Pages

12 December 2008

தமிழிஷ் ஓனர் யார்ணு தெரியணுமா.....!


இங்கிலாந்தின் ஒரு பிரபல பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் , பெண்களை விட ஆண்களே காதலிக்கும் போது அதிகமாக தாங்கள் படிக்கும் புத்தகங்கள் குறித்து பொய் சொல்கிறார்கள் என்று கண்டறிந்துள்ளனர்.

பொதுவாகவே காதலிக்கையில் எதிர்பாலினத்தவரிடம் தான் ஒரு அறிவிற்சிறந்தவன்/ள் என்று காட்டிக்கொள்ள விரும்புவர். அதற்காக தான் படித்த புத்தகங்கள் குறித்து பேசும்போது பெண்களை விட ஆண்கள் இருமடங்கு அதிகமாக இது குறித்து பொய்பேசுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது .
இது தவிர 26 சதவீத பெண்கள் தன் காதலனுக்காக காத்திருக்கும் நேரத்தில் புத்தகம் படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆண்கள் 3 சதவீதமே.

இனிமே யார்னா உங்ககிட்ட வந்து பூக்கோ,நீட்சேனுலாம் லந்துவிட்டா நம்பாதீங்கோ லேடீஸ்.... அவர்கள் சாருநிவேதிதா மட்டும் படிப்பவராக இருக்ககூடும் ஜாக்கிரதை பெண்கள்ஸ்...


*******************

சரத்குமார் என்பவர் நடத்திவரும் ச.ம.க என்னும் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாட்டை அவரது கட்சியின் அடுத்த நெல்லை மாநாட்டில் தெரிவிக்க உள்ளாராம் . அதற்கு முன் குடும்ப அரசியலில் சிறிதும் நாட்டாமில்லாத தன் கட்சியில் தனது மனைவி ராதிகாவுக்கு முக்கிய பதவி தரவேண்டுமென கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் விரும்புவதாக தெரிவித்தார்.

இதுதாண்டா கட்சி !!

*********************

வலையுலக சூப்பர் பதிவர் சமீபகாலமாக தனது வலைப்பூவில் நிறைய மீள்பதிவுகளாய் போடுவதன் மர்மம் ஒரு இளம் பெண்ணாம் . அந்த பெண்ணுடன் சாட்டிங்கில் அடிக்கும் மொக்கை அரட்டைக்கே அவரது டவுசர் கழண்டு தாவூ தீருகிறதாம் . அதனால் பதிவுகள் போட நேரமின்றி தவிப்பதாக தோழமை வட்டாரம் ஒன்று தெரிவித்தது .

பல்லிருப்பவன் பர்பி சாப்பிடுகிறான்... கண் மட்டும் இருப்பவன் பாக்கதானே முடியும்....


********************

டோண்டுராகவனுக்கும் பெயரிலிக்கும் நடந்த சண்டையில் தெரியாமல் பெயரிலியின் பதிவுபக்கமாய் போய்விட்டேன். இரண்டுநாளாக கடுமையான பேதி . இத்தனைக்கு அந்த பதிவை நான் படித்ததே பாதி . முழுமையாய் படித்திருந்தால் பேக்கு பஞ்சாராகியிருக்கும்.

நம்மூரில் டாக்டர்கள் எழுதுவது யாருக்குமே புரியாது , ஆனால் மெடிக்கல் ஷாப் மச்சான்களுக்கு மட்டும் சரியாக புரியும் . பெயிரிலியின் பதிவுகள் கூட புரியவேண்டியவர்களுக்கு மட்டும் புரிகிறது போலும் .

அவரது பதிவில் உண்மைத்தமிழன் அண்ணன் போட்ட பின்னூட்டம் கூட புரியவில்லை . ஒரு வேளை அந்த வலைப்பூவில் நுழைந்தால் எல்லாமே மணக்கும் போலும் .

கடைக்கு போனாளாம் ஆட்டி - வெயிலுக்கு இதம்னா ஊட்டி - பீ ய வழிச்சாதான் துன்றதுக்கு போட்டி... தெரிஞ்சுக்கங்கடே...


************************

பிரபல வலையுலக கவிஞர் ஒருவர் விரைவில் அரபுநாடுகளில் செட்டில் ஆக இருக்கிறாராம் . தன் பெயர் சொல்லவிரும்பாத அந்த இரண்டெழுத்து கவிஞருக்கு வாழ்த்துக்கள் . (அவரு சாருவுக்கு மிக நெருக்கமானவராமே.......... ந மக்கென்ன்ன!!! )
இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் அவருக்கு வாழ்த்துக்கள்...


அது போல பிரபல சினிமா ஸ்பெஷல் முரளிக்கண்ணன் அவர்களுக்கு இரண்டாவது ஆண்மகவு பிறந்திருக்கிறது . அவருக்கு வாழ்த்துக்கள் .

***********************
தமிழிஷ் தளம் தமிழ் விரோதத்தளமா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர் . அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் , தமிழிஷ்ல் ஷ் இருக்கிறதாம் . என்ன கொடுமை பதிவுலகமே இது . அதற்காக அதனை புறக்கணிக்க வேண்டுமாம் .

தமிழ்ப்படங்களுக்கு தமிழ்ப்பெயரென்று ஒரு சட்டம் இருக்கிறதே அதை விட லூசுத்தனமாக இருக்குதுயா இவர்கள் பேச்சு . போங்க போங்க புள்ளகுட்டிங்கள படிக்க வைங்கய்யா...

சரி தலைப்புக்கு வருவோம்...
தமிழிஷ் ஓனர் யாருனு தெரியணுமா !!!


பார்ரா.. அது எம்புட்டு பெரிய ரகசியம்...

சரி ஒரு புதிர் சொல்றேன் கண்டுபிடிச்சுக்கோங்க


அவரும் ஒரு பதிவர்தான் , ஆனா மொக்கையில்லை ,


இவரும் உடன்பிறப்புதான் ஆனா லக்கி இல்லை.


அவர் பதிவும் தமிழ்மணத்தில் வருது...


வெளிநாட்டு பதிவர் இல்ல...


அப்புறம் நீங்களே கண்டுபிடிச்சிக்கோங்கப்பா...!!


**************************

படத்தில் ஆயிஷா - அதிஷாவுக்கும் ஆயிஷாவுக்கும் ஒரு தொடர்புமில்லை...


இப்போதைக்கு இவ்ளோதான்பா..... ;-)