வாழ்க்கை ஒரு சொப்பனஸ்கலிதம்..!
>> 05 June 2009
(போட்டோ உதவி - ஆதிமூலகிருஷ்ணன் )
என்ன கொடுமை சார் இது.. யாருமே என்னை இந்த கேள்வி பதில் தொடருக்கு அழைக்கல.. எல்லாருக்குமே நம்மல பாத்தா கொஞ்சம் பயமாத்தான் இருந்திருக்கும் போல.. ஆனாலும் தகிரியமா நம்மளை ஒருத்தரு ( ஆதிமூலகிருஷ்ணன் ) கூப்பிட்டுட்டாரு.. அவருக்கு நன்றி.
******************
1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
விடை இங்கே
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
போன வாரம் எனது எழுபத்திரெண்டாவது காதலிக்கு திருமணம் நடந்த போது அவளை கட்டிக்கொள்ள போகின்றவனை நினைத்து அழுதேன்.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
தலையெழுத்து..!
4.பிடித்த மதிய உணவு என்ன?
சோறுதான்
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
பெண்கள்னா வச்சுக்குவேன். ஆண்கள்னா யோசிப்பேன்.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
குளிக்கவே புடிக்காது, இதுல கடலா அருவியானு ...
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்தது : லொள்ளு
பிடிக்காதது : ஜோள்ளு
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
பிச்சு பிச்சு நிறைய பாதிங்க இருக்கு இதுல எந்த பாதிக்கு பிடிச்சத சொல்ல..
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
எம்.ஜி.ஆர்
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
அடங்கப்பா உங்க கேள்வி பதில்ல வசம்ப வச்சு தேய்க்க..
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
முடியல...
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
வெள்ளை கலர் பேனா..
( என்ன கலர் இங்கா மாறுவீங்கனு கேக்கணும் )
14.பிடித்த மணம்?
பினாயில் வாசனை.. ஹாஸ்பிடல்ல வருமே
15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன?
லக்கிலுக் - பிரியமான தோழர்
ஜ்யோவ்ராம் சுந்தர் - ஆசான்
கே.ரவிஷங்கர் - விமர்சகர்
மணிகண்டன் - நண்பர்
செந்தழல்ரவி - பரம எதிரி
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
ஆதிமூலத்தின் எல்லா பதிவுகளையும் விரும்பிபடித்தாலும்.. அவரது துறை சார்ந்த பதிவுகளை அதிகம் விரும்புவேன்.
17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட்டு.
18.கண்ணாடி அணிபவரா?
இல்லை
19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
எல்லா காவாலி படமும்
20.கடைசியாகப் பார்த்த படம்?
NIRAPPAKITTU மலையாளப்படம்.. முழுநீலத்திரைப்படம்
21.பிடித்த பருவ காலம் எது?
மண்டை காயவைக்கும் வெயில் காலம்
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
பிரபாகரன் வாழ்வும் மரணமும்.. பாரா எழுதியது. கிழக்கு வெளியீடு
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
கம்பேனி கம்ப்யூட்டர்ல அதெல்லாம் மாத்த முடியாது
24.உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் : இச் ( முத்தம் குடுக்கும் போது )
பிடிக்காத சத்தம் : மொச் ( சோறு தின்னும் போது )
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
2 இலட்ச்சத்து முப்பத்திரெண்டாயிரத்து முன்னூத்தி இருப்பதி ஆறு கிலோ மீட்டர் இருநூத்தி இருபத்திரெண்டு மீட்டர்.. நாற்பத்திரெண்டு சென்டி மீட்டர்.
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருக்கே..
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
ஸ்ஸ்ப்பா முடியல..
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
உள்ளலாம் இல்ல வெளியதான் இருக்கு.. உள்ளே கடவுள்தான்
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
ஒரகரம் பீச்சு ( இப்போதைக்கு )
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்படித்தான் இருக்கணும்னுலாம் எந்த ஆசையும் கிடையாது..
31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
பாஸ்.
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
சிலருக்கு வாழ்க்கை ஒரு சொப்பனஸ்கலிதம்.. சிலருக்கு சுய இன்பம்
***************

32 கருத்துக்கள்:
குருவே சரணம்.
( அந்த கடைசி கேள்வி கொடுத்த ஞானம் தான்)
me the first
படித்துவிட்டு வருகிறேன்
கலக்கல் பதில்கள் அண்ணா
2 வது பதில் மிக அருமை..!!!!
:))
நடத்துங்க நடத்துங்க..
Good.
//வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
2 இலட்ச்சத்து முப்பத்திரெண்டாயிரத்து முன்னூத்தி இருப்பதி ஆறு கிலோ மீட்டர் இருநூத்தி இருபத்திரெண்டு மீட்டர்.. நாற்பத்திரெண்டு சென்டி மீட்டர்.//
குறும்பு!
கடைசி கேள்விக்கு " சேலம் சிவராஜ் சித்தவைத்திய சாலை" யின் பிரதான சீடன் மாதிரியே பதில் சொல்லியிருக்கீங்களே...!
எல்லாம் அந்த ஆதிமூலத்த சொல்லணும்.
இன்னும் கல்யாணமே ஆகலை.. சொப்பனமாம்.. ஸ்கலிதமாம்.. கல்யாணம் ஆகட்டும் எல்லாம் வெளங்கிடும்.. ;-))
//சிலருக்கு வாழ்க்கை ஒரு சொப்பனஸ்கலிதம்.. சிலருக்கு சுய இன்பம்//
ஒழுக்கமாவே பேசத்தெரியாதாயா உங்களுக்கு, ம்ஹூம், ஒரு மார்க்கமாத்தான் இருக்காய்ங்க.
//32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
சிலருக்கு வாழ்க்கை ஒரு சொப்பனஸ்கலிதம்.. சிலருக்கு சுய இன்பம்//
:-)))
அதிஷா,
6 ஆப்ஸ் காணோம்.தொடர் பதிவுக்கு
அழைக்கிறீங்க.டைம் கொடுங்க.
அதிஷா,
6 ஆப்ஸ் காணோம்.தொடர் பதிவுக்கு
அழைக்கிறீங்க.டைம் கொடுங்க.
அழைப்பில்லாமல் உங்கள் இல்லத் திருமணத்துக்கு வரலாமா?
///20.கடைசியாகப் பார்த்த படம்?
NIRAPPAKITTU மலையாளப்படம்.. முழுநீலத்திரைப்படம்//
oh god ..you too
நக்கல் பதில்கள்
நச்சினு கிது மச்சான் :)
குளிக்கவே புடிக்காது, இதுல கடலா அருவியானு ...
//
போட்டோஸ் கிராப்பிஸ்ஸா..:)
இல்ல பதில் பொய்யா..?
:)
//"வாழ்க்கை ஒரு சொப்பனஸ்கலிதம்..!"//
போச்சுடா !
:)
அது கல்யாணம் ஆகாதவங்களுக்கு !
உண்மைய சொல்லோனும்னா எல்லோரும் இப்படித்தான் திறந்த மனதுடன் இருக்கனும்னு விரும்பறோம்.உங்க வாழ்க்கை உங்க கையில இருக்குன்னு புரியுது.என்ன செய்ய த்ரீஷா நம்மளயெல்லாம் பட்டிலருந்து தினசரி தொறந்துவிட்டு நேரமானவுடன் பட்டியில அடைச்சு போடறாங்க.கூட்டத்தோட போய் மேய வேண்டியதுதான்.
உங்களின் பதிவில் கண்ட அத்தனை வரிகளுக்கும் என் அன்பான முத்தங்கள்.(ப்ரஷ் பண்ணீட்டுத்தான்)
நச் நச் ன்னு
டூ மச்ச்சா சொல்லீருக்கீக...
கலக்கிட்ட தலைவா!!!
வழக்கமான அதிஷா ஸ்டைல்.
கலக்கல்.
[[கடைசியாகப் பார்த்த படம்?
NIRAPPAKITTU மலையாளப்படம்.. முழு நீலத் திரைப்படம்]]]
இவ்ளோ லேட்டாவா பார்க்குற தம்பி..!?
ஒரு நல்ல ஓட்டும், ஒரு கள்ள ஓட்டும் உனக்காகப் போட்டுத் தொலைஞ்சேன்..!
//இவ்ளோ லேட்டாவா பார்க்குற தம்பி..!?//
அந்த மேட்டருலே நீங்கதாண்ணா எல்லாருக்கும் குரு. எவ்ளோ பார்த்திருப்பீங்க. எவ்ளோ .........?
போச்சே போச்சே எல்லாம் போச்சே!
:(((
தலீவா...சித்த வ்த்தியார் சிவராஜ்
பெசல் செட் 3000/-.சூப்பர் பெச்ல் செட்
4500/.
அதிஷா என் கமெண்ட் இரண்டு தடவை
வந்து விட்டது.விமர்சன வரிகள் காணவில்லை.
வழக்கமான அராத்து அட்டாக் பாண்டி பதில்கள்.ரவுடித்தனமான கிரேஸி மோகன்?சுறு சுறு...ஹஹ்ஹா...
கடைசிவரி(பிரதிகளைக் கட்டுடைத்தல்?):
//சிலருக்கு வாழ்க்கை ஒரு சொப்பனஸ்கலிதம்.. சிலருக்கு சுய இன்பம்//
அதாவது நான் புரிந்து கொண்டது:-
சிலர் முயற்சி இல்லாமலேயே வாழ்கையில் சுகமாக இருக்கிறார்கள்.
சிலர் கடுமையாக முயற்சி செய்து சுகமாக இருக்கிறார்கள்.
படர் படா தத்துவம்? அர்ர்ரே பகவான்
நம்மளை நீதான் காப்பாத்தாறான்.
நிம்பள் எஸ்கேப் ஆரான்.
லக்கிலுக் அல்லாகாட்டி நர்சிம் இதேப் பத்தி “புரிதல்” சொல்றாங்கோ?
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
போன வாரம் எனது எழுபத்திரெண்டாவது காதலிக்கு திருமணம் நடந்த போது அவளை கட்டிக்கொள்ள போகின்றவனை நினைத்து அழுதேன்.////////////////////
ஐயோ பாவம் அவன் என்ன பாடுபட போறானோ ?கேள்வி பதில் உங்க பதில்கள் அசத்தல்
//யாருமே என்னை இந்த கேள்வி பதில் தொடருக்கு அழைக்கல.//
இதெல்லாம் மொக்கை வினோ.. நீங்க என்ன மொக்கைப் பதிவரா? :))
அன்பான நண்பர் திரு அதிஷா,
கண்டேன் உங்கள் அருமையான கேள்வி பதில் காவியத்தை!
அப்ப்பா என்னே உங்கள் நகைச்சுவை உணர்வு.....
இதைவிட ஒரு அசட்டுத்தனமான கேள்விகளை, அதைவிட அபத்தமான பதில்களை இதுவரை கண்டதில்லை! இந்த கேவலமான கேள்விகளை முன்வைத்தது யாரென்று தெரியாது. இருந்தாலும் சளைக்காமல் இதற்க்கு நகைச்சுவை என்ற பெயரில் வாந்தி எடுப்பது போல பதில்கள் வேறு! இதை படித்தால் அழுகை கூட வராது!
இருந்தாலும் இந்த மாதிரி வேலை வெட்டி இல்லாமல் உளறி கொட்டும் ஒருவருக்கு ஏதோ என்னால் முடிந்தது!
அதாவது அதிஷா ரூபத்தில் கேள்வியும் நானே () பதிலும் நானே.....
அதிஷாவின் மொக்கை கேள்வி ஒன்று : &!%$*&@
அதிஷாவின் மொக்கை பதில்: ஒது ஒரு பெரிய கதை. கண்டிப்பா நீங்கள் எல்லாம் இதை தெரிஞ்சிக்கணும். உலகத்துக்கு இது ஒரு முக்கியமான செய்தி. இந்த ---- link இல போயி இத படித்து வாழ்கையை மேன்படுதுங்க. மேலும் இந்த கதை கொஞ்சம் ஓவரா இருந்தா சொல்லுங்க, வேற எழுதிறேன்..என்ன, புரியுதா?
கே இ : %^*%#$
பதில் : நான் எழுதியதை படித்தபொழுது. அதாவது இப்பொழுது!
கே மூ :&*$#@
பதில்: மலை மேல் கால், கால் மேல் வால், வால் மேல் பால்! எப்படி punch!
கே நா : *&%##$@%
பதில்: கால் கிலோ பேப்பர்!
கே ஐ: *%#$@*&
பதில் : கீழ்பாக்கம் தவிர ஏர்வாடி பக்கம் உடனே வச்சிக்குவேன். ஒரே கோஷ்டி பாருங்க.
கே ஆ: $%#^*(%#
பதில் : பிடிக்காத விடயங்களை கேக்ககூடாது!
கே ஏ: %$^&^**)%
பதில்: மூளை. எனென்றால் அது இல்லாதவரைதான் எனக்கு பிடிக்கும்!
கே எ :^%$#&*(#$%&
பதில் : பிடித்தது : நான் புத்திசாலி என்று எல்லோரும் நினைப்பதாக நம்புவது
பிடிக்காதது : அப்படி இல்லை என்று எனக்கு எல்லோரும் சொல்லுவது
கே ஒ: &^%#%^%^ --- No Q&A for personal questions
கே ப : ^$&%*%((&
பதில்: அவரு பேரு உச்சிப்புரம் கோழிராசு - நான் சின்னபோதில உளறுவது எப்படின்னு எனக்கு class எடுத்தவரு. எங்க ஏரியாவுல அந்தகாலத்தில கொஞ்சம் பிரபலம்! நாட்டுக்கு ராஜா நாந்தான்னு தினமும் சொல்லுவாரு. மேலும் யாரோ அவரு டெல்லி மாளிகைல பூந்துட்டாங்கன்னு புலம்புவாரு. அப்பறம் டெல்லி பக்கம் போனவர்தான். அப்புறம் பாக்க முடியல. அவரு மட்டும் இருந்தார்னா என்ன பாத்து ரொம்ப சந்தோஷ படுவாறு....என்னத்த சொல்ல. நல்ல மனுஷன். சுத்தமா முளை இல்ல, என்ன மாதிரி!
கே பதி : ^$%#%$&^**&*&@
பதில்: ஏன்டா லூசு இந்த மாதிரி சம்மந்தமே இல்லாம என்ன கேள்வி இது? One minute... மன்னிக்கவும் நான்தான் கேள்விகேட்கிறேன் என்பதை மறந்து என்னியே திட்டிக்கொண்டேன்!
கே ப : *&^(*^*&%(*&(*^$#$#
பதில் : என் மண்டைக்குள்ளார யாராவது எப்பவும் பேசற மாதிரிதான் இருக்கும். பாடறமாதிரி எதுவும் இல்லியே! எதுக்கும் கொஞ்சம் கேட்டு சொல்றேன். கொஞ்ச நாள் பொறுங்க. எனக்கு வேண்டிய ஒருத்தரு லீவுல போயிருக்குராறு.
கே ப மூ : (**&(*^*&^(*^*&%*$#$@$
பதில்: ஐயோ கோழி அண்ணன் மட்டும் இருந்தார்னா என்னமா இந்த கேள்விக்கு பதில் கொடுப்பாரு! தலைவா போயிட்டியே.... வர்ணம்னா உனக்கு எவ்வளவு புடிக்கும்? கண்டத பொருக்கி தின்னு கலர்கலரா எப்படி வாந்தி எடுப்ப?ச்சே.--.....போயிட்டியே.....
கே ப நா : $#@$#$#$*&&^
பதில்: கோழி அண்ணன் நினைவுதான் இங்கேயும்! நானும் அவரும் ஒரு ரௌண்டு வந்தோமுன்னா ஒரு வாசன வரும்பாருங்க.......
கே ப ஐ: $@$$&^&*&(
பதில்:
கோழி அண்ணன் - என்னில் பாதி - என் ஆசான்
முட்டாள் முனியன் - பிரியமான தோழர்
கடா குமாரு - நாலாம் கிளாஸ் நாப்பது தடவ எழுதி என்னும் பாசாகல - சிறந்த விமர்சகர்.
பரமார்த்தகுரு மற்றும் அவரது சிஷியர்கள் - நண்பர்
மூளை உள்ள எவரும் - எதிரிகள்
இன்னைக்கு அவ்வளவுதான்...........
நன்றி
அன்பான திரு அதிஷா அவர்களே,
உங்களுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளார்கள் போலிருக்கு! அதுவும் மேல் மாடி காலியானவர்கள் கோஷ்டி. அதான் ஓரிருவர் நீங்கள் எழுதிய இந்த ஊசிப்போன உப்புமாவை ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
அதிலும் இந்த திரு அன்பு என்ற ஒரு சொம்பு சொக்கிப்போய் சொல்லியிருக்கு, கலக்கல் பதில்களாம் உங்கள் கசடுகள்!
ஐயா மேதகு திரு அன்பு, உங்கள் மேல் மாடியில் உள்ளே, மூளைக்குள்ளே, கார்டெக்ஸ் எனும் பகுதியில் frontal Lobe என்று ஒன்று இருக்கு. மூளையின் இந்த பகுதிதான் reasoning மற்றும் thinking skills போன்றவையை இயக்குகிறது. உங்கட்க்கு இந்த இடத்தில ஏதோ கோளாறு என்று இப்போது புரிகிறது! இல்லாவிட்டால், இந்த கொடுமைக்கு இப்படி சிலாகித்து போய் ஒரு பதில் பதிவு போட்டிருப்பீர்களா அல்லது இதே அபத்தமான கேள்விகளை மறுபடியும் உங்கள் தளத்தில் இட்டு அதற்க்கு அண்ணன் திரு அதிஷா அலப்பிய மடத்தனமான மொக்கைகளை காட்டிலும் நாலு மடங்கு மட்டமான பதில்களை எழுதி தள்ளியிருப்பீர்களா?
ஐயா சின்ன பெரியவரே, உங்க வயசில ஒழுங்க படிக்க வேண்டியது நிறைய இருக்கு. அதை விட்டுபுட்டு ஒரு முட்டாள்தனமான தளத்தை உருவாக்கி அதில் பைத்தியக்காரத்தனமான கட்டுரைகளை எழுதி தள்ளுகிறீர்களே? உங்களுக்கு அவ்வளவு வேலை இல்லா திண்டாட்டம் இருந்தா சொல்லுங்க, நான் பார்த்து ஏற்பாடு செய்கிறேன்!
திரு அதிஷா அவர்களின் எழுத்துகள் கொடுமை என்றால், திரு அன்பு அவர்களின் கிறுக்கல்கள் கொடுமையிலும் கொடுமை!
எங்கிருந்து Sir இப்படி விதம் விதமா கிளம்பி வரிங்க?
நன்றி
//போன வாரம் எனது எழுபத்திரெண்டாவது காதலிக்கு திருமணம் நடந்த போது அவளை கட்டிக்கொள்ள போகின்றவனை நினைத்து அழுதேன்.//
எனது வருத்தங்களும்... ))))
நல்ல நக்கல் பதில்கள்.
Post a Comment