இன்பக்கதைகள் இன்ஃபினிட்டி......(1)

>> 24 November 2008



முரட்டு இன்பம் -

மகளிர் காவல் நிலையத்தில் என்றாவது ஒரு நாள் முழுக்கவும் ஆடவராகிய நம்மால் கழிக்க இயலுமா என்றால் நிச்சயம் இயலாது . அங்கே சக ஆண்களுக்கு எதிரான பெண் காவலர்களின் வன்முறைகள் மிக அதிக அளவில் நிகழுவதாக சில நண்பர்கள் கூற கேட்டதுண்டு . பெண் காவலர்கள் குறித்து வெகுஜன ஊடகங்களும் நமது சிற்றறிவும் மிக அசாத்திய எண்ணங்களை பதிவு செய்துள்ளன.

நமது கதையின் நாயகன் வினோவும் அது போலத்தான் நினைத்துக்கொண்டிருந்தான் நித்யாவை சந்திக்கும் வரை . நித்யா நமது கதையின் நாயகி பெண் காவலாளி தமிழில் லேடி கான்ஸ்டபிள்.

அன்புள்ள நித்து டார்லிங்

உன்னை இனிமேல் என்னால் அப்படி கூப்பிட இயலுமா தெரியவில்லை ,
என்னை மன்னித்துவிடு எனக்கு வேறு வழி தெரியவில்லை , நான் உன்னை என் உயிரினும் மேலாகத்தான் நேசித்தேன் ஆனால் சூழ்நிலை இன்று நம்மை பிரிக்க முயல்கிறது , சூழ்நிலைக்கைதியாய் நான் அதற்கு அடிபணிந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் . இனி நாம் பேசுவதோ பழகுவதோ முறையாகாது , மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் , ஒரு முறை அல்ல ஆயிரம் முறை கூட சொல்வேன் ஐ யம் சாரி ஐ யம் சாரி , உன்னை விட்டு பிரிந்தாலும் , என் உள்ளத்தில் என்றும் உன் நினைவுகளோடே வாழ்வேன் ,

இப்படிக்கு உன் காதலன்(?)

வினோ......

இந்த காலேஅரைக்கால் கடிதம்தான் வினோ நித்யாவிற்கு கடைசியாக எழுதிய கடிதம் , அக்கடிதத்தை ஆர்.கே.சாலையில் மேம்பாலம் அருகில் காவலுக்கு நின்று கொண்டிருந்த விமலாவிடம்(இன்னுமொறு கான்ஸ்டபிள் ) கொடுத்துவிட்டு , அங்கிருந்து வெகு வேகமாக சென்று விட்டான் வினோ . விமலா அக்கடிதத்தை நித்யாவிடம் தந்த போது அவளோ பூமி அதிர சிரித்தாள் , '' லூசாப்பா அவன் '' என்று கண்ண்டித்தாள் , அடுத்தவர் கடிதம் என்றும் பாராமல் அக்கடிதத்தை படித்து விட்டிருந்த விமலாவுக்கு ஒன்றுமே விளங்கவில்லை .
வினோவும் நித்யாவும் முதன்முதல் சந்தித்தது மிக நகைச்சுவையான ஒரு சம்பவத்தில் , வினோ பணிபுரியும் தானியங்கி நீர் சுத்திகரிப்பு சாதனம் விற்கும் கம்பெனியின் அலுவலகம் எத்திராஜ் கல்லூரிக்கு எதிரில் இருக்கும் பச்சை நிற அடுக்குமாடி கட்டிடத்தின் நான்காம் மாடியின் வலது புறத்தில் மூன்றாவது அறையில் இருந்தது , மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவான இவன் , அலுவலத்தில் இருக்கும் நேரத்தை விட வீடு வீடாகச்சென்று வாடிக்கையாளர் பிடிக்க அலையும் நேரமே அதிகம் .

ஒரு சுபமுகூர்த்த சுபயோக சுபதினத்தில் , காலை 11 மணிக்கு நல்ல எமகண்டத்தில் , காயிதே மில்லத் கல்லூரியை தாண்டி இடது புறம் திரும்பினால் அண்ணா சிலைக்கு செல்லும் சாலை , அது ஃபிரீ லெப்ட் கிடையாது , அங்கே விழும் சிக்னலுக்கு கட்டாயம் காத்திருந்துதான் செல்ல வேண்டும் , இவனும் சிக்னலுக்கு காத்திருந்தான் , இவனது விலைமதிப்பற்ற பஜாஜ் பாக்ஸர் ( 1998 மாடல் வண்டி) சிகனலில் ஆஃப் ஆகி விட பச்சை விழுந்து மீண்டும் சிகப்பு விளக்கு எரிய ஆரம்பித்திருந்தது , அந்த சாலை திரும்புமிடத்தில் காவலுக்கு நின்று கொண்டிருந்த நித்யா இவனை கவனித்தபடி இருக்க , எதிர்பக்கத்தில் இருந்த போக்குவரத்து காவலாளி நேராக இவனை நோக்கி வந்தார் , '' தம்பி லைசன்ஸ் , ஆர்சி புக்லாம் எடுங்க , '' எடுத்து காட்டினான் , ''இன்சூரன்ஸ்?'' அதையும் நீட்டினான் ,

''ஸைடு மிரர் எங்கே ? ''

''சார் அது வீட்டில இருக்கு ''

''எதுக்கு சிரைக்கரதுக்காகவா வச்சிருக்க ''

''ஆமா சார் , அம்மாதான் சொன்னாங்க அதுல சேவிங் பண்ணா முகத்தில நல்லா சிரைக்கலாம்னு ''

''என்னப்பா கிண்டலா ''

''ஸைடுல மிரர் இல்ல, வண்டி சாவிகுடுங்க , எதுவா இருந்தாலும் ஐயா கிட்ட பேசிக்கோங்க ''

''சார் , இதுலாம் ஒரு தப்பா சார் , அதான் எல்லா டாகுமெண்ட்ஸ்ம் இருக்கல , ஹெல்மெட் கூட போட்டிருக்கேன் அதுவும் ஐஎஸ்ஐ ''

''ஐயா இங்க ஒருத்தன் ரொம்ப ரூல்ஸ் பேசறான் , நீங்களே பாத்து கவனிங்க ,''
வினோவின் வண்டியை நித்யாவின் அருகில் நிறுத்திவிட்டு , அங்கிருந்து அண்ணாசாலையின் மிகப்பெரிய சிக்னலை நடந்தே கடந்தான் . நித்யா அவனை பாவமாய் பார்த்தாள் . நித்யா நல்ல அழகு , தேவதை போல் அவனுக்கு தோன்றினாள் .

''என்னப்பா ஃபைன் ஆயிரம் ரூபா இங்க கட்டறியா , இல்ல கோர்ட்லயா '' ஐயா கேட்டார் ,

''சார் , என்ன சார் நான் தப்பு பண்ணேன் , ஸைடு மிரர் இல்ல அது ஒரு தப்பா ''

''தம்பீ ஓவர் ஸ்பீட் , டிராபிக் வயலேசன் , அப்புறம் ஸைடு மிரர் இல்ல , உங்க லைசன்ஸ் போட்டோல இருக்கறது உங்கள மாதிரி வேற இல்ல ''

''சார் என் வண்டி எவ்ளோ வேகமா போனாலும் 50 கி.மீ தாண்டாது , நான் ஒழுங்கா சிக்னலுக்கு நின்னது டிராபிக் வயலேசனா ''

''சரிங்க தம்பி , இவ்ளோ ரூல்ஸ் பேசறீங்கல்ல , நாளைக்கு வந்து கோர்ட்ல வண்டிய வாங்கிக்கங்க ''

'' சார் அவர விட்டுருங்க சார் , எனக்கு வேண்டப்பட்டவரு , ஊர்க்காரரு , ரொம்ப நல்லவரு , ப்ளீஸ் '' நித்யா சம்பந்தமே இல்லாமல் சாலையின் மறுபுறத்தில் இருந்து ஓடி வந்து உதவினாள் .

''ரொம்ப தேங்க்ஸ்ங்க , நீங்க மட்டும் உதவலனா , ஏன் வண்டியும் நானும் கண்டமாகிருப்போம் ''
''பரவால்லைங்க , உங்கள பாத்தாலே பாவமா இருக்கு , அப்பாவியா இருக்கீங்க , பப்பி மாதிரி! , உங்ககிட்ட போயி , அந்தாளுக்கு யாருகிட்ட எப்படி நடந்துக்கணும்னே தெரியாது ,ஏக்ச்சுவலி நாங்கதான் உங்ககிட்ட ஸாரி கேக்கணும் '' என்றபடி அவனது கண்களையே பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தாள் , உதட்டில் சிறிய புன்னகை , வினோவை அது என்னமோ செய்திருக்க வேண்டும் .

வினோவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை , தன்னிடம்தான் பேசுகிறாளா , அதுவும் ஒரு பெண் போலீஸ் இத்தனை சாந்தமாக , கனிவோடும் அளவில்லா அன்போடும் , என சுற்றும்முற்றும் பார்த்து உறுதி செய்து கொண்டான் . இவன் வண்டியை எடுத்துவிட்டு அங்கிருந்து திரும்பும் போது அவளை பார்த்தான் , அவள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் , அவன் மறையும் வரை .
அன்புள்ள வினோ குட்டிக்கு ,

நித்யா எழுதிக்கொள்வது , ஒரு மாதமாக உன்னை காணாமல் கலங்கி போயிருக்கிறேன் ,நீ உனது அலுவலகத்திற்கு கூட வருவதில்லை என கேள்விப்பட்டேன் , உனது மொபைல் எப்போதும் ஆஃப்லேயே இருக்கிறது , என்னை பார்க்காமல் உன்னால் இருக்க முடிகிறது போல , என்னால் முடியலடா... ராஸ்கல் , ப்ளீஸ் எங்கிருந்தாலும் உடனே வாடா , உன்னை பார்க்கணும் , பேசணும் ,உன்னை இறுக்க கட்டியணைத்து உன் உதடுகள் சிவக்க அழுத்தமாய் ஒரு முத்தமிடனும் , ஏன்டா என்னை இப்படி கொல்ற , எங்கடா இருக்க.... குட்டிமா ப்ளீஸ்டா.. நான் ஏதாவது தப்பு பண்ணிருந்தா மன்னிச்சுடுறா...ப்ளீஸ்...

இப்படிக்கு..

அன்பு முத்தங்களுடன் ,

நித்யா.....

நித்யா வினோவிற்கு தருவதற்காக கடைசியாய் எழுதிய கடிதம் , இன்று வரை அக்கடிதம் பற்றி அவனுக்கு ஒன்றுமே தெரியாது .............
**********
முடிவில்லா இன்பம் தொடரும்.....

39 கருத்துக்கள்:

VIKNESHWARAN November 24, 2008 1:26 PM  

ஹாட்டு பத்தாது... சுந்தர் அண்ணாச்சிகிட்ட ட்ரேய்னிங் எடுத்துகோங்க...

அதிஷா November 24, 2008 1:26 PM  

பின்னூட்ட டுபுரித்தனம்

குசும்பன் November 24, 2008 2:28 PM  

கதை சொன்ன விதம் எல்லாம் நல்லாதான் இருக்கு முடிவுதான் ஒரே கொழப்பமாக இருக்கு!

குசும்பன் November 24, 2008 2:30 PM  

VIKNESHWARAN said...
ஹாட்டு பத்தாது... சுந்தர் அண்ணாச்சிகிட்ட ட்ரேய்னிங் எடுத்துகோங்க...//

ம்க்கும் அவரு தலைப்பில் மட்டும் காமத்தை வெச்சுக்கிட்டு உள்ளே ஒன்னும் “அதை பற்றி” இல்லை, ஒவ்வொரு முறையும் போஸ்டர் பார்த்து படத்துக்கு போய் ஏமாந்து திரும்புபவன் போல் திரும்பிக்கொண்டு இருக்கிறோம், நீங்க வேற அவரிடம் போய் டிரைனிங் எடுக்க சொல்லிக்கிட்டு!:))))

முரளிகண்ணன் November 24, 2008 3:01 PM  

அய்யோ கொல்லுதே. (சூப்பர்)

கோவி.கண்ணன் November 24, 2008 3:03 PM  

//''எதுக்கு சிரைக்கரதுக்காகவா வச்சிருக்க ''

''ஆமா சார் , அம்மாதான் சொன்னாங்க அதுல சேவிங் பண்ணா முகத்தில நல்லா சிரைக்கலாம்னு ''//

வெரி குட்...நல்ல டைமிங்க் சென்ஸ்.

'வினோ?' இந்த பேரை எங்கேயோ கேள்விபட்டது போல் இருக்கே, கற்பனை கதையா ? உன்மையைச் சொல்லிடு.

முரளிகண்ணன் November 24, 2008 3:05 PM  

அய்யோ கொல்லுதே. (சூப்பர்)

வெண்பூ November 24, 2008 3:15 PM  

நல்ல கதை அதிஷா... ஆனா தலைப்பு மேட்ச் ஆகலயே.. நான் என்னவோ ஏதோன்னு எதிர்பார்த்து வந்தா ஏமாத்திட்டீங்களே.. :))))

வெண்பூ November 24, 2008 3:16 PM  

நல்ல கதை அதிஷா... ஆனா தலைப்பு மேட்ச் ஆகலயே.. நான் என்னவோ ஏதோன்னு எதிர்பார்த்து வந்தா ஏமாத்திட்டீங்களே.. :))))

cable sankar November 24, 2008 4:11 PM  

முடிவை சொல்லுங்க தல..ஓண்ணும் பிரியல..

cable sankar November 24, 2008 4:12 PM  

அப்படியே நம்ம பக்கம் வந்து கருத்த சொல்லிட்டு போங்க..

பரிசல்காரன் November 24, 2008 4:24 PM  

நூறுக்கே தாங்கல. இதுல இன்ஃபினிட்டியா? கிழிஞ்சது போ!

பரிசல்காரன் November 24, 2008 4:24 PM  

என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி!

அவ்ளோதாம்பா!

அதிரை ஜமால் November 24, 2008 4:50 PM  

ஏங்க தொடரும் போட மறந்துட்டீங்களா

அக்னி பார்வை November 24, 2008 7:10 PM  

கொன்னுட்டிங்க...

விலெகா November 24, 2008 8:11 PM  

குசும்பன் said...
கதை சொன்ன விதம் எல்லாம் நல்லாதான் இருக்கு முடிவுதான் ஒரே கொழப்பமாக இருக்கு!

repeatuuuuuuuuuuuuuuuuuuu

ஊர் சுற்றி November 25, 2008 2:05 AM  

//கதை சொன்ன விதம் எல்லாம் நல்லாதான் இருக்கு முடிவுதான் ஒரே கொழப்பமாக இருக்கு!//
குழப்பத்தோடே வழி்மொழிகிறேன்.

Mouse a- மேலயும் கீழயும் உருட்டி உருட்டி படிச்சும் ஓரளவுக்குதான் புரிஞ்சுது!

keerthi November 25, 2008 9:02 AM  

எனக்கு ஒண்ணுமே புரியல. அதிஷா என்னை மாதிரி மர மண்டைக்கும் புரியற மாதிரி கொஞ்சம் சொல்லுங்களேன்......

வால்பையன் November 25, 2008 9:58 AM  

தலைப்ப மாத்திட்டிங்க போல!

இந்த வித்தியாசமான காதல் அனுபவத்த படிக்க ஆவலாய் இருக்கிறேன்.

அதிஷா November 25, 2008 10:58 AM  

விக்கி எப்பருந்து ஹாட் கதைலாம் படிக்க ஆரம்பிச்சீங்க...

யோவ் கெட்டு போயிட்டியே...

அதிஷா November 25, 2008 10:59 AM  

நன்றி தமிழன் கறுப்பி

அதிஷா November 25, 2008 10:59 AM  

குசும்பன்..இது தொடர்கதை.. அதுக்குள்ள முடிவா.. அவ்வ்வ்வ்

அதிஷா November 25, 2008 11:00 AM  

நன்றி முரளி அண்ணா...

அதிஷா November 25, 2008 11:00 AM  

வாங்க வெண்பூ.... யூ டூ வொயிட் பிளவர்...

அதிஷா November 25, 2008 11:01 AM  

கோவி அண்ணா இது முழுக்க முழுக்க கற்பனை கதை...

அதிஷா November 25, 2008 11:01 AM  

தமிழ் பிரியன் ஏன் சோகம்?

அதிஷா November 25, 2008 11:02 AM  

கேபிள் சங்கர்... இது தொடர்கதை...

அதிஷா November 25, 2008 11:03 AM  

நன்றி பரிசல்கார்.. அவ்ளோதான்பா போட மறந்துட்டேன்..

அதிஷா November 25, 2008 11:04 AM  

ஆமாங்க அதிரை ஜமால் ... அதான் குழப்பமாகிருச்சு...

நன்றி இப்போ போட்டுட்டேன்

அதிஷா November 25, 2008 11:04 AM  

நன்றி அக்னி பார்வை

அதிஷா November 25, 2008 11:05 AM  

விலெகா.. இது தொடர்கதை என்பதை மறுபடியும் சொல்லிக்கொள்கிறேன்...

அதிஷா November 25, 2008 11:06 AM  

ஊர்சுற்றி நன்றி

எப்படியோ படிச்சா சர்தான்

அதிஷா November 25, 2008 11:06 AM  

கீர்த்தி இது ஒரு தொடர்கதை முதல் பகுதிலயே முடிவ சொல்ல முடியுமா

அதிஷா November 25, 2008 11:07 AM  

நன்றி வால்பையன்...

மோகன் கந்தசாமி November 25, 2008 12:36 PM  

மிஸ்டர் அதிஷா,

கத செம டச்சிங் பா! (லேடி கான்ஸ்டபுள் சவகாசம் எனக்கும் சில உண்டு)

காமெடி கலந்து கலக்கலா போகுது கத.

அடுத்த கதை இதன் தொடர்ச்சியா?

இல்ன குறைந்த பட்சம் அந்த லேடி கான்ஸ்டபுளையாச்சம் இட்னு வந்த்ருங்கோ அடுத்த கதைக்கு!

(இந்த பின்னூட்டத்துக்கு மறக்காமா பதில் போடு நைனா!)

அதிஷா November 25, 2008 12:41 PM  

\\
மிஸ்டர் அதிஷா,

கத செம டச்சிங் பா! (லேடி கான்ஸ்டபுள் சவகாசம் எனக்கும் சில உண்டு)

காமெடி கலந்து கலக்கலா போகுது கத.

அடுத்த கதை இதன் தொடர்ச்சியா?

இல்ன குறைந்த பட்சம் அந்த லேடி கான்ஸ்டபுளையாச்சம் இட்னு வந்த்ருங்கோ அடுத்த கதைக்கு!

(இந்த பின்னூட்டத்துக்கு மறக்காமா பதில் போடு நைனா!)

\\

வாங்க மோகன்.. நன்றி

அடுத்தக்கதை இதன் தொடர்ச்சியாவும் படிக்கலாம்... இல்ல தனியாவும் படிக்கலாம்.. கட்டாயம் படிச்சு கருத்து சொல்லிருங்க

அடுத்த கதைல லேடி கான்ஸ்டபிள் கட்டாயம் உண்டு... அதும் ஒன்னு இல்லை ரெண்டு... என்சாய் மாம்ஸ்..

பதில் போட்டாச்சு ஓகேவா...

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP