ஜோதி தியேட்டரும் சில பிரபலங்களும் டவுசர் பாண்டியும்....

>> 13 October 2008




சென்னைக்கு நம்ம டவுசர் பாண்டி வந்த புதுசு , அவன் ஊரு நாக்கமுக்காம்பாளையம் , சென்னைல செத்த காலேஜ,உயிர் காலேஜ் , எம்ஜிஆர் சமாதி , அண்ணா சமாதிலாம் பாத்தவன் , ஒரு நா உலக புகழ்பெற்ற ஜோதி தியேட்டரு பத்தி கேள்விபட்டான் , அங்க '' வாடா மன்மதானு'' ஒரு படம் , போயி டக்கரா ஒரு டமால் டுமீல் படம் பாக்கலாம்னு முடிவு பண்ணி , கிளம்பினான் .

ஆனா பாருங்க இந்த லூசு பாண்டி இருக்கறது , கோயம்பேடு .


ஜோதி தியேட்டர் இருக்கறது ....ஆமா அதேதான் பரங்கி மலைல ,( என்னது கத்திபாரா , நேரு சிலையா , யோவ் போங்கையா , கத்திப்பாராவுக்கே ஜோதியாலதான் பெருமைனு வரலாறு சொல்லுது )

நம்ம டவுசரு கிளம்பி டகால் டிகால்னு ஒரு அன்டிராயர மாட்டிகிட்டு அதுக்கு மேல ஒரு முக்காலே அரைக்கா டவுசரயும் போட்டுகிட்டு கிளம்பிட்டான் , ஆனா பாருங்க அந்த பயலுக்கு வழி தெரியாது , சரி கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுல சுத்தி சுத்தி பாத்தா ஒரு ஆளயும் காணல சரி இன்னா பண்றதுனு யோசிச்சுகிட்டே பாத்தா அந்த பக்கமா நம்ம பாருநீபேதிதா வந்துட்டாரு , அவரத்தான் இவனுக்கு நல்லா தெரியுமேனு அவருகிட்ட போயி பேச ஆரம்பிச்சான்.

பாண்டி : அண்ணே வணக்கம்

பாரு : ம்ம் சொல்லுங்க

பாண்டி : ஏனுங்க இந்த ஜோதி தியேட்டருக்கு எப்படிண்ணே போனும்

பாரு : பாஸ் நான் யார் தெரியுமா

பாண்டி : தெரியும்னேண் நீங்கதானே பாரு.

பாரு : ஒரு எழுத்தாளன்கிட்ட கேக்கற கேள்வியா இது , எங்கிட்ட இத்தாலிய கவிஞரு சூச்சா லத்தீன் எழுத்தாளர் மூச்சீபூச்சீ பத்தி கேட்டா ஒரு மரியாதை இருக்கு , நீ ஒன்னு பண்ணு பிஜினி காந்துகிட்ட கேளு அவரு சொன்னா நானும் சொல்றேன் .

அவர் பேசிய பேச்சில் தனது டவுசர் கொஞ்சம் கொஞ்சமாய் கழண்டுவிடுவதை கவனித்தவன் டெரராகி அங்கிருந்து எஸ்கேப்பாகிறான் ...

அங்கிருந்து எஸ்கேப்பானவன் சும்மா இருக்காம அங்கே வெள்ளையும் சொள்ளையுமா இருந்த பெரியவர் கிட்ட போயி கேட்டான்.

பாண்டி : அண்ணே வணக்கம்

பெருசு ; ஆங் வணகம்

பாண்டி ; அண்ணே இந்த ஜோதி தியேட்டருக்கு எப்படி போனும்

பெருசு : தம்பீ உங்கள பாத்தா ஊருக்கு புதுசா இருக்கீங்க அதனால ச்சொல்றேன் , சென்னைல

மொத்த தியேட்டரோட எண்ணிக்க 240 அதுல தமிழ் படம் போடறது 190 அதுல என்னோட படத்த ஒட்டறவன் 45 நானே காசு குடுத்தாலும் என் படத்த வேணாங்கறவன் 40 பேரு இது பிட்டு படம் போடறவன் 10 அது பிட்டு நிறைய போடுறது 7 இப்ப ச்சொல்லுங்க தம்பீ நீங்க எங்க போகணும்

நம்ம பாண்டி பித்து பிடிச்ச பிதாமகன் மாதிரி ஆயி எங்க போணும்னு மறந்துடுச்சுங்கனு சொல்லவும்

பெருசு ; அப்ப ஒன்னு பண்ணுங்க இப்படி வலது பக்கம் போன ஒரு கல்யாண மண்டபம் இருக்கும் அங்க போங்க உங்ககிட்ட கையெழுத்து வாங்கிட்டு ஒரு கிலோ அரிசியும் ஹார்லிக்ஸும் குடுப்பாங்க ..

பித்து பிடிச்ச பாண்டி செய்வதறியாமல் , ஐயா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைங்க

பெருசு : இங்க பாருங்க தம்பீ மக்கள் மாற்றத்த எதிர்பாக்கறாங்க , வேற வழியில்ல இந்த நாட்டுக்காகவும் இந்த மக்களுக்காவும் ஏதாவது செஞ்சாகனும் நீங்க அங்கே போங்க தம்பீ , மக்களுக்காக நாம இறங்கிருக்கற இந்த ஆப்பரேசன்ல நீங்க கட்டாயம் கலந்துக்கணும்

ஐயோ ஆபரேசனா என்று அரண்டு கண்ணாமுழி பிதுங்கி , அடங்கொங்கமக்கா இந்தாளு நம்மள பேசி பேசிப்பேசியே வலியில்லாம ஆபரேசன் பண்ணி அரிசி குடுத்துருவார் போலருக்கேனு அங்கிருந்து எஸ்கேப்பாகிறான் .

அங்கிருந்து ஓடி போயி ஒராளு மேல இடிக்க அவரு முகத்துக்குள்ள தாடியா தாடிக்குள்ள முகமானே தெரியல அவ்ளோ முடி மூஞ்சிலாம் , பாக்க ஜீலருந்து தப்பிச்சு வந்த பாண்டா கரடிமாதிரி . ஆனா ஆள் பாக்க ரொம்ப நல்லவரா இருக்கவும் அவருகிட்ட போயி பேசினான் .( பாண்டிக்கும் பாண்டா கரடிக்கும் பேச்சு வார்த்தை ) .. அவருதான் பீயாரு ....

பாண்டி ; அண்ணா அண்ணா

பீயாரு : ( முடியை கோதியபடி ) சொல்லுடா ( பீலிங்காக சொல்கிறது )

பாண்டி ; இந்த ஜோதி தியேட்டருக்கு..

பீயாரு : என்னது ஜோதியா .. டே டண்டணக்கா நாட்டுக்குள்ள ஆயிரம் ஜாதி , நீயோ தேடுற
ஜோதி .. உன்ன மாதிரிதாண்டா இந்த ஊருல பாதி ... ஷகிலாவ பாத்தாலே போறான்டா பேதி...

பாண்டி ; அண்ணே வழி மட்டும் சொல்லுங்கண்ணே

பீயாரு : டேய் டண்டணக்கா ... உனக்கு தேவை வழி... என் நெஞ்சுக்குள்ள ஆயிரம் வலி... நயனு ஆக்கிட்டா என் பையன பலி ... வானத்துல பாருடா கிளி...

பாண்டி மேல பாக்கிறான் ...

அவன் மண்டையில் நங்கென குட்டி கரடி மேலும் தொடர்கிறார்

பீயாரு : பாக்கதடா மேல , உனக்கு ஊத்திருவான் பால , என் பையன் ஒரு கொம்பு அவன் இல்லாட்டி எனக்கு ஏதுடா தெம்பு

பாண்டி கண் தண்ணி வழிய அண்ணே என்ன விட்டுடுங்கண்ணே நான் ரூமுக்கே போறேன்.

பீயாரு : டே டண்டனக்கா .. என்று ஆரம்பிக்க

பாவம் கொழந்த கிலியடிச்சு போயி பேய் புடிச்ச மாதிரி அங்கிருந்து ஓட ஆரம்பிச்சிருச்சு ,

அவர வழில ஒரு தாடி வச்ச பெரியவர் தடுத்து நிறுத்தறார் ,... பாண்டிக்கு இந்த பெரியவர நல்லா தெரியும் அவருதான் பேமஸ் டாக்டர் ... சுத்ரன்.. மனசு சரில்லனா அவரு சரி பண்ணுவார்ணு பாண்டி ஏதோ படத்தில பாத்திருக்கான் ..

சுத்ரன் : சார் நில்லுங்க , ஏன் இப்படி ஓடறீங்க.. உங்களுக்கு ஏதோ மனப்பிரச்சனே இருக்கு போலருக்கே

பாண்டி : சார் வணக்கும் சார் நான் ஒரு கிராமத்தான் இந்த ஊருக்கு புதுசு ஜோதி தியேட்டருக்கு வழி கேக்கப்போயி இப்படி ஆயிட்டேன் சார்.. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

சுத்ரன் : சார் இது ஒரு சாதாரண பிரச்சனை இதுக்கு பேரு வழிகேப்பான்போபியானு மனோதத்துவத்தில சொல்லுவாங்க ...

பாண்டி : என்னது வழிகேப்பானபோபியாவா.. அவ்வ்வ் அதுனால என்னாகும் சார்...

சுத்ரன் : சொல்றேன் , இந்த மாதிரி வியாதி பொதுவா எல்லாருக்குமே இருக்கும் .. இதுமாதிரி அமெரிக்கால கூட ஜான்டி பியோ ங்கறவருக்கு வந்திருக்கு .. அவரு கிளிண்டன்கிட்ட வழிகேட்டு அவரு ஏதோ மோனிகா நினைப்புல எடக்கு மடக்கா ஏதோ பண்ணப்போயி அந்த வியாதி வந்திருச்சுனு சொல்றாங்க..

பாண்டி : அவ்வ் இந்த வியாதிய குணப்படுத்தவே முடியாதா..

சுத்ரன் : நிறைய பேரிச்சம்பழம் , செவ்வாழைலாம் சாப்பிடுங்க , அப்புறம் யோகா பண்ணுங்க .. சரியாகிடும் ..

பாண்டி : ரொம்ப நன்றி சார்.. அப்புறம் ஒரு டவுட்டு

சுத்ரன் : கேளுங்க

பாண்டி : இந்த ஜோதி தியேட்டருக்கு எப்படி போகணும்...

சுத்ரன் : ஜோதி தியேட்டரா .. இந்த மாதிரி வர ஆசைகளுக்கு ஜோதியோபேதியா னு மனோத்தத்துவத்தில.. இது மாதிரி அர்ஜெண்டினால ஒருத்தருக்கு.....

ஆஹா மறுபடியுமா னு அங்கிருந்து ஓட்டமெடுக்க ஆரம்பிச்சான் ... அங்க நின்னுகிட்டு இருந்த இரும்பு பொம்மை பக்கத்தில போயி நின்னுகிட்டு பொலம்ப ஆரம்பிச்சான்..

பாண்டி : ஆண்டவா ஏன்டா இப்படி சோதிக்கற .. ஜோதி தியேட்டர கண்டுபுடிக்கறதுக்குள்ள நான் ஜோதில கலந்துருவேன் போலருக்கே...

அந்த இரும்பு பொம்மை பேசுகிறது ...

இரும்பு பொம்மை : தோழா உனக்கு நான் உதவட்டுமா

பாண்டி டரியலாகிறான்..

பாண்டி : பொம்மைசார் நீங்களா பேசினீங்க

இ.பொ ; ஹா ஹா ஹா ஆமா.. உனக்கு என்ன பிரச்ன எங்கிட்ட சொல்லு நான் முடிச்சிதரேன்

பாண்டி : பொம்மைசார் வேண்டாம் சார் ..

இ.பொ : கண்ணா ஒன்னு மட்டும் வாழ்க்கைல தெரிஞ்சிக்கோ கிடைக்கறது கிடைக்காம இருக்காது கிடைக்கறதுதான் கிடைக்கும் ..

பாண்டி : ஐயோ சார் எனக்கு அதுலாம் வேண்டாம் இந்த ஜோதி தியேட்டருக்கு போகணும்

இ.பொ : கண்ணா மனசுல மூணு வகையிருக்குனு சோபாஜி சொல்லிருக்கார் ஒன்னு கர்மா இன்னொனு தர்மா இன்னொனு குர்மா இதில நீ குர்மால இருக்க ...

பாண்டி : அப்போ அடுத்தது பர்மாவா சார்....

தன் இரும்பு கைகளால் மண்டையில் ஓங்கி ஓரே அடி பாண்டி தலை மேலே மயில்கள் பறக்கிறது ..

