மே-10- Dr.ருத்ரன் மற்றும் Dr.ஷாலினி உடனான கலந்துரையாடல் ஒலி வடிவில்..
>> 14 May 2009
ருத்ரன், ஷாலினி கலந்துகொண்டு உரையாடியதன் முதல் பகுதி: ஷாலினியும் ருத்ரனும் பேசியது.
இதன் அடுத்த பகுதி அவர்கள் பேசிமுடித்தபின் கலந்து கொண்டவர்களுடனான கேள்வி-பதில் உரையாடல்.
இந்த சுட்டியிலிருந்து ஆடியோவை MP3 ஆக இறக்கிக்கொள்ளலாம்; அல்லது அங்கிருந்தே கேட்கவும் செய்யலாம்.
**********
இந்த உரையாடலை ரெக்காடிங் செய்ய உதவியதோடு மட்டுமல்லாது வலையில் பதிவேற்றிய நண்பர் பத்ரி அவர்களுக்கு நன்றிகள்.
**********


3 கருத்துக்கள்:
தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.
அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.
ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா
பகிர்வுக்கு நன்றி அதிஷா...
என்னால் வர இயலாமைக்கு வருந்துகிறேன்.
அப்புறம், குங்குமத்தில் உங்கள் வலைப்பூ பூத்ததற்கு வாழ்த்துக்கள்.
அதிஷா,
இந்தவாரம் ஜு. வி ல் "குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு" என்ற தலைப்பில்
இந்த செய்தி வந்துள்ளது.
காலையில் எழுந்து பத்திரிகையைப் பிரித்தால், கட்டாயம் இப்படி ஒரு செய்தியாவது மனசைக் கலங்கடிக்கும். இந்தச் சூழலில் இணையதளத்தில் வலைப்பக்கம் தொடங்கி எழுதிவரும் சில வலைப்பதிவர்கள், இந்த மாதிரியான குற்றங்களை தடுக்கும் பொருட்டும், பெற்றோர்களுக்கு இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் சென்னையில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். சென்னையில் நடந்த இந்தக் கூட்டத்தில் டாக்டர்கள் ருத்ரன், ஷாலினி ஆகியோர் பேசினார்கள்.
லக்கிலுக், அதிஷா, முரளிகண்ணன் ஆகியோரின் உதவியோடு இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்த வலைப்பதிவர் நர்சிம், ''பிள்ளை களை வெளியில் அனுப்பிவிட்டு வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கும் பெற்றோர்களுக்கு இந்த அரங்கம் நிச்சயம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்கும். அதோடு, ஊடகங்களின் தாக்கத்தால் சிறுவர்கள் வழிமாறிப் போய்விடாமல் நாம் தற்காத்துக்கொள்வதற்கும் இது உதவியாக இருந்ததாகப் பார்வையாளர்கள் குறிப்பிட்டதில் எங்களுக்கு மிகுந்த சந்தோஷம்!'' என்றார்
வாழ்த்துக்கள்
நாஞ்சில் நாதம்.
Post a Comment