Pages

15 October 2008

பரிசல்காரனுக்கு வாழ்த்துக்கள்...!!



நண்பர் பரிசல்காரன் அவர்களைப்பற்றி அனைவருக்கும் தெரியும் .. அவர் ஒரு மிகச்சிறந்த பதிவர் ஆவார் . நம் பதிவுலகில் தவிர்க்க இயலாத சிலரில் அவரும் ஒருவராகவும் மிகக்குறைந்த நாட்களில் பதிவுலகில் தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கியவரும் ஆவார் . இவையனைத்தையும் மீறி அவர் எனது மிகச்சிறந்த நண்பர்களில் ஒருவர் .


இந்த வாரத்திலிருந்து ஜீனியர் விகடனில் இருந்து அவரது ஒரு குட்டித்தொடர் வருவதாக முன்பே என்னிடம் கூறியிருந்தார் . அப்போதே என் எழுத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துவிட்டதை போலவும் , எனது படைப்பு விகடனில் வெளியானது போலவும் உணர்ந்தேன் .


இதோ இந்த வாரத்திலிருந்து அவரது படைப்புக்கள் வர துவங்கிவிட்டன . அதை பதிவர்களுக்கு அறிவிப்பதில் எனக்கு பெரு மகிழ்ச்சியுண்டு .


இன்றைய விகடனில் வெளியாகியுள்ள சிந்தனை சின்னசாமி என்கிற கட்டுரை அது ( அக்கட்டுரையில் அவரது பெயர் வெளியாக வில்லை அதனால் விகடனுக்கு பதிவர்கள் சார்பாக ஒரு குட்டு )


இது அவரைப் போன்ற ஒரு நல்ல எழுத்தாளருக்கு தாமதமாய் கிடைத்த வாய்ப்பாகவே நான் கருதுகிறேன் ,


திரு.பரிசல்க்காரன் அவர்களுக்கு தமிழ்வலையுல நண்பர்கள் சார்பாக என் வாழ்த்துக்கள் .


( இதை சிலர் இதெல்லாம் ஒரு விசயம் இதுக்கு ஒரு பதிவு என எண்ணக்கூடும் என்னைப் போன்ற வெகுஜன ஊடகங்களில் நம் பெயர் மட்டுமாவது வராத என காத்திருக்கும் பதிவர்களுக்கு இது நிச்சயம் பெரிய விடயம்தான் அதனாலேயே இந்த பதிவு )


அந்த படைப்பை இங்கே தர இயலவில்லை.. கிடைக்கும் போது அதையும் இணைக்க விழைகிறேன் .


( பரிசல் ட்ரீட் எப்போ ? )