இ.பொ : இப்படி குறுக்க குறுக்க பேசினா எப்டி பேசர்து , இதில குர்மாவ அடக்கி கர்மாவ மத்தில கொண்டுவந்து தர்மாவ நடுவுல வச்சா உன்னோட மனசு ஒரு நிலைப்படும் , சப்த நாடிகளும் அடங்கும் ., அப்படியே அடக்கி குந்த வச்சு உக்காந்தா குண்டலினி குபீருனு பீரிட்டு வரும் ...

பாண்டி : எங்கருந்து சார்

இரும்பு பொம்மை டென்சனாகி தனது இரும்பு கைகளிலிருந்து டெர்மினேட்டரு படத்தில வரா மாதிரி துப்பாக்கிய நீட்ட பாண்டி அங்கிருந்து ஓடினவன்தான் சென்னைபக்கம் திரும்பி வரலையே ...

லூசுப்பய என்னாட்டம் நம்ம பக்கிமுக் கிட்ட கேட்டிருந்த ஒரு நல்ல வழி காமிச்சு வாழ்க்கைல முன்னேத்திருப்பாருல... என்ன நான் சொல்றது..........

_____________________________________________________________________________________
பி.கு : இந்த கதை யார்மனதையும் புண்படுத்த அல்ல.. சும்மா டமாசுக்கு....
_____________________________________________________________________________________
அவ்ளோதான்பா.. ;-)

_____________________________________________________________________________________

28 கருத்துக்கள்:

சரவணகுமரன் October 14, 2008 12:01 PM  

உங்க பேனர்கள் எல்லாம் சூப்பர்

வெண்பூ October 14, 2008 12:13 PM  

செம காமெடி அதிஷா.. நல்லா சிரிக்க வெச்சீங்க.. அதிலயும் கடசி பக்கிமுக் சூப்பர்.. :)))

அத்திரி October 14, 2008 12:14 PM  

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாட இப்பவே கண்ணைக் கட்டுதே!!!!!!! சூப்ப்ப்ப்பபபர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

கார்க்கி October 14, 2008 12:16 PM  

மீ த ஃப்ர்ஸ்ட்டா? நல்லாயிருக்கு குதிஷா

Ŝ₤Ω..™ October 14, 2008 12:25 PM  

வேண்டாம்.. வலிக்குது..அழுதுடுவேன்..
முடியல..

நம்ம வெடிவேலு போல் பேசறது..
**பாருநீபேதிதா
**பெருசு
**பீயாரு
**சுத்ரன்
**இரும்பு பொம்மை
**பக்கிமுக்

கண்டுபிடிப்போர்க்கு தக்க சண்மானம் உண்டு..

பரிசல்காரன் October 14, 2008 12:35 PM  

//53 users onlineல இருக்காங்க //

வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறீங்க ரைட்டர்!!!

சூப்பர்.

விஜய் ஆனந்த் October 14, 2008 1:00 PM  

:-)))))....

கதாநாயகன் பாண்டியா...இல்ல நம்ம குதிஷா (நன்றி : கார்க்கி)வா????

Ramesh October 14, 2008 1:03 PM  

அதிஷா...குதிஷா..

விடை தெரிய வாருங்கள் பதிவுபோதை

**பாருநீபேதிதா
**பெருசு
**பீயாரு
**சுத்ரன்
**இரும்பு பொம்மை
**பக்கிமுக்
**வெடிவேலு

செம காமடி!

கோவி.கண்ணன் October 14, 2008 1:29 PM  

அதிஷா,

சூப்பர் !

கல்யாண மண்டப ஓனர் டயலாக் சூப்பர் !

மணிகண்டன் October 14, 2008 2:02 PM  

ரொம்ப நல்லா இருக்கு ஆதிஷா.

Anonymous,  October 14, 2008 2:42 PM  

damn boring.....waste.I like the way u write in general.what happ 2 u?sudd post like this?

narsim October 14, 2008 2:57 PM  

//பி.கு : இந்த கதை யார்மனதையும் புண்படுத்த அல்ல..//

இதுதான்பா காமெடி..

டாக்டர வேற புதுசா உள்ள இழுத்து போட்டீங்க.. விகடன் லூசுப்பையன் ரேஞ்சல்லாம் தாண்டிடீட்டங்க அதிஷா...

தொடருங்கள்..

நர்சிம்

அக்னி பார்வை October 14, 2008 4:06 PM  

சூப்பர் அ(ஆ)ப்பு!!!!

:)))))

உருப்புடாதது_அணிமா October 14, 2008 4:27 PM  

**பீயாரு///

ச்சீ...

உவ்வே

TAMILKUDUMBAM October 14, 2008 6:33 PM  

சூப்பர்மா
இவன்
www.tamilkudumbam.com
பாருங்க ரசிங்க நீங்களும் அசத்துங்க

கும்க்கி October 14, 2008 7:03 PM  

கலந்துகட்டி அடிக்கறீங்க...
(மானிட்டற (அந்த மானிட்டர் இல்லீங்னா) பார்த்து சிரிச்சிட்டிருக்கறத வீட்ல சந்தேகமா பாக்கறாங்க பாஸ்....)

வால்பையன் October 14, 2008 9:01 PM  

நகைச்சுவை முயற்சி
முயற்சியே கலக்கலா இருக்கு
ரசித்தேன்
சிரித்தேன்

Anonymous,  October 14, 2008 11:50 PM  

athisha unkada ovoru pathiva padikum vasakan thatkalikama bangkokila irunthu //வலையுலகில் பதிவுகளை திருடும் முகமூடி கும்பல்...!!! //
vethanai (ithai try panniparunkalean)மதியம் வியாழன், 10 ஜூலை, 2008
உங்கள் தளங்களில்ருந்து தகவல்களைத்திருடுபவர்களை கண்டுபிடிக்கும் இணையத்தளம்
அண்மையில் எம்.ரிஷான் ஷெரீப் எனும் இலங்கைவலைப்பதிவர் தன்னிடம் அனுமதி பெறாமல் தன் பதிவுகளை வேறொருவர் தனது வலைத்தளத்தில் இட்டிருப்பதாக மிக வேதனையுடன் பதிவிட்டிருந்தார் . இது போன்ற தருணங்களில் மிகவும் உபயோகமாக இருப்பது Copyscape எனும் இந்தத்தளம் இது உங்ககள் பதிவுகள் எங்கெங்கு இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் எடுத்துவந்து காட்டக்கூடியது.
தளத்திற்கான முகவரி : http://www.copyscape.com/

குடுகுடுப்பை October 15, 2008 12:25 AM  

நல்லா இருக்குங்கோ.

அதிஷா October 15, 2008 10:39 AM  

நன்றி சரவணக்குமரன் .
நன்றி வெண்பூ
நன்றி அத்திரி
நன்றி கார்க்கி
நன்றி சென்
நன்றி பரிசல்
நன்றி முரளி அண்ணா
நன்றி விஜய ஆனந்த்
நன்றி ரமேஷ்

அதிஷா October 15, 2008 10:42 AM  

நன்றி கோவி அண்ணா
நன்றி மணி
நன்றி அனானி தோழர்
நன்றி வினோத்
நன்றி கும்க்கி
நன்றி வாலு
நன்றி நர்சிம்
நன்றி உருப்படாதது அனிமா
நன்றி குடுகுடுப்பை

வடிவேலன் .ஆர் October 15, 2008 12:09 PM  

அதிஷா உங்கள் ஆதரவை நாடுகிறேன் உதவுங்கள். உங்கள் நண்பர்கள் வெண்பூ, கார்க்கி, லக்கிலுக் அனைவருக்கும் சொல்லுங்கள். என்னுடைய புதிய பார்முக்கு உங்களை வரவேற்கிறேன். உங்கள் ரசிகர்களில் ஒருவன். நன்றி

http://gouthaminfotech.wikidot.com/forum:start

புதுகை.அப்துல்லா October 15, 2008 12:45 PM  

லேட்டா வந்ததுக்கு மன்னிச்சுக்கங்கண்ணே...


நல்லா வாருறீங்க :)

K.Ravishankar October 16, 2008 4:56 PM  

தயவு செய்து அரைத்த மாவை அரைகாதிர்கள்.இந்த மிமிக்ரீயை டிவி யில் பார்த்து புளித்துவிட்டது.

வித்தியாசமா முயற்சியுங்கள்

கே.ரவிஷங்கர்

Busy October 21, 2008 6:12 PM  

சூப்பரப்பூ...

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP