Pages

15 May 2009

வந்துட்டானுங்க ஆட்டிகிட்டு த்தூ.. ஓட்டுமட்டும் கேட்டுகிட்டு!




எலவச மின்சாரம் மின்னும்
வீடு வந்து சேரல

வட்டியில்லா க்கடனும் - காடு
வந்தது போல் காணல

ஓயாம உழச்சாலும் - காசு
வீடு வந்து சேரல

கையெல்லாம் காய்ச்சாலும்
கஞ்சி காச்ச முடியல

விவசாயம் பண்ணி பொழைச்ச
மக்க! -

வயிறெல்லாம் பசியோட
வத்திப்போய்தான்
கிடக்க

தண்ணியில்லா வயக்காடு
காஞ்சுபோய்தான்
இருக்க

வந்துட்டானுங்க ஆட்டிட்டு
த்தூ

ஓட்டு மட்டும் கேட்டுகிட்டு


யாருக்காக காத்திருக்கேன்
பாதையத்தான் பாத்திருக்கேன்

வருமுன்னு நினச்சதொண்ணும்
வீடு வந்து சேரலியே!

உலகத்துக்கே விடிஞ்சாலும்
சூரியன்தான் உதிச்சாலும்

எலை தழைங்க துளிச்சாலும்
தாமரக்கை பூத்தாலும்

என்சோட்டு சாதி சனம்
வாழ்க்க மட்டும் விடியலியே

சாவு கூட வெரசா வந்து
என் காலத்தையும் முடிக்கலியே!


*******

நண்பர் சஞ்சய் ஒரு படத்தை தன் பதிவிலிட்டு அதற்கேற்ற கவிதை எழுதச்சொல்லி கேட்டிருந்தார். அந்த படமும் அதற்காக எழுதியதும்தான் மேலே . அனுஜன்யா கவிதை மாதிரி இருப்பதாகவும் சொல்லி இருந்ததால் நமது வலைப்பூவில் சஞ்சய் அனுமதியின்றி போட்டுவிட்டேன். குமுதம் போல அவரும் என் மீது வழக்கு தொடராமல் இருக்க அழகிரிஆண்டவரை வேண்டுகிறேன்.

*******