வந்துட்டானுங்க ஆட்டிகிட்டு த்தூ.. ஓட்டுமட்டும் கேட்டுகிட்டு!
>> 15 May 2009

எலவச மின்சாரம் மின்னும்
வீடு வந்து சேரல
வட்டியில்லா க்கடனும் - காடு
வந்தது போல் காணல
ஓயாம உழச்சாலும் - காசு
வீடு வந்து சேரல
கையெல்லாம் காய்ச்சாலும்
கஞ்சி காச்ச முடியல
விவசாயம் பண்ணி பொழைச்ச
மக்க! -
வயிறெல்லாம் பசியோட
வத்திப்போய்தான்
கிடக்க
தண்ணியில்லா வயக்காடு
காஞ்சுபோய்தான்
இருக்க
வந்துட்டானுங்க ஆட்டிட்டு
த்தூ
ஓட்டு மட்டும் கேட்டுகிட்டு
யாருக்காக காத்திருக்கேன்
பாதையத்தான் பாத்திருக்கேன்
வருமுன்னு நினச்சதொண்ணும்
வீடு வந்து சேரலியே!
உலகத்துக்கே விடிஞ்சாலும்
சூரியன்தான் உதிச்சாலும்
எலை தழைங்க துளிச்சாலும்
தாமரக்கை பூத்தாலும்
என்சோட்டு சாதி சனம்
வாழ்க்க மட்டும் விடியலியே
சாவு கூட வெரசா வந்து
என் காலத்தையும் முடிக்கலியே!
*******
நண்பர் சஞ்சய் ஒரு படத்தை தன் பதிவிலிட்டு அதற்கேற்ற கவிதை எழுதச்சொல்லி கேட்டிருந்தார். அந்த படமும் அதற்காக எழுதியதும்தான் மேலே . அனுஜன்யா கவிதை மாதிரி இருப்பதாகவும் சொல்லி இருந்ததால் நமது வலைப்பூவில் சஞ்சய் அனுமதியின்றி போட்டுவிட்டேன். குமுதம் போல அவரும் என் மீது வழக்கு தொடராமல் இருக்க அழகிரிஆண்டவரை வேண்டுகிறேன்.
*******
28 கருத்துக்கள்:
:-))
நல்லாயிருக்கு அதிஷா!
அந்த பதிவுல நானும் அனுஜன்யாவும் மட்டும் தான் உங்களை பாராட்டியிருப்போம்,
பார்க்கலையா?
:(
உள்ளேன் ஐயா
//உலகத்துக்கே விடிஞ்சாலும்
சூரியன்தான் உதிச்சாலும்
எலை தழைங்க துளிச்சாலும்
தாமரக்கை பூத்தாலும்//
தி.மு.க, பா.ஜா.க & காங்கிரஸை தாக்கி கவிதை எழுதியதற்க்காக உங்களை வன்மையாக கண்டிக்கின்றேன் :(
அதி என்ன இது? ஏன்? கவித? ok..அதை ஏன் விடுவானேன்னு எழுத ஆரம்பிச்சிட்டியா? முதல்ல இயற்கை காதல் பூ பட்டாம்பூச்சி இதையெல்லாம் எளுதிட்டு அப்பறமேட்டு பொதுப் பிரச்சனை எழுது சரியா? just joking ma..கவிதை நல்லாவே இருக்கு. ;))))
நல்ல கவிதை !
சில லாஜிக் மீறல்கள் இந்த கதையில் இருக்கின்றன.
//எலவச மின்சாரம் மின்னும்
வீடு வந்து சேரல//
இலவச மின்சாரம் வீட்டுக்கில்லை. விவசாயத்துக்கு மட்டுமே. குடிசைகளுக்கு மட்டும் ஒரே ஒரு பல்பு எரியவைத்துக் கொள்ளலாம்.
//வட்டியில்லா க்கடனும் - காடு
வந்தது போல் காணல//
வட்டியில்லாமல் கடன் தருவதில்லை. ஏற்கனவே வாங்கிய கடனுக்கு தான் வட்டி தள்ளுபடி செய்கிறார்கள்.
//ஓயாம உழச்சாலும் - காசு
வீடு வந்து சேரல//
ஓட்டு போட்டால் காசு கொடுக்கிறார்கள்.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியிருக்க வேண்டிய கதை. தஞ்சை விவசாயி அப்போது தான் எலிக்கறி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
நேத்து வெயில் 106மில்ல சென்னைல.
அட இது வேலூர்ல எளுதின கவிதை அங்க 110மில்ல.
ரவுசு தாங்க முடியல.இத்த மாதிரி
ஒரு லட்சம் பேர் எய்திட்டாஙக.
புச்சா எதுனா டிரைப் பண்ணு தலீவா!
எத்தன எலீக்ஷன் வந்தாலுமே தலவிதிய மாத்த யாராலும் முடியாது மாமே.போய் ஓட்டு போட்டுட்டு மாடு மேய்க்கிற வேலைய பாக்க போவ வேண்டியதுதாம்.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியிருக்க வேண்டிய கதை. தஞ்சை விவசாயி அப்போது தான் எலிக்கறி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
இப்ப என்ன டெய்லி பிரியாணியா சாப்பிடறான்?
திரு.ரைட்டர் அதிஷா அவர்களே.. உங்கள் கவிதையை உபயோகிக்க என் அனுமதி எதற்கய்யா?
பிற்சேற்கை தூக்கலா இருக்கு.. ;))
செம.. செம..
அருமை அருமை....
"வெரசா"ங்கற வார்த்தையக் கேட்டு ரொம்ப நாளாச்சு...
அதான் எலக்சன் முடிச்சிடுச்சிலே
superb
பக்கா! பக்கா!!
வந்துட்டானுங்க ஆட்டிக்கிட்டுன்னு
சொன்னீங்க பாருங்க..
அங்கதான் இருக்கு
ஆதிஷா டச்!
எங்கதாத்தா சொல்லுவாரு. விவசாயம் எல்லாம் வேணாம்டா வேற நல்ல வேலையாப் பாருங்க'ம்பாரு. "இது நல்ல வேலை இல்லையா?'ன்னு கேட்பேன். சிரிப்பாரு. அதுக்காக அர்த்தம் உங்க கவிதையில இருக்கு
:-)))
நல்ல கருத்துக்கள் அதிஷா
அப்படியே வாங்க
http://www.ensaaral.blogspot.com/
me the 200th follower.
Yes. Our voting duty is over. The winners are beginning to fight for ministership for their sons, relatives, daughters & for their loyal servants. Your article is very much touching. Keep it up.
N.Rathnavel.
Dear Sir,
Your article is touching. Yes. Our voting work is over. Now the winners have begun their work - to canvas ministership for their sons, daughters, relatives & loyal servants.
N.Rathnavel
நான் ஏதோ பழைய இடுகைன்னு நினைச்சிட்டேன்...!!!
எல்லாமே முடிஞ்சு போச்சு!
கலக்கல். அது சரி, கார்க்கியை மாதிரி நீங்களும் எதுக்கு அனுஜன்யா அண்ணனை இழுக்கறீங்க
You Are Posting Really Great Articles... Keep It Up...
We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...
தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.
நன்றிகள் பல...
- நம் குரல்
http://gongfu.com.ua - Visit us or die! iojulmvcc
Post a Comment