30 August 2008
என் ச்செல்ல ஹரிணி குட்டிக்கு.......
28 August 2008
கேள்விகளில்லா விடைகள் - சிறுகதை
கேள்விகளில்லா விடைகள் -
ஏழையின் கேள்விகளில் என்றும் பசியும் வலியும் நிறைந்திருக்கும் , அவனது கேள்விகள் விடையில்லா கேள்விகள் , அவனது கேள்விகளுக்கு பெரும்பாலும் போதிய விடைகள் கிடைப்பதில்லை , அவனது ஏக்கமும் வெறுமையும் சாகும் வரை நீடிப்பதை போல ,
அழுக்கடைந்த சட்டைகளும், கரைபடிந்த வேட்டிகளுடன் , காலை உணவாய் ஆளுக்கொரு பீடியை பற்றவைத்த படி , லாரி நிறைய அடைக்கப்பட்ட அடிமாடுகள் போல , ஒரு லாரியின் பின்னே குந்தவைத்து அமர்ந்து கொண்டு இரவெல்லாம் பயணித்து இதோ அடைந்துவிட்டோம் எங்களுக்கும் தண்ணீர் வேண்டி போராட்டமிட்டு அச்சிங்கார நகரத்தில் இனி கழிக்க போகும் நாட்களை எண்ணிய படி நான் .மனதில் ஆயிரம் கேள்விகள் ,
எனது கேள்விகளும் அப்படித்தான் தொடங்கியது , நான் மட்டுமல்ல மழையில்லா ஊரில் வாழும் எல்லா ஏழை விவசாயியின் மனதிலும் எழும் அதே விடையில்லா கேள்விகள், உன்மத்த மழையை இப்போதெல்லாம் நம்ப முடிவதில்லை அது நகரங்களில் அதிகமாயும் கிராமங்களில் குறைவாயும் பெய்து தனது விரகத்தை தீர்த்து கொள்கிறது .
''அப்பா நீ எங்க போற? '' கேள்விகளின் குழந்தை எனது லட்சுமி
''ஏண்டி போம்போது எங்க போறணு கேக்கற , போற காரியம் விளங்குமா ? '' விடைகளின் கேள்வியாய் எனது பாதி ராஜி
''பாப்பா , அப்பா மெட்ராஸிக்கு போறேன்டா ''
''ஏன் போற ? ''
''குட்டி , நம்ம தோட்டத்துல தண்ணி இல்லாம , கருதுலாம் கருகி போதில்ல , அதுக்குதான்டா ''
''அதுக்கு ஏன் அங்க போற? '' என்னுள் பல கேள்விகளை அந்த ஒரு கேள்வி எழுப்பியது , எங்கோ ஆயிரம் கிலோ மீட்டருக்கப்பால் வராத தண்ணீருக்காய் நான் ஏன் செல்ல வேண்டுமென ,
''உன்ன அடுத்த வருஷம் டவுன் பள்ளிகொடத்தில படிக்க வக்கணும் , நல்ல கவுணு வாங்கோணும் , தினமும் உனக்கு ஆரஞ்சு முட்டாய் வாங்கித்தரணும் , ''
''அவ்ளோதானாப்பா ''
''வேற என்னடா குட்டிமா உனக்கு வேணும் ''
''தினமும் காலைல இட்டிலி , நீசு தண்ணி வேணாப்பா நல்லாவேல்ல , அப்பறம் கேக்கு , பன்னு,சாக்கிலேட்டு , சிலேட்டு , பென்சில்லு , அப்பறம் ம்ம்ம்ம்ம்ம் பிஸ்கட்டு ''
''சரிடா செல்லம்மா , அப்பா எல்லாம் வாங்கி தாரேன் '' என்று அந்த நம்பிக்கைகளின் குழந்தையை வாரி அணைக்க என் கண்களில் ஏனோ அர்த்தமில்லா கண்ணீர் .
''அப்பா , மெட்ராஸி எங்கருக்கு , ரொம்ப தொலவு போணுமா? சீக்கிரம் வந்துருவியா ? ''
''ஆமாடா பாப்பா , அப்பா போயிட்டு சீக்கிரமா வந்துருவேண்டா '' மடியில் படுத்திருக்கும் அந்த மழலை எனக்கு தனது நம்பிக்கையையே ஏமாற்றங்களின் நகரத்திற்கு செல்ல தரும் நம்பிக்கையாய் , குழந்தைகளின் கேள்விகள் எப்போதும் நம்பிக்கை சார்ந்தது .எப்படி கேட்பது என்ன கேட்பது தெரியாது , ஆனால் கேட்கவேண்டும் என்பது மட்டும் தெரியும் , வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் ஏதோ ஒரு சூழ்நிலையில் நாம் எதையாவது எப்போதும் கேட்டுக்கொண்டுதானிருக்கோறோம் , அது பொருளாகட்டும் அறிவாகட்டும் நாம் கேட்பது எப்போதுமே கிடைத்து விடுவதில்லை , நாம் எல்லோருமே அப்படித்தான் , கேட்டுகொண்டே இருக்கிறோம் , கேள்விகள் என்றுமே முடிவதில்லை , நாம் பிறந்த உடன் தொடங்கும் கேள்விகள் நம் இறப்பை தாண்டியும் தொடருகின்றன .
அந்த லாரி ஏதோ ஒரு ஆளில்லா டீக்கடையில் பொழுது புலரும் விடியலில் நிற்க அங்கே இறங்கி டீ அருந்த மனமும் வயிரும் ஆவலாய் இருந்தாலும் சட்டைபையிலிருந்த பத்து ரூபாய் பணத்தின் அருமையை மிக அருமையாய் உணர்த்தியது . நாவில் ஊரிய எச்சிலை முழுங்கியபடி அந்த கடையை பார்த்தபடி வரும் வழியில் பாதி அணைத்த பீடியை சட்டையில் தேடி பிடித்து மீண்டும் பற்ற வைத்துக்கொண்டேன் .
'' அண்ணே எத்தன மணிக்கு மெட்ராஸ் வரும் , ''
''ஏலேய் முருகா , நீ நிக்கறதே சென்னைதான்டா '' அதட்டினார் கோணார் அண்ண்ன் , எங்களின் ஆசான் , எங்களுக்காய் போராட எப்போதும் தயங்காதவர் , தள்ளாத வயதிலும் எங்களோடு வந்தவர் .
''அண்ணே , எத்தன மணிக்கு நாம போராட்டம் ஆரம்பிக்கறோம் ''
''அட எழவெடுத்தவனே , நீ இன்னுமா ஆரம்பிக்கல '' செவுளில் அறைவது போல கத்தினார் . அவர் பூடகமாய் கூறுவது ஏனோ புரியவில்லை .
வானுயர்ந்த கட்டிடங்களும் , காலை ஏழுமணிக்கே தொடங்கி விட்ட வாகன இரைச்சலுக்கு நடுவே , அண்ணா சிலையை தாண்டி ஒரு சிறிய குறுக்கு சந்தில் இருக்கும் சேரி போன்ற இடத்தில் அமைந்திருந்த ஒரு பூங்காவில் நாங்களேல்லாம் இறக்கப்பட்டோம் , அங்கிருந்த கரைபடிந்த சுவர்களின் நடுவே குளித்து முடித்து , கோணார் அண்ணன் செலவில் டீயும் பன்னும் மட்டும் தின்று விட்டு , அங்கிருந்த பூங்காவில் சிறிது நேரம் உலாவியபடி ...
''அப்பா , சீக்கிரம் வந்திருப்பா ''
''சரிடா குட்டி ''
''அப்ப்ப்ப்ப்பபா , நீ போகாத ''
''ஏண்டி சனியனே அபசகுனம் புடிச்ச மாதிரி பேசறே '' மனைவி அதட்டினாள் .
''அப்பா நானும் வரேன் , அப்பா நானும் '' விடாமல் கதறினாள் லட்சுமி
அந்த பிஞ்சு கைகளின் மெல்லிய விரல்கள் எனது கையை பற்றிய படி கதறியது , என் மனைவி அதட்டியபடி என் குட்டி லச்சுவை உள்ளே இழுத்துச்செல்ல , எனக்கு தொண்டை அடைத்தது,
பூங்காவில் நடந்தபடி என் குட்டிப்பெண்ணை ஒரு டாக்டரை போல ஒரு கலெக்டரை போல கற்பனை செய்தபடி , அவளுக்காய் ஊருக்கு செல்லும் போது பையிலிருந்த பத்து ரூபாயில் ஒரு குட்டி பொம்மையும் சில ஆரஞ்சு மிட்டாய்களும் வாங்க வேண்டுமென எண்ணியபடி அமர்ந்திருந்தேன்.
காலை ஒன்பது மணி தாண்டியது அங்கிருந்து நடந்தபடி அருகிலிருக்கும் மைதானம் அருகே செல்ல , அங்கே எங்களுக்கு முன்னால் மிக பிரமாண்டமான ஒரு கூட்டம் , எங்களுக்கு மிக மகிழ்ச்சியாய் இருந்தது , நம்மை போன்ற விவசாயிகள் மாபெரும் போரட்டம் நடத்துகின்றனர் என்று , அந்த கூட்டத்தின் அருகே நாங்கள் செல்ல செல்லதான் அது வேறு மாதிரியான போராட்டமென்று,
அங்கிருந்த கூட்டமும் விவசாயம் பற்றி துளியும் கவலையில்லா கூட்டமென அங்கே அருகில் சென்று பார்த்த பின்தான் உணர முடிந்தது , குளிருட்டப்பட்ட காரிலே கண்களை மறைக்கும் பெரிய அளவு கண்ணாடிகள் அணிந்த படி பல திரைப்பட நட்சத்திரங்களும் அங்கிருந்து இறங்க, அங்கிருந்த கூட்டம் அவர்களை நோக்கி முண்டியடித்து கொண்டு ஒட , நாங்களும் சிதறினோம் .
கோணார் அண்ணன் அங்கிருந்த காவல் அதிகாரிகளிடம் எவ்வளவோ முறையிட்டும், எங்களுக்கு அந்த இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி தர மறுத்துவிட்டனராம் , கோணார் அண்ணன் கோபக்காரர் , எங்களை ஒன்று திரட்டி அந்த பெருங்கூட்டத்தின் அருகிலேயே ஒரு சிறிய இடத்தில் எங்கள் பச்சை கொடிகளை கையிலேந்தியபடி , பெரிய ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு சிறிய பேனரை கையில் பிடித்த படி ,
'' தண்ணீர் வேண்டும் , தண்ணீர் வேண்டும் '' என உரக்க கத்தினோம் யாருக்கும் கேட்கவில்லை , அந்த நடிகர்களின் ஒலிபெருக்கி சப்தத்தில் , விடாமல் கோஷமிட்டோம் ,
யாருமே இங்கே நடப்பதை கவனிக்கவில்லை , போலீஸ் விரட்டியது , கோணார் அண்ணன் மறுத்தார் ,
தடியடி துவங்கியது , எனது கணுக்காலில் ஏதோ ஒரு காவல் அதிகாரி தன் கடமையை செய்ய ரத்தம் பெருக்கெடுத்தது , மயங்கி விழ என் காதுகளில் கடைசியாய் ஒலித்தது , அந்த பெரிய நடிகனின் வீர வசனங்கள்
'' ______ஆத்துல தண்ணி விட மறுக்கற _______மாநிலத்துகாரங்களை உதைக்க வேண்டாமா ''
கூட்டம் ஆர்பரித்தது , தலைவா என்றது , தெய்வமே என்றது ,
அவர்களது அந்த திரைப்பட ரசனையின் கத்தலினூடே எங்கள் கதறல் யாருக்கும் கேட்கவில்லை , எங்கள் கோஷம் எறும்பின் மரண ஓலமாய் ஒலித்தது , என் மனதில் ஆயிரமாயிரம் கேள்விகள் .
எனக்கு கணுக்காலில் வலித்தது , கோணார் அண்ணன் தூரத்தில் விழுந்தார் . பச்சை கொடிகளின் மேல் பலரும் நடந்து செல்ல என் கண்கள் இருட்டின .
நான் விழித்து பார்க்கையில் காலையில் அமர்ந்திருந்த பூங்காவின் ஒரு பெஞ்சில் , சுற்றி என்னைப் போல பல்லாயிரம் கனவுகளுடன் வந்திருந்த ஏழைகள் , என் சட்டைபை கிழிந்திருந்தது , அந்த பத்து ரூபாய் தொலைந்து விட்டது ,
கிழிந்து போன என் சட்டைப்பையோடு தொலைந்தது எனது பத்து ரூபாய் மட்டுமல்ல எங்கள் கனவுகளும்தான் நம்பிக்கையும்தான் .
ஏழையின் கேள்விகளில் என்றும் பசியும் வலியும் நிறைந்திருக்கும் , அவனது கேள்விகள் விடையில்லா கேள்விகள் , அவனது கேள்விகளுக்கு பெரும்பாலும் போதிய விடைகள் கிடைப்பதில்லை , அவனது ஏக்கமும் வெறுமையும் சாகும் வரை நீடிப்பதை போல .
27 August 2008
FLASH NEWS : பதிவர் பாலபாரதி ரகசியத்திருமணம் , ஆதாரங்கள் சிக்கின
இது பற்றிய பதிவு ஆதாரங்கள் வெளியாகின ;
மணமகனின் அறிவிப்பு ;
அவரது பதிவில் இங்கே
மணமகளின் அறிவிப்பு ;
அவரது பதிவில் இங்கே
மணமக்களுக்கு சக பதிவர்கள் மற்றும் வலையுலக நண்பர்கள் சார்பாக எனது திருமணவாழ்த்துக்கள்.
சகோதரி மலர்வனம் லட்சுமிக்கு அடிஸனல் வாழ்த்துக்கள்
26 August 2008
ரஜினியை தோற்கடித்த ஜே.கே.ரித்திஷ் - நாயகன் திரைப்பட அதிரடி சரவெடி விமர்சனம்
பல மாதங்களுக்கு முன்பே தயாராகி , தசாவதாரம்,குசேலன்,குருவி போன்ற பெரிய நட்சத்திரங்களின் படங்களின் வருகையால் , பல மாதங்கள் நல்ல திரையரங்குகளுக்காக காத்திருந்து சென்ற வாரம் வெளியாகியிருக்கிறது நாயகன் திரைப்படம் , எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி , ஜே.கே.ரித்திஷின் சேட்டைகளை மட்டுமே கண்டு ரசிப்பதற்காக மட்டுமே அந்த திரைப்படத்திற்கு செல்ல நேரிட்டது . அது தவிர இது ஆங்கிலத்தில் வெளியான CELLULAR திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி என்று நண்பர்கள் கூறியதால் , படத்தை பார்க்க வேண்டும் என்கின்ற ஆவல் அதிகமானது .
22 August 2008
முத்தம் சில்லென்று சில குறிப்புகள் மற்றும் கவிதைகள்
21 August 2008
பாலபாரதி,லக்கிலுக்,உண்மைத்தமிழன்,லதானந்த் மற்றும் சில பதிவர்கள் பற்றிய குட்டி செய்திகள் உங்களுக்காக
பாலபாரதி :
பதிவர் பாலபாரதி அவர்களின் '' அவன் - அது = அவள் '' புத்தக வெளியீட்டு விழா வரும் ஆகஸ்டு 31ம் தேதி நடைபெருகிறது . பதிவர்கள் அனைவரும் கட்டாயம் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் .
விழா குறித்த விபரங்கள் :
நூல் வெளியிடுபவர் :தோழர் ஆர்.நல்லக்கண்ணு
நூலினை பெற்றுக்கொள்பவர் :தோழி ரேவதி, திருநங்கை
வாழ்த்துரை :தோழர் ஆதவன் தீட்சண்யாதோழர் பாட்டாளி
ஏற்புரை : நூலாசிரியர் பாலபாரதி
நாள் : 31-08-2008, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி
இடம் : ஸ்ரீபார்வதி மினி ஹால்,28/160, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை,
சென்னை-18.(மியூசிக் வேர்ல்டு அருகில், கிழக்கு பதிப்பகம் எதிரில்)
இது ஒரு பதிவர் சந்திப்பாகவும் அமையும் என்பதால் அனைத்து பதிவுல நண்பர்களும் கட்டாயம் கலந்து கொள்ளவும் .
லக்கிலுக் :
பதிவர் லக்கிலுக் வரும் ஞாயிற்றுகிழமை( ஆகஸ்டு 24 ஆம் தியதி ) தனது ___ வது பிறந்தநாளை கொண்டாடினார் . அவருக்கு அனைத்து பதிவுலக நண்பர்கள் சார்பாக எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் . அவருக்கு பத்து-பத்து மற்றும் சுட்ட பழம் டிவிடி ஒன்று பரிசளிக்க எண்ணியுள்ளேன் .
(கோடிட்ட இடத்தை அவரே நிரப்பினால் நல்லது , சில உண்மைகள் சொல்லிவிடுவதை விடவும் மறைக்கப்படும் போது மிகஅழகாய் தோன்றும் )
உண்மைத்தமிழன் :
பதிவர் உண்மைத்தமிழன் அவர்கள் கடந்த ஒரு வாரமாக கடும் குளிர்காய்ச்சலால் அவதிகுள்ளாகி வருகிறார் . அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் பல நீண்ட பதிவுகளை இந்த பதிவுலகத்திற்கு சமர்ப்பிக்க எல்லாம் வல்ல எம்பெருமான் முருகனை அனைத்து பதிவர்கள் சார்பாக பிரார்த்திக்கிறேன் .
அவர் விரைவில் குணமடைய முருகப்பெருமான் அருள் புரியