திருப்பதிராஜா என்னும் இயக்குனர் சில்க் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் , அவரது புத்தகத்தில் இது குறித்து கூறுவதாகவும் அந்த பேட்டியில் கூறியிருந்தார் .


*தனது திரையுல ஆரம்ப காலங்களில் பலராலும் சக திரைப்பட நண்பர்களாலும் பல விதங்களிலும் அவமானங்களை அனுபவித்திருந்தாலும் தான் வளர்ந்து நல்ல நிலையில் இருக்கையில் அதை மறந்து பல உதவிகளை செய்தவர்.


*பல ஆண்டுகளுக்கு முன் பொள்ளாச்சியில் நடந்த ஒரு படப்பிடிப்பில் அவர் கடித்து போட்ட ஆப்பிளை விளையாட்டாக ஒரு உதவி இயக்குனர் ஏலமிட அது 15 வருடங்களுக்கு முன்னாலேயே ஒரு லட்ச ரூபாய்க்கு விற்றதாம்.


*கடைசியாக நடித்த திரைப்படம் தங்கத்தாமரை


*அவர் நடித்து கடைசியாக வெளிவந்த சுபாஸ் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் தோன்றுவார் , அப்பாடலின் கடைசியில் அவர் ஒரு தீ போன்ற ஒரு இடத்திற்குள் நுழைவதாய் காட்சியமைந்தது வருத்தமான உண்மை . அவர் இறக்குமுன் நடித்திருந்த காட்சி அது என்பது மேலும் வருத்தமளிக்கிறது .


அவருக்கு அதிஷா மற்றும் அனைத்து வலையுல நண்பர்கள் சார்பாக கண்ணீர் அஞ்சலிகள்.



_____________________________________________________________________________________


சில்க்ஸ்மிதாவின் 12வது நினைவு தினத்தில்( 23ஆம் தியதி ) வெளியிட நினைத்திருந்த பதிவு சில காரணங்களால் இன்று வெளியிடப்பட்டுள்ளது .



____________________________________________________________________________________

26 கருத்துக்கள்:

அவனும் அவளும் September 25, 2008 4:37 PM  

சில்க் படம் போடாம அவர குறித்த பதிவா ? ஒரு படம் உங்களோட கட்டுரைக்கு உறுதுணையா இருந்து இருக்கும். இல்லாட்டி சில்க் கண்ணயாவது போடுங்க.

////// தமிழ் திரையுலகின் பலரது உடல் தேவைகளுக்கும் பல முறை உதவியாய் இருந்து ///////

எப்படி தெரியும் உங்களுக்கு ?

முரளிகண்ணன் September 25, 2008 4:43 PM  

good remembarance. may her soul rest on peace

பரிசல்காரன் September 25, 2008 4:45 PM  

:-(

விஜயலட்சுமி எனும் மனுஷிக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களும், நினைவில் வைத்திருந்து பகிர்ந்து கொண்ட உங்களுக்கு என் நன்றியும்!

Thooya September 25, 2008 4:55 PM  
This post has been removed by the author.
அதிஷா September 25, 2008 5:01 PM  

@அவனும் அவளும்

எனக்கு மட்டுமல்ல இது அனைவரும் அறிந்த ஒன்றுதான் இதை நான் மட்டும் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கவில்லை

கட்டாயம் ஒரு படத்தையும் இணைக்கிறேன் தங்கள் ஆலோசனைக்கு நன்றி

அதிஷா September 25, 2008 5:02 PM  

தூயா உங்கள் பின்னூட்டம் புரியவில்லை தயவு செய்து விளக்கவும்

Ram September 25, 2008 5:07 PM  

Silk Smitha was famous in Hindi & other languages too!

I sort of like Jayamalini of Jaganmohini (which I watched in Telugu for the first time).

வெண்பூ September 25, 2008 5:15 PM  

தமிழ் சினிமா உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய அவருக்கு ஒரு நல்ல அஞ்சலி இந்த பதிவு...

***

"அதிஷா ஆன்லைன்.காம்" நீங்களும் புதுவீட்டுக்கு மாறியாச்சா? வாழ்த்துக்கள்.

Thooya September 25, 2008 5:49 PM  

நான் தான் தவறாக புரிந்துவிட்டேன். :) குளப்பத்திக்கு மன்னிக்கவும்.. :)

அவனும் அவளும் September 25, 2008 6:58 PM  

///////////// எனக்கு மட்டுமல்ல இது அனைவரும் அறிந்த ஒன்றுதான் இதை நான் மட்டும் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கவில்லை ///////////////

எனக்கு தெரியாதுங்கோ ! அதுனால தான் கேட்டேன்.

படம் போட்டதுக்கு நன்றி.

புது வெப்சைட் டிரீட் கிடையாதா ?

Ad எதுவும் சேக்கலையா ?

Logan September 25, 2008 9:14 PM  

In 1996 when i jonined first year engineering, i can still remember during the ragging the whole class were stand silent for few minutes for her death in front of seniors...

வால்பையன் September 25, 2008 10:40 PM  

/./இன்று 35 வயதை கடந்த பலரது கனவுகன்னியாய் நிச்சயம் சில்க் ஸ்மிதா இருந்திருப்பார் ,//

கண்டிப்பாக, கவர்ச்சியில் மட்டுமில்லை குணச்சித்திரத்திலும் அவர் மனதை கவர்ந்தவர்

வால்பையன் September 25, 2008 10:42 PM  

//90களின் தொடக்கத்தில் டிஸ்கோ சாந்தி மற்றும் சில கவர்ச்சி நடிகைகளின் வருகையும் அதனால் ஏற்பட்ட புகழின் வீழ்ச்சியும் சில்க்கை அவரது கடைசி காலங்களில் பெரிதும் பாதித்திருந்தது .//

இல்லை நண்பா, அவரது இடத்தை யாராலும் தொடமுடியவில்லை,
ஏற்கனவே சொன்னது தான் காரணம், அவர் குணசித்திரத்திலும் வெளுத்து வாங்கினார்

வால்பையன் September 25, 2008 10:43 PM  

//இன்று வரை எனக்கு தெரிந்து அது நிராகரிப்பின் வலியாக மட்டுமே இருந்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம் , //

உண்மைதான் நண்பா,
குற்றங்களின் காரணம் கூட நிராகரிப்பு தான் என்று ஒரு பெரிய எழுத்தாளர் சொல்லியிருக்கிறார்

வால்பையன் September 25, 2008 10:53 PM  

பல செய்திகளையும் தொகுத்து வழங்கியது நன்றாக இருந்தது

சுபாஷ் September 26, 2008 12:03 AM  

//அவருக்கு அதிஷா மற்றும் அனைத்து வலையுல நண்பர்கள் சார்பாக கண்ணீர் அஞ்சலிகள்.//

சரியாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
ம்ம்ம் 12 வருஷமாகியுமா...

எனது அஞ்சலிகளும் அன்னாருக்கு உரித்தாகட்டும்.

வடகரை வேலன் September 26, 2008 1:31 AM  

அதிஷா,

அடுத்த வாரிசு படத்தில் பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம் இல்லை - ன்னு ஒரு பாட்டு. ரஜினியுடன் டூயட், கிடைத்தால் பாருங்கள். எந்த உடைக்கும் பொருந்தும் உடல்வாகு அவருக்கு.

அவரது மரணம் ஒரு சோகமே.

SurveySan September 26, 2008 10:37 AM  

//சில்க்கின் அபார நடனத்திறமையும் , //


அப்படியா?

King... September 26, 2008 11:48 AM  

மறக்க இயலாத நடிகை அவர்... வரிவான பதிவுக்கு நன்றி நேரமின்மையால் சிறிதாக ஒரு குறிப்பு அவர் இறந்த நாளில் எழுதியிருந்தேன்...

லக்கிலுக் September 26, 2008 11:48 AM  

தோழர் சில்க்கை நினைவு கூர்ந்ததற்கு நன்றி அதிஷா!

narsim September 26, 2008 12:19 PM  

உண்மை அதிஷா.. நல்ல பதிவு..


நர்சிம்

narsim September 26, 2008 12:21 PM  

//அது நிராகரிப்பின் வலியாக மட்டுமே இருந்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம் //

உண்மை அதிஷா.. நல்ல பதிவு..


நர்சிம்

கோவி.கண்ணன் September 26, 2008 2:15 PM  

கிட்டதட்ட 15 ஆண்டுகள் கவர்ச்சிப் புயலாக இருந்த சில்கின் இடத்தை அதன் பிறகு வந்த எந்த கவர்ச்சி நடிகைகளாலும் நிரப்ப முடியவில்லை. காரணம் கதை நாயகிகளே அதையும் செய்துவிடுவதால் கவர்ச்சி நடிகைக்களுக்கான வாய்ப்பு ஒரே ஒரு குத்துப் பாட்டு என்று அளவில் முடிந்துவிடுகிறது.

சில்க் படம் நிறைய பார்த்திருக்கிறேன். போலிஸ் போலிஸ் +2 படிக்கும் போது பார்த்தது.

"கேப்டன் மாமா சிலுக்கு மாமி.." என்ற பாடலை மனோரமா மற்றும் சில்க் முதலிரவு தம்பதிகளாக மாறுவேசத்தில் பாடுவார்கள்.

நீலமான நினைவுகள் !

LOSHAN September 26, 2008 3:01 PM  

//அது நிராகரிப்பின் வலியாக மட்டுமே இருந்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம் //

அச்சொட்டான வரிகள்..

சில்க் தோன்றிய,நடித்த,நடனமாடிய பல திரைப்படங்கள் வேன்றதென்றால், அதில் ஒரு பங்கு சில்க்குக்கும் உண்டு..

சில்க் கதாநாயகியாக நடித்த பல திரைப்படங்களைப் பற்றியும் சொல்லி இருக்கலாம்..

அவசரப் போலீஸ் (பாகியராஜுடன்), சூரக்கோட்டை சிங்கக்குட்டி,தாய் வீடு,கோழி கூவுது,விஜயகாந்துடன் ஒரு படம்.. இன்னும் பல..

♠ யெஸ்.பாலபாரதி ♠ September 26, 2008 3:37 PM  

http://urpudathathu.blogspot.com/2005/03/blog-post_17.html

இது நாராயணன் எழுதிய பதிவின் சுட்டி. எனக்கும் கூட சில்க்ஸ்மீதாவை மிகவும் பிடிக்கும்.

நாலு பதிவில் கூட எழுதி இருந்தேன். http://balabharathi.blogspot.com/2006/03/blog-post_06.html

நல்ல மனுசியை இழந்து இத்தனை வருடங்களா..? :(

அருண்மொழிவர்மன் September 28, 2008 5:44 AM  

நீங்கள் சொன்ன அந்த பாடல் (சுபாஷ் திரைப்படத்தில்) ஏ சலோமா சலோ... அப்படத்தில் அவர் நெருப்பிலிருந்து தொன்றி நெருப்புடனே கலப்பதாக அமைந்திருக்கும். பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார் சில்க்கை கதா நாயகியாக வைத்து (நாயகன் சரத் பாபு) அன்று பெய்த மழையில் என்று ஒரு திரப்படத்தையும் இயக்கினார்

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP