31 March 2009
இரண்டு வார்த்தை கதைகள் பத்து!
30 March 2009
இன்கமிங் ஃப்ரீ - அவுட்கோயிங் நீ !
உனக்கு போன் செய்வதில்
இப்போது சிக்கல் இருக்கிறது.
உனது கணவன் இரவுப் பணிக்குசென்றிருப்பானா
அல்லதுபகல் நேரப் பணி முடித்துதிரும்பி விட்டானா தெரியவில்லை..
இரு ந்தாலும் இது ஒன்றும்பெரிய பிரச்சினை இல்லைதான்..
உன்னைப்பொருத்தவரை!
ஆமாண்டி,தெரியலடி,ஆவாதடிஎன உனது தோழியிடம்பேசுவதுபோல,
நான் ஒன்றுபேசநீ ஒன்று பேசி வைத்துவிடுவாய்.
உனக்கு போன் செய்வதிலான சிக்கல்
"மனைவியின் கள்ளக்காதலனைவெட்டிக்கொன்ற கணவன் "
என்கிற செய்தியை தினசரி ஒன்றில்படித்ததிலிருந்துதான் !
இதற்க்கெல்லாம் போயா பயம் ?
உள் மனது அவ்வப்போதுதட்டிக்கொடுத்தாலும்
திருட்டு மாங்காய்க்கு ருசிதனிதான் கண்மணி.
எப்படியோ மனதை திடப்படுத்திஉனக்கு ரிங் அடித்தேன்.
"இன்னிக்குத்தான் குளித்தேன்நாலு நாளு போவட்டும் "என்கிறாய் !
போச்சாது போ!
19 March 2009
யாவரும் நலம் - ஆவி வந்த டிவி!
படத்தின் நல்லதே இல்லையா? எல்லோரும் படம் அருமை என்கிறார்களே என்று நீங்கள் கேட்கக்கூடும். இருக்கிறது . கடைசியாக வெளியான உருவம் படத்திற்கு பிறகு குடும்பத்தோடு கண்டுரசிக்க(?) ஒரு ''குடும்பப்பேய்படம்'' வரவேயில்லை. இதைவிட வேறு என்ன வேண்டும் படத்தின் வெற்றிக்கு. அதிலும் சுத்தியலால் ஒரு குடும்பத்தையே அடித்துக்கொல்லும் அற்புதக்காட்சிகள் நிறைந்தபடம். அதுதவிர மைடியர் லிசா,13ஆம் நம்பர் வீடு,நாளைய மனிதன்,உருவம்,ராசாத்தி வரும்நாள், ஈவில் டெட் 12345 ( பலர் டெக்கில் பார்த்திருக்கக்கூடும்), இப்படிப்பட்ட படங்கள் பார்த்த ஒரு தலைமுறைக்கு இப்படிப்பட்ட படங்களே தற்காலத்தில் வருவதில்லையே என்கிற ஏக்கமும் காரணமாய் இருக்கலாம்.
பேய்பட ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்குமா என்றால் கேள்விக்குறிதான். ஆனால் குடும்பத்தோடு மெகாசீரியல் பார்க்க பிடிக்கும் குடும்பஸ்தர்களுக்கு கட்டாயம் இந்தப் படம் பிடிக்கும். பேய்படங்கள் பார்த்து வெகுநாட்களாகிவிட்டதாலும் அந்த GENREல் அதிகம் படங்கள் தமிழில் வெளிவராததாலும் சர்க்கரை இல்லாத ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரை.
18 March 2009
எ.வீ.ஜ-4 - குல்பிஐஸும் லேசாப்பறந்த மனசும்
மதீனா அக்காவை எனக்கு மிகமிக பிடிக்கும். பண்பானவர்,பாசமுடன் பழகுபவர். ஆறுவயதிலிருந்தே அவரை எனக்குத்தெரியும். கோவை கோட்டைமேட்டில் வந்து பிரியாணி மாஸ்டர் மதீனா யார் எனக் கேட்டால் அனைவருக்கும் தெரிந்திருக்கும். என் அம்மாவின் தோழி. அவரோடு பேசுவது ஏனோ எனக்கு விபரம் தெரிந்தவரை யாருக்குமே பிடித்ததில்லை. அதோட சேராத நீயும் அதா மாறிடுவே என்று நண்பர்கள் சிறுவயதில் பயமுறுத்தியது இன்றும் ஞாபகம் இருக்கிறது. அவருக்கு 50 வயதிருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. அவர் ஒரு அராவணி அல்லது திருநங்கை என்பது எனக்கு 16-17 வயதில்தான் தெரிந்தது. அது தெரிந்த பின் ஏனோ எனக்கும் அவருக்குமான உறவில் விரிசல் உண்டாகியிருக்கலாம். திருநங்கைகள் குறித்த போதிய அறிவின்மையும் ஒரு காரணம்.
இந்த அமைப்பு திருநங்கைகளுக்காகவும் , மூன்றாம் பாலினத்தவர் குறித்த பிரச்சனைகளை அறிந்து கொள்ளவும் , பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் பாலின மாற்றம் தெரிந்தால் அது குறித்த தகவல்கள் பெறவும் ஒரு ஹெல்ப் லைனை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த ஹெல்ப் லைன் அனைவருக்குமானது. திருநங்கைகள் குறித்த சமூகத்தின் தெளிவில்லாத நிலையிலிருந்து அவர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஹெல்ப் லைன் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. திருநங்கைகளும் சகமனிதர்களே என்பதாக அறிவிக்கும் பல விளம்பரங்களையும் அந்த அமைப்பின் பேனர்களில் காண முடிந்தது. அனைவரும் கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டிய எண்களில் ஒன்றாக இது இருக்க வேண்டும் . அந்த எண் 044-25990505 . (பாலபாரதி அவர்களின் பதிவில் ஏற்கனவே இது குறித்து கூறியிருந்தாலும் நல்ல விடயமாகத்தோன்றியதால் இங்கேயும்.)
'' லேசாப்பறக்குது மனசு '' இதுதான் இப்போதைக்கு மிகப்பிடித்தமான பாடலாக இருக்கிறது. ஊரெல்லாம் அதுதான் ஓலிக்கிறதோ? . முதல் முறை கேட்டதிலிருந்தே அந்தப் பாடல் பைக்கில்,வீட்டில்,சாப்பிடும்போது,தூங்கும்போது,எழுதும்போது எப்போதும் லேசாக மனதுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. வெண்ணிலா கபடிக் குழு திரைப்பட பாடல் அது. பாடலின் இசைக்கும் அல்லது ராகத்திற்கும்(!) பாடல் வரிகளுக்குமான அழகான தொடர்பு அந்த பாடலில். இப்படி பாடல்வரிகளுக்கும் அதன் ராகத்திற்குமான தொடர்புடைய பாடல் ஒன்று காதோடுதான் நான் பாடுவேன்,கீரவாணி... இன்னும் பல இருக்கிறது.
வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் பார்த்தேன். வெகுநாளைக்கு பிறகு ஒரு நல்ல திரைப்படம் பார்த்த திருப்தி. இதற்கு முன் மொழி அப்படி ஒரு திருப்தியை அளித்திருந்தது. முதல் காட்சியில் புதர்களுக்கு நடுவில் ஆய் போய்கொண்டே ஊர்கதை பேசும் காட்சியிலேயே படத்தின் வெற்றி துவங்கிவிட்டது. கறிசோற்றை அள்ளித்தரும் அம்மாவின் கிராமத்தில் வளர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு தெனாவெட்டான குசும்பான எகத்தாளமான நண்பர் குழாமும் , திருவிழாவிற்கு திருவிழா காணும் காதலியுமாய்.... அடேங்கப்பா! சூப்பர்யா.. கிழிச்சுட்டாய்ங்க.. பருத்திவீரனைவிட இந்த படத்தில் வரும் கிராமம் இயல்பாய் இருந்ததாய் தோன்றியது.
சென்றவாரம் ரமணியோடு ஸ்பென்சர்ஸ் சென்றிருந்தேன். இப்போதெல்லாம் அவளுக்கு ஏனோ ஸ்பென்சர்ஸ் பிடிப்பதில்லை. அதை ஒரு இரண்டாம்தர ஷாப்பிங் காம்பிலக்ஸாக பார்க்கிறாள். அவளது சாய்ஸ் சிட்டி சென்டர்தான். நமக்கு பட்ஜெட் தாங்காது. பர்ஸ் அது வைக்கும் இடமும் சேர்த்து பழுத்துவிடும் . அதனால் எப்போதும் என் சாய்ஸ் ஸ்பென்சர்தான். ஸ்பென்சர்சஸில் உள்ளே நுழைந்ததும் ஒரு திண்பண்ட கடை இருக்கும் கவனித்திருக்கிறீர்களா? அங்கே வெணிலா ஐஸ்கிரீம் மிக அருமையாக இருக்கிறது. குறைந்த விலை நிறைந்த தரம் . 15 ரூபாய் ஒன்று. காசு குறைவாக இருந்தாலும் கடலை போட உதவும்.
சிறுவயதில் பால்ஐஸ் என்று ஒன்று விற்கும். எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. மொழுமொழுவென வெள்ளைவெளேரென இருக்கும். எழுதில் உருகிவிடும் (குல்பியைப்போல ஆனால் வேறு சுவையில்) . கையெல்லாம் வழிந்து புறங்கையில் ஒழுகி ஓடும். அதையும் விடாமல் நக்கி தின்றிருக்கிறேன். 10 பைசாவிற்கு விற்கும் போது சாப்பிட ஆரம்பித்து ஓரு ரூபாய் வரைக்கும் விலை உயர்ந்தது வரை சாப்பிட்டிருக்கிறேன். எனது குடும்பத்தின் நகரம் நோக்கிய பெயர்தலால் அதைப்பற்றிய இப்போதைய நிலை தெரியவில்லை. மறைந்து போயிருக்கலாம். ரோட்டில் விற்றுச்செல்லும் ஐஸ்வண்ட்டிக்காரர்களை பார்க்கும் போதெல்லாம் எப்போதும் கேட்டு வைப்பேன் பால் ஐஸ் இருக்கா என.. அவனும் வெணிலா இருக்கு வேண்டுமா என்பான்.. வேண்டாம் என திரும்பி விடுவேன்.
தூக்கம் வராத பின்னிரவில் அதாவது 2 மணி சுமாருக்கு மொட்டைமாடியில் உலாத்திக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் அடிக்கடி இரவு நேரத்தில் தூக்கம் வருவதில்லை. ரோட்டில் ஒரு ஐஸ்வண்டிக்காரன் தனியாக சென்று கொண்டிருந்தான். அட நம்ம பாலு அண்ணே என்று நினைத்து 'என்ன அண்ணே இந்த நேரத்தில என்றேன் , பிஸினஸ்டா என்றார். சிட்டில இந்த 2 மணிக்கு கூடவா குல்பி தின்றாங்க என்றேன் ... ''தம்பி உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைல ஆகட்டும் புரியும்னாரு'', மிட்நைட் குல்பி மற்றும் தூக்கம் வராத காரணம் விளங்கியது. அவர் தனது வண்டியின் முன்பக்கமிருந்த வண்டியின் மணியை ஆட்டியபடியே கிளம்பினார்.
சமீபகாலமாக பல இணையபக்கங்களிலும் அத்வானி ஃபார் பீ.எம் என்னும் விளம்பரம் காணமுடிந்தது. அந்த விளம்பரங்கள் கூகிள் சேவை வழங்குகிறதா? அல்லது தனியார் நிறுவனமோ , பிஜேபீயோ இணைந்து நடத்துகின்றனரா? இதற்கு பணம் கொடுக்கப்படுகிறதா? விபரம் தெரிந்தவர்கள் கூறலாம். என்ன எழவு கருமாந்திரமோ?
மார்ச் 16 பதிவரும் மிகநெருங்கிய நண்பருமான மலேசியாவைச்சேர்ந்த விக்னேஸ்வரன் பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு வாழ்த்துக்கள்.
வாராவாரம் ஜீவியில் பிரபலங்களின் நொங்கை பிதுக்கிக் கொண்டிருக்கிறார். பதிவர் நர்சிம். வாராவாரம் அவருக்கு வாழ்த்து சொல்ல முடியாது... அது உவப்பாக இருக்காது. மனிதர் வயதுக்கு வந்துவிட்டார். ஒரே வாழ்த்து கொஞ்சம் பெரிய நல்வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன். செமத்தியாக ஒரு கிக்ஸ்டார்ட் கிடைத்திருக்கிறது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள். நர்சிம்மைத் தொடர்ந்து மேலும் பல பதிவர்களும் மக்கள் அதிகம் படிக்கும் வார,மாத இதழ்களில் எழுத எல்லாம் வல்ல தமிழ்மணேஸ்வரனை வேண்டுகிறேன்.
தமிழ்மணத்தில் கொஞ்சகாலமாக சூடான இடுகைகளில் எனது பதிவு நெருக்கி அடித்துக்கொண்டு கஷ்டப்பட்டு வந்து கொண்டிருந்தது. சென்ற பதிவு போட்டதும் சூடாகிவிட்டது. ஒரு வேளை இதுவரை தமிழ்மணம் என் மீது விதித்திருந்த தடையை தளர்த்தியுள்ளதோ என்னவோ? தமிழ்மணத்திற்கு மிக்க நன்றி.
16 March 2009
நிராகரிப்பின் வலி..
13 March 2009
டக்வொர்த் லூயிஸ் முறை - உருவானகதையும் எளிய விளக்கமும்
அதைக்குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வமும் , பொறுமையும் இருப்பவர்கள் மட்டும் தொடர்ந்து வாசிக்கலாம்.
முதலில் சில அஸ்திவார குறிப்புகள்.
*இரண்டு அணிகளும் குறைந்தது 20 ஓவர்களாவது விளையாடினால் மட்டுமே டி/எல் முறை கணக்கிலெடுக்கப்படும்
எ.வீ.ஜ-3 - சேவக்கின் சிக்ஸர் மழையும் பில்லுபார்பரும்...
ஒரு குறள் -
பீலி பெய்சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.
பா.ராகவனின் 'எக்ஸலன்ட்' புத்தகம் வாசித்தேன். வான்கோழி,தேனீ,ஆடு போல இது தன்னம்பிக்கை வளர்ப்பு புத்தகம். புத்தகம் எக்ஸலன்ட் என்று சொல்ல இயலாவிட்டாலும் நன்று. புத்தகம் நெடுக உன்னதம் என்கிற வார்த்தையை பயன்படுத்தியிருந்தாலும் ஏனோ ஆங்கிலத்தில் எக்ஸலன்ட் என்று தலைப்பு. இது போன்ற புத்தகங்களில் பல நிஜவாழ்க்கை வெற்றிநாயகர்களின் கதைகள் இடம் பெறும். புத்தகம் முழுக்க வெற்றி நாயகர்களாய் அவர் சித்தரிக்கும் பலருடனும் எனக்கு விமர்சனங்கள் உண்டு. அது மிகப்பெரிய பிரச்சனை. அது பிறகு. ஆனால் புத்தகமெங்கும் பாராவின் அடாவடி நடை. எழுத்திலேயே ஹீரோயிசம் காட்டுகிறார். இந்த புத்தகம் மட்டுமல்ல அவருடைய பெரும்பாலான புத்தகங்களில் நான் கவனிக்கின்ற ஒரு விடயமது. தொடை தட்டி மீசை முறுக்கிக் கொண்டு தூள் படத்தில் விக்ரம் பேசுவாரே அது போன்றதொரு தொணியில் எழுதுபவர். சமயங்களில் படிக்கும் நமக்கு ஏக கடுப்பாகிறது. யோவ் போதும்யா நிறுத்துயா என திருப்பி திட்டிவிட தோன்றுகிறது. அவரைப்போலவே அவரது பாணியை பின்பற்றி எழுதும் கிழக்கின் பிற புத்தகங்களிலும் அதே மாதிரியான நடையையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். அது ஒரு வித சலிப்பை உண்டாக்குகிறதோ என்றே தோன்றுகிறது.
பா.ராகவனின் ' எக்ஸலன்ட்' புத்தகத்தில் இருந்து
''எத்தனை பெரிய வெற்றியாக இருந்தாலும் மனிதகுலத்துக்கு அதனால் உபயோகமில்லாவிட்டால் அது ஒர் உன்னத சாதனையாக கருதப்படாது''
சகாயவிலையில் நூல்கள் கிடைக்கும் இந்த புத்தகக்கண்காட்சி ஏனோ மயிலாப்பூர்,மடிப்பாக்கம் இப்போது டிநகர்(மாம்பலம் மிக மிக அருகில் , அடுத்து தி.கேணியாக இருக்கலாம் ) என சென்னையின் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நடைபெறுவதை கவனிக்க முடிந்தது. அந்த இடங்களைக் குறித்து நான் அதிகம் சொல்லத்தேவையில்லை. அவாள்கள் சாரி சாரி , அவர்கள் மட்டும்தான் அதிகம் புத்தகம் வாங்குகிறார்களா? அவாளுக்குத்தான் (புத்தகம்) வாங்கும் சக்தி அதிகமிருக்கிறதா? மற்றவர்கள் புத்தகங்கள் வாங்குவதில்லையா? என்னமோ..
நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் நேற்று காலமானார். சுருளிராஜன் மற்றும் கவுண்டமணியோடு இணைந்து அவர் செய்த காமெடிகள் மிக அற்புதமானவை. அவ்வையார் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,இந்தி உட்பட பல மொழிகளிலும் 1500 படங்களுக்கும் மேல் நடித்தவர். ஆங்கிலபடமொன்றிலும் நடித்திருக்கிறார். அவரது மறைவுக்கு பதிவர்கள் சார்பாக அஞ்சலிகள்.
12 March 2009
குட்டிக்குட்டியா இரண்டு...........!
''அப்பா , நாம வேர்ல்ட் டூர் போயிட்டு வந்ததிலிருந்து ஏன் என்னோட சரியாவே பேசமாட்டேன்றீங்க'' கையில் தனது இரவு உணவை முகர்ந்துகொண்டே வினவினாள் அவள்.
''பிடிக்கலைமா.. அங்க போயிட்டுவந்ததிலிருந்து உன் போக்கே எனக்கு பிடிக்கலைமா'' மணிரத்னம் படபாணியில் பதில் சொன்னார் அப்பா தன் நீலக்கண்களை உருட்டியபடி.
''ஏன்ப்பா பிடிக்கலை, அவனுக்கு என்ன குறைச்சல் நல்லா மூக்கும் முளியுமா.. நல்ல கலரா.. உடம்புல எந்த குறைபாடும் இல்லாம நல்லாத்தானே இருக்கான்.. வேற என்ன எதிர்பார்க்கறீங்க''
''அவனும் அவன் பேச்சும் செயலும்... நம் இனம் குறித்த அவன் பார்வையும் சரியே இல்லமா.. நம்ம இனத்தை ரொம்ப கேவலமா நினைக்கிறான்.. அவனும் அவன் காதும் மூக்கும்..சகிக்கல''
''அப்பா இனம் என்னப்பா இனம் நாம எல்லாருக்கும் உயிர் ஒன்னுதானே, வெறும் உடம்பு அழகுதான் முக்கியமா?''
''ஆயிரம்தான் இருந்தாலும் அவன் அந்நியன்மா''
''அப்பா இதுக்கு பேரு காதல்னு அவன் சொன்னான்... அப்படி ஒன்னு இருப்பதையே அவன் சொல்லித்தானே எனக்கு தெரியும் . உண்மையான காதலை எனக்கு உணர்த்தினவன் அவன்தான்ப்பா.. என்னால அவன் இல்லாம வாழவே முடியாதுப்பா''
''காதலாம் காதல்.. அவன் இனத்திற்கு அப்படி ஒன்னு இருக்கறது தெரிஞ்சிருந்தா அழிஞ்சு போயிருக்க மாட்டாங்க''
''சரி விடுங்க நான் எவ்ளோ சொன்னாலும் கேக்கமாட்டீங்க , நான் வாழ்ந்தா அவனோடதான்ப்பா வாழ்வேன்.. இதுதான் என் இறுதி முடிவு''
''உனக்கு நம் இனத்தோட சட்டம் தெரியுமில்லை... அந்நியர்கள காதலிக்கவோ அவர்களோட உறவு வச்சுக்கவோ கூடாதுனு தெரியாதா?, அதுவுமில்லாம அவங்க இடத்தோட சீதோஷ்ண நிலை உனக்கு சரியாவராதுமா.. நீ செத்துடுவம்மா...புரிஞ்சுக்கோ''
''என் உயிரே போனாலும் எனக்கு கவலையில்லப்பா நான் அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் . மனசும் மனசும் ஒன்னு சேர்ந்த பிறகு சட்டம்,வானிலையும் என்ன செஞ்சுடும்''
''வேற இனமா இருந்தாக் கூட நம்ம தலைவர் ஒத்துப்பாரு.. ஆனா அவன் இனம் மிக மோசமானது.. அவங்க கிரகத்தில ஓசோனில் ஓட்டை போட்டவங்க.. நீர்வளத்தை முழுசா வீணாக்கினவங்க.. அவனை நம் கிரகத்தில் கூட அனுமதிக்க முடியாதம்மா... அவர்களது நிலம் வெப்பமடைந்து உச்சமடைந்து விட்டது...இன்னும் கொஞ்சநாள்ல பூமிக்கிரகம் அழிஞ்சிரும்மா.. அது நாளைக்கே கூட நடக்கலாம்...''
''இதுக்கு மேல் ஏதும் பேசாதீங்கப்பா..நான் ஒரு விநாடியேனும் அவரோடு வாழ்ந்து மடிகிறேன்... நான் போகிறேன்''
T-LEXI என்னும் செவ்வாய்கிரகவாசியான அவள் நினைத்தமாத்திரத்தில் நினைத்த இடத்திற்குச் செல்லும் டெலிடிரான்ஸ்போர்ட்டிங்ல் மிப்ளமோ பட்டம் பெற்றவள். உடனடியாக அதை பயன்படுத்தி பூமியில் இருக்கும் வினோவை நோக்கி தன் உடலை செலுத்தினாள்.
************************************************************************************
வெள்ளைக்கொசுவும் அதன் குசுவும்
தடதடதடதடதடதட ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
அந்த விண்கலம் தட்டையாகவும் இல்லாமல், வட்டமாகவும் இல்லாமல் ஒரு அகோணமாக அதவாது உருவமென்று சொல்ல இயலாத ஒரு உடைந்து போன கல்லைப்போல சுழன்று கொண்டே தரையில் இறங்கியது. இறங்கும்போதே தன் உடலைச்சுற்றிலும் சிலநூறு கால்களை சிலந்திபோல இறக்கிக்கொண்டே வந்தது.
அந்த விண்கலத்திற்கு முன்பக்கம் என்று ஏதும் இருந்திருக்கவில்லை. ஏதோ ஒரு பக்கத்தில் இருந்து ஒரு வெள்ளை நிற ஒளி தகதகவென அடித்து விரட்ட .. அந்த விண்கலம் காரித்துப்பியதைப்போல நாலைந்து குட்டிகுட்டி ஜந்துக்கள் எகிறி குதித்தன.
முதல் பச்சை நிற ஜந்து சொன்னது '' கேட்டீ இந்த கிரகம் ரொம்ப நல்லாருக்கே.. நல்ல மணம் வீசுது.. உயிர்கள் இருக்கறதுக்கான அறிகுறிதான் தெரியல''
''ஆமாம் ஜேட்டீ.. ஆனா ஆக்ஸிஜன் நிறைய இருக்கு.. நீரும் இருக்கு.. ஆனா ஒரு உயிர்கூட காணலையே''
''நம்ம தலைவரோட மகளும் ரீட்டீயும் இந்த கிரகத்துக்குத்தான் ஓடிவந்திருக்காங்க...உடனே தலைவருக்கு செய்தி அனுப்பு ''
டிக் டிக் டிக்... டிகிடிக் டிகிடிக் டிகிடிக்
''அனுப்பிட்டேன் மேட்டீ''
''மேட்டீ நம்ம தலைவர் இந்த அவங்களை என்ன பண்ணுவாரு''
''என்ன பண்ணுவாரு ஏற்கனவே புடிச்ச கிரீட்டீ.ஜீட்டீ...மீட்டோடீ மாதிரி இந்த ரீட்டீயையும் கொன்னுருவாரு... நமக்கு பதவி பட்டம் எல்லாம் உண்டு கவலைப்படாதே.. மறுபடியும் தலைவர் மகள் யாரோடவாவது ஓடிட்டா மறுபடியும் விரட்டனும்.. ம்ம் என்ன காதலோ..''
''ம்ம் இந்த அற்புதமான கிரகத்திற்காவது என்னை தளபதியாக்கனும்.. அப்படிமட்டும் ஆக்கிட்டா நான் என் மனைவிய இங்கயே கூட்டிட்டு வந்து ஜாலியா இருப்பேன்.. தலைவர் மகள விரட்டவேண்டிய வேலை இருக்காது '' மனதிற்குள் அவங்க ஊரு அதிருட்டிஆயியிடம் வேண்டிக்கொண்டிருந்தான் மேட்டீ அவனுக்கு ஏதோ கெட்ட நாற்றம் வருதைப்போல இருந்தது.
அது என்ன நாற்றம் என சுற்றும் முற்றும் பார்ப்பதற்குள் அவர்களை நோக்கி நிறைய விஷதுகள்கள் அடங்கிய பலமான காற்று புயல் வேகத்தில் வீசியது. அதில் அந்த விண்கலம் உட்பட அனைவரும் வெடித்து சிதறினர்.
''எந்த மனுசனோட ரத்தத்தை குடிச்சனோ.. வயிறே சரியில்ல.. இப்பதான் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கு..ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...'' என்றபடியே பறந்துசென்றது அந்த வெள்ளைக்கொசு. ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் என சத்தமிட்டபடியே...தனது காதலியைத் தேடி பறக்கத்துவங்கியது.
08 March 2009
எ.வீ.ஜ-2 - ஜே.கே.ரித்தீஷ்,கிரிக்கெட்,அப்துல் ஜப்பார் மற்றும் பலர்
எதிர்வீட்டு ஜன்னல்கள் - 2
பலமுறை சொல்லியும் கேளாமல் அளவுக்கதிகமான அன்போடு தனது நட்சத்திர வாரத்தில் எனக்காக ஒரு பதிவிட்டு வாழ்த்துச்சொன்ன வால்பையனுக்கு - நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு . நேரிலும் போனிலும் மின்னஞ்சலிலும் ஆர்குட்டிலும் வால்பையன் பதிவிலும் எனது கடைசி பதிவிலும் எனக்கு வாழ்த்துச்சொல்லிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி.
05 March 2009
எதிர்வீட்டு ஜன்னல்கள் - 1
சமீபகாலமாக நமது வலைப்பூவிற்கு பின்னூட்டங்கள் குறைந்துவிட்டதென ஒரு வாசகர் மிகவும் வருத்தத்தோடு சொன்னார். அதற்கு காரணத்தையும் அவரே சொன்னார். நான் யாருக்கும் பின்னூட்டம் போடாததால் யாருமே எனக்கு போடுவதில்லை என்று. பின்னூட்டம் என்றால் என்னவென்று இதுவரைக்கும் எனக்கு புரியவேயில்லை. அது தவிர எனக்கு தற்காலத்தில் கணினி கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கிறது இதில் பதிவை படிக்கவே ஆர்வம் அதிகமாக இருக்கிறது. பின்னூட்டம் குறித்து விபரம் தெரிந்தவர்கள் தனிமடலில் சொல்லலாம்.
04 March 2009
இன்னும் சாகவில்லையே..!
''இறந்தபின் நமது புனிதமான ஆத்மா என்ன ஆகும்?''
''அதை ஏன் என்னிடம் கேட்கிறாய் ''
''நீங்கள் முக்காலமும் உணர்ந்த துறவியாயிற்றே''
''உண்மைதான்.. ஆனால் நான் இன்னும் சாகவில்லையே'' என்றார் துறவி புன்னகையோடு.
***********************************************