மீண்டும் ஒரு பேய்க்கதை....!! (18+)

>> 26 November 2008




மழைப்பெய்யும் நள்ளிரவு . பேய்க்கதைகளுக்கு அதை விட சிறந்த வானிலை தேவையா . நான் மழையில் நடந்தபடி ஓடிக்கொண்டிருந்தேன் , முழுதுமாய் நனைந்திருந்தேன் . காற்று சூறாவளி போல அடித்ததது . தினமும் இரவில் அந்த சாலையில் போகும்போதும் வரும் போதும் அந்த பாழடைந்த பங்களாவை பார்க்க நேரிடும் .


எனக்கு பாழடைந்த பங்களாக்கள் மீது எப்போதும் ஒரு ஈர்ப்பு , வாழ்வில் என்றாவது ஒரு தருணத்தில் எனது மீதிவாழ்க்கையை இப்படி ஒரு வீட்டில் தனியாக கழிக்கவேண்டும் என்று அடிக்கடி எண்ணம் வருவதுண்டு . அதற்கான வேளை இன்னும் வரவில்லை என்று ராபர்ட் மாமா கூறுவார் .


''ரோஜா....! நீ இன்னும் வளரணும்.. அதுக்குலாம் வயசிருக்குமா.. உனக்கு முதிர்ச்சி பத்தாது அதுவும் நீ தனியா இருந்தா ஆபத்துதான் ''


ராபர்ட் மாமா கூறிய அந்த வார்த்தைகளை என்னால் என்றுமே மறக்க இயலாது . அவரால்தான் இன்று நான் ஒழுங்காய் இருக்கிறேன் . எனக்கு ரோஜா என்று பெயர் வைத்தது கூட அவர்தான் .


அந்த பங்களாவை கடக்கும் போது அங்கிருந்து ஒரு அலறல் சத்தம் . ஆஆஆஆஆஆஆவென . அந்த ஓலி என்னவோ செய்தது . ஆனால் அந்த வீட்டிற்குள் நுழைய பயம் . தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கருப்பு கேட்டை திறந்து அந்த அகண்ட பங்களாவின் வாயிலில் மெதுவாக நடந்து சென்று கதவருகில் நின்றேன் . மீண்டும் அலறல் சத்தம் . ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓவென .


இம்முறை எனக்கு வயிற்றில் புளித்த கரைசல் உண்டாகியிருக்க வேண்டும் . கதவை தட்டினேன் . காலிங் பெல்லை காணவில்லை . கதவை பலமாகதட்டினேன் . தட் தட் தட் . யாருமில்லை . மேலும் தட்டினேன். கதவு திறந்து கொண்டது . மெதுவாக அடியெடுத்து வைத்து உள்ளே நுழைந்தால் உள்ளே ஒரு வயதான பெரியவர் மட்டும் தனியே அமர்ந்து கொண்டு டிவி பார்த்துக்கொண்டிருந்தார் . டிவியில் ஒரு கற்பழிப்புக்காட்சி, கோலங்கள் சீரியலில் . நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன் . அப்போதெல்லாம் நான் தேவயானியின் அதி தீவிர ரசிகையாய் இருந்தேன் . இன்னுமா இந்த பாழாய் போன நாடகம் முடியவில்லை . கிழவன் என்னை பார்த்ததும் எழுந்து நின்று அவசர அவசரமாக தனது வேட்டியை சரிசெய்து கொண்டான் .


''யாருமா.. நீ ..........என்ன வேணும் ஏன் உள்ள வந்த '', பேய்ப்படங்களில் வரும் கிழவன் போன்ற தொணியில் பேசினான் . எனக்கு நடுங்கியது . இதுதான் முதல்முறை இது போன்ற சந்தர்ப்பத்தை அனுபவிப்பது . அலறல் கேட்டு வந்தேன் என்றால் எங்கே திட்டிவிடுவானோ என பயந்து போய்..... அமைதியாய் நின்றேன் . அவனுக்கு பற்கள் கரிய நிறத்தில் , முகமெல்லாம் அம்மைத்தளும்புகள் , ஆள் பார்க்க ஆறடி உயரத்தில் ராட்சசன் போல இருந்தான் கிழவன் . அவனது முகத்தில் ஒரு கள்ள சிரிப்பு வேறு பயமுறுத்தியது . தவறான இடத்தில் மாட்டிக்கொண்டோமோ என்கிற பயம் வேறு .


''யாரைப்பார்த்தும் பயப்படாதே, உன்னை பாத்துதான் உலகம் பயப்படணும் , நீ குழந்தை இல்ல , உன்னை பயமுறுத்தும் உலகத்தை நீ பயமுறுத்து ''


ராபர்ட் மாமா சொன்னது மீண்டும் ஒரு முறை காதில் ஒலித்தது .


''சார் மழை அதிகமா பெய்யுதேனு இப்படி ஒதுங்கினேன் , நாலஞ்சு ரவுடி பசங்க துரத்தினாங்க அதான் உள்ளே வந்துட்டேன் சார் ! ''


''ஓஓஓ ....... '' என்றபடியே மழையில் நனைந்திருந்த எனது ஆடைகளினூடே மெலிதாக தெரிந்த எனது சேலையை மீறி உள்ளாடை இல்லாத ரவிக்கையின் உள்ளே அவனது கண்கள் பரவத்துவங்கியிருந்தது .

என் கைகளால் என் மார்பை மறைத்துக்கொண்டேன் .

''சரிமா கொஞ்ச நேரம் இருந்துட்டு போயிடு '' என்றான்.

அவன் கண்கள் மார்பிலிருந்து இடுப்புக்கு வந்திருந்தது . இன்னும் விட்டால் அவன் இடுப்புக்கு கீழேயும் பார்க்க நேரிடலாம் என்று அங்கிருந்து அருகில் இருந்து அறையின் நாற்காலியில் போய் அமர்ந்து கொண்டேன் .

''இந்தாம்மா துடைச்சுக்கோ ..... துணியெல்லாம் நனைஞ்சிருக்கு பாரு.. இந்தா இந்த நைட்டிய போட்டுக்க ''

''சார் இந்த வீட்ல நீங்க மட்டும்தான் இருக்கீங்களா !! '' என்றபடியே துண்டை வாங்கிக்கொண்டேன் . குளிர ஆரம்பித்ததால் நைட்டியையும் வாங்கிக்கொண்டேன் .

''ஆமா.. நான் மட்டும்தான் ''

''சார் நீங்க கொஞ்சம் வெளிய போனா நான் , டிரஸ் மாத்திப்பேன் ''

''ஓ மாத்திக்கோயேன்... '' கிழட்டுச்சிரிப்பு , காமச்சிரிப்பு , எரிச்சலூட்டும் சிரிப்பு .

தலையை நன்கு துவட்டிவிட்டு , எனது சேலையை விலக்கி விட்டு , ஜாக்கெட்டுகளின் ஊக்குகளை கழட்ட முயல்கையில் ஒருசந்தேகம் அவன் எட்டி பார்க்கிறானோ என்று , கதவருகில் மெல்ல மெல்ல அடியெடுத்து வந்து துவாரத்தில் பார்த்தேன் . ஒரு சின்ன ஃபைலால் அவன் தனது கத்தியை கூர்படுத்திக்கொண்டிருந்தான் . எனக்கு மீண்டும் பயம் தொற்றக்கொண்டது .
எல்லா உடைகளையும் களைந்துவிட்டு சாவகாசமாய் எல்லாவற்றையும் கழட்டிவிட்டு . நிர்வாணமாகி , நைட்டியை அணிந்து கொண்டு கதவை திறந்தால் , கதவருகில் கிழவன் . புன்முருவலிட்டான் . பயம் வயிற்றை கவ்வியது .

''என்னம்மா , டிரஸ் மாத்திட்டியா !! ''

''மாத்திட்டேன் சார் ''

''சரிவா டீ சாப்பிடு ''

''வேண்டாம் சார் உங்களுக்கு ஏன் சிரமம் ''

''பரவால்லம்மா , என்னை உன் அங்கிள் மாதிரி நினைச்சுக்கோ '' , அந்த கிழவனுக்கு என் தாத்தாவை விட ஆறு வயது அதிகமிருக்கும் . அங்கிளாம்.

அவன் கொடுத்த டீயை பருகினேன் . அது மிகவும் கசப்பாக இருந்தது , எதையோ கலந்திருக்க வேண்டும் . இருவரும் ஹாலில் அமர்ந்து கொண்டிருந்தோம் .டிவி சேனல் மாறிக்கொண்டே இருந்தது . டிவியில் மிக ஆபாசமான காட்சிகள் திடீரென வரத்துவங்கியது . கிழவன் கையில் ரிமோட் . முகத்தில் ஆபாசமான ஒரு புன்னகை . எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை .

அவன் என் அருகில் வந்து அமர்ந்து கொண்டு எனது தொடைகளின் மீது கையை வைத்தான் .

''சார் வேண்டாம் சார் தப்பு சார் '' வாய் வேண்டாம் என்றாலும் உடல் சரியென்றது . இதற்காகத்தான் இத்தனை நாளாய் காத்திருந்ததைப் போல .

கண்ணிமைக்ககும் நேரத்தில் அவன் தனது கைகளால் என் கழுத்தைசுற்றி அவனருகில் இழுத்து , வெறியோடு கன்னத்தில் முத்தமிட , கன்னத்திலிருந்து உதடு , உதட்டிலிருந்து கழுத்து , கழுத்திலிருந்து , மார்பு என உதடுகள் கபடி ஆடத்துவங்கியிருந்தது.

''சார் ப்ளீஸ் என்ன விடுங்க '' வாய் மட்டும் கூறினாலும் , உடல் அங்கேயே இருந்தது , அந்த கிழவனின் அணைப்பில் . எனது நைட்டியின் மேல் பட்டன்களை களைய முயல ,அதை தடுக்க மனம் நினைத்தாலும் கைகள் வெறுமனே வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருந்தது . என் உடலில் ஏதோ மாற்றம் . ஏன் என் உடல் மனதோடு ஒத்துழைக்கவில்லை . தெரியாது . சூனியத்திற்கு கட்டுப்பட்டது போல அப்படியே அவனது சேட்டைகளை ரசித்துக்கொண்டிருந்தது .

''சா...............ர்ர்.............. வேண்டாம்.............. ப்.......ளீஸ் ''

என்னையும் அறியாமல் கிழவனை இப்போது நானும் கட்டியணைத்திருந்தேன் . எனது திறந்த மார்புகள் கிழவனின் மார்போடு அழுந்தியிருந்தது . ஒரு புதிய உணர்வு மற்றும் உடலில் ஏற்படும் மாற்றத்தையும் என்னால் உணர முடிந்தது . அளவில்லா இன்பம் ஆர்ப்பரித்தது . கிழவனின் காதுகளில் முத்தமிட்டபடி அவனது கழுத்தில் முத்தமிட்டேன் .

முத்தம் அழுத்தமாக ஆக ஆக ....... எனக்கு பல் முளைத்தது . கழுத்தில் கடித்து ரத்தத்தை உறிந்தேன் . எனது கால்கள் மறைய துவங்கின . இன்னும் அழுத்தமாய் கழுத்தின் துவாரம் வழியாக கிழவனின் ரத்தத்தை உறிய உறிய எனக்கு கால்கள் மறைந்து நான் ஓரளவுக்கு முழுமையான ரத்தக்காட்டேறியாய் மாறினேன் . கிழவன் செத்து விழுந்தான் . அந்த இடம் முழுவதும் ஜில்லிடத்துவங்கியது . காதுகளில் பிணங்களின் அலறல் இன்னிசையாய் ஒலிக்க துவங்கியது . நான் மிதக்கத் துவங்கினேன் . இன்னும் ஒருவரை இது போல கொன்று விட்டால் இறக்கைகளும் முளைத்து விடுமாம் பின் பறக்கலாம் எங்கும் எப்போதும்.......................

''சாதாரண கொள்ளிவாய் பிசாசான நீங்களும் குட்டிப்பிசாசுகளும் மோகினிப்பேய்களும், ரத்தக்காட்டேறியாய் மாறவேண்டுமென்றால் , உன் முதல் வேட்டை நீ அறியாமல் நடந்தால் மட்டுமே உனக்கு கொலைப்பற்கள் முளைக்கும் , அடுத்த கொலையை முடித்த உடன் இறக்கைகள் முளைத்து விடும் '' என ராபார்ட் மாமா நான் ஐந்து வருடங்களுக்கு முன்னால் இறந்து குட்டிப்பிசாசான புதிதில் சொல்லிக்கொடுத்தது இப்போது நினைவுக்கு வந்தது .

27 கருத்துக்கள்:

நையாண்டி நைனா November 26, 2008 1:39 PM  

பதிவுலே உங்க போட்டோ ஸ்சூப்பர்.... ஆனா இன்னும் கொஞ்சம் நல்லா சிரிக்கிற போட்டோ போட்டிருக்கலாம்

தேவகோட்டை ஹக்கீம் November 26, 2008 1:47 PM  

சான்ஸே இல்ல சார்.பிரிச்சு மேயுறீங்க!தொடர்ந்து கலக்குங்க....

வால்பையன் November 26, 2008 2:33 PM  

கொஞ்சமும் எதிர்பார்க்க முடியாத முடிவு,

அதிஷாவின் தனித்தனமையே அது தானே!

மோகினிகள் கழகம்,  November 26, 2008 2:34 PM  

ஐ! கதை சூப்பர்!

நாங்களும் ரத்தக் காட்டேறியா மாற வழி சொல்லிக் கொடுத்த அதிஷா அவர்களுக்கு நன்றி!

லக்கிலுக் November 26, 2008 4:28 PM  

யோவ்! பேய்க்கதைன்னு சொல்லிட்டு மேட்டர் கதை எழுதறீயா? :-))))

//''ஓஓஓ ....... '' என்றபடியே மழையில் நனைந்திருந்த எனது அடைகளினூடே மெலிதாக தெரிந்த எனது சேலையை மீறி உள்ளாடை இல்லாத ரவிக்கையின் உள்ளே அவனது கண்கள் பரவத்துவங்கியிருந்தது//

நாக்கு சுளுக்கிக்கிச்சி :-(

தாமிரா November 26, 2008 4:51 PM  

திகிலே இல்லாமல் ஒரு திகில் கதை. (செக்ஸும் காமெடியும் கலந்த கதை போல எனக்கு தோன்றியது பாஸ்). ஆனா நல்லாதான் இருந்தது.!

அதிஷா November 26, 2008 6:34 PM  

நன்றி ரமேஷ்

அதிஷா November 26, 2008 6:35 PM  

நையாண்டி நைனா...!

குசும்புய்யா உங்களுக்கு...

அதிஷா November 26, 2008 6:36 PM  

நன்றி தேவகோட்டை ஹக்கீம்..

அதிஷா November 26, 2008 6:37 PM  

@லக்கிலுக்...

தோழர்.. இந்த கதை ஒரு கண்ணாடி போல என்ன மனநிலையில் படிக்கிறீர்களோ அதே மனநிலையை காட்டும் அதனால் இது அப்படி தெரிந்திருக்கலாம்... ;-)))))

அதிஷா November 26, 2008 6:38 PM  

வால்ப்பையன் மிக்க நன்றி..

அதிஷா November 26, 2008 6:39 PM  

நன்றி தாமிரா... நான் எப்படி எழுதினேனோ அப்படியே படிச்சிருக்கீங்க..

வால்பையன் November 26, 2008 6:42 PM  

//அதிஷா said...

@லக்கிலுக்...

தோழர்.. இந்த கதை ஒரு கண்ணாடி போல என்ன மனநிலையில் படிக்கிறீர்களோ அதே மனநிலையை காட்டும் அதனால் இது அப்படி தெரிந்திருக்கலாம்... ;-)))))//

இப்படி சொல்லுவிங்கன்னு தெரிஞ்சி தான் நான் விரிவா எழுதல
ஹீ ஹீ ஹீ

அதிஷா November 26, 2008 7:31 PM  

நன்றி அப்துல்லா..

VIKNESHWARAN November 26, 2008 8:06 PM  

யோவ்வ்வ் டுபுரி....

வலையுலக காமக் கொடுரா....

விஜய் ஆனந்த் November 26, 2008 11:25 PM  

:-)))...

கதை நல்லா இருக்கு...

ரணகளத்தி்லயும் அதிஷாக்கு ஒரு கிளுகிளுப்பு வேண்டியருக்கா!!!

விலெகா November 27, 2008 6:34 AM  

ரொம்ப நல்லா இருந்துச்சுங்க.,

மோகன் கந்தசாமி November 27, 2008 11:02 AM  

யோவ்/சார்/மச்சி/ அதிஷா!

சாட் -ல எங்கிட்ட ஒரு கதை சொல்லிட்டு இங்க வேறொரு கதை சொல்ற!

நையாண்டி நைனா November 27, 2008 11:53 AM  

/*புதுகை.அப்துல்லா said...
நறுக் :)*/

நானும், நீங்கள் கூறியது போல தினமலர் ஷடைலீல் "நறுக்" என்று முடியும் என நினைத்தேன்.. ஆனால் முடிந்ததோ " சுருக்".

Ŝ₤Ω..™ November 27, 2008 12:12 PM  

போய்யா போ.. போய் புள்ள குட்டிகளை படிக்கவைக்கிற வேலையை பாரு...

நல்லாத் தான இருந்த.. ஏன் இப்படி??

ஒரு நல்ல கதையை இப்படியா பொசுக்குனு முடிப்பாய்ங்க???

ஆமா அது என்னா.. பேய் கதைன்னா ஒரு செக்ஸ் ஃபீலோடயே எழுதறீங்க?? இந்த பேய்கள் எல்லாம் என்ன ஒன்னும் அனுபவிக்காமலே இறந்து போச்சோ???

Chuttiarun November 27, 2008 5:41 PM  

நண்பர்களே நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

மணிகண்டன் November 27, 2008 8:28 PM  

சூப்பர் ஆதிஷா.

என்ன லக்கி வாய்ல சுளுக்கோட உங்க கதைய படிச்சார்ன்னு சொல்றீங்களா ?

KaveriGanesh November 27, 2008 8:45 PM  

''சார் வேண்டாம் சார் தப்பு சார் '' வாய் வேண்டாம் என்றாலும் உடல் சரியென்றது . இதற்காகத்தான் இத்தனை நாளாய் காத்திருந்ததைப் போல .


இதை படித்தவுடன் முடிவை கண்டுபிடித்துவிட்டேன்.


better luck next time.

அன்புடன்
காவேரி கணேஷ்.

LOSHAN November 28, 2008 11:14 AM  

:) திகில் கதை என்றாலே கொஞ்சம் செக்ஸ் கலந்தாத் தான் கலக்க முடியும் இல்லே..

என்னைக் கூட யாராவது பெண் ரத்தக் காட்டேரிகள் மட்டும் கடிக்கலாம்.. ;)

ஆட்காட்டி November 28, 2008 7:10 PM  

நல்லா இங்கிலீசுப் புத்தகங்கள் படிக்கிறீங்க போல இருக்குது. புத்தியும் அப்பிடிப் போகுது. யாரை உருவகிச்சு அப்படி? (உளி- fபைல்ஸ்)

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP