Pages

18 January 2013

புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்




ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சி தொடங்கிவிட்டால் போச்சு! கடந்த சில ஆண்டுகளாக நூலார்வம் அதிகமாகி ஓவராகி மேலோங்கி அந்த பத்துநாட்கள் மட்டும் உலகில் இருக்கிற எல்லா புத்தகங்களையும் வாசித்துவிட ஆர்வம் வந்துவிடும். அதனாலேயே பார்க்கிற எல்லா புத்தகங்களையும் வாங்கி வாங்கி குவித்துவிடுவது.

கண்காட்சி முடிந்து இரண்டு நாட்களுக்கு மேலும் கூட இந்த வாசிப்பார்வம் நீடிப்பதுண்டு. ஆனால் அது மூன்றாவது நாளிலிருந்து பழைய நிலைக்கே திரும்பிவிடும்.

நிறைய சினிமாவும் டிவியும் நண்பர்களோடு வெட்டி அரட்டையும் இணையமும் நேரத்தை விழுங்க... புஸ்தகமா..? அதெல்லாம் படிக்க எங்க சார் நேரம் என்கிற எண்ணம் வந்துவிடும். புத்தக விஷயத்தில் மட்டும்தான் நமக்கெல்லாம் நேரமின்மை வந்துவிடுகிறது.

அந்த பத்துநாள் ஆர்வகுறுகுறுப்பில் வாங்கி குவித்த புத்தகங்கள் யாராவது என்னை படிங்களேன் முட்டாப்பசங்களா என்று திட்டிக்கொண்டே மூலையில் காத்திருக்கும்.

மூன்றாண்டுகளாக இந்த புத்தக காட்சி ஆர்வத்தில் வாங்கி குவித்த புத்தகங்கள் மட்டுமே குறைந்தது 500 ஆவது தேறும். அதில் ஐந்து சதவீதமாவது படித்திருந்தாலும் கூட ஆச்சர்யம்தான்.

சென்ற ஆண்டு படித்த புத்தகங்கள் என்று என்னுடைய பாசத்திருகுரிய அன்புத்தம்பி வண்ணநிழலன் வேதாளம் ஒரு பட்டியலை போட்டிருந்தான். அடேங்கப்பா எவ்வளவு படிக்கிறான். ஆச்சர்யமாக இருந்தது. என்னிடமும் அந்த புத்தகங்கள் எல்லாமே இருக்கின்றன. ஆனால் அதில் ஒருசிலவற்றை தவிர எதையுமே படிக்கவில்லை. கொஞ்சம் பப்பிஷேமாகத்தான் இருந்தது.

இதோ இந்த ஆண்டு கண்காட்சியும் தொடங்கிவிட்டது. முதல்நாளே போய் ஒரு சுற்று பார்த்தும் வந்தாகிவிட்டது. அதே பழைய ஆர்வகுறுகுறுப்பு மீண்டும் தலைதூக்க... பார்க்கிற புத்தகங்களையெல்லாம் வாங்கி வைத்துக்கொள்ள நினைக்கும் கொலைவெறி கம்மிங் எகெய்ன்! ஆனால் இந்தமுறை ஐந்து புத்தகங்களுக்கு மேல் வாங்கிப்போவதில்லை. இதுவரை வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும்.... அட்லீஸ்ட் பாதியையாவது படித்து முடிக்கும் வரை புத்தகங்கள் எதையும் வாங்கப்போவதில்லை என முடிவெடுத்திருகிறேன்.

அதற்காக புத்தக கண்காட்சிக்கு போகாமல் இருக்கப்போவதில்லை. இந்த முறை வேடிக்கை மட்டுமே பார்க்க உத்தேசம்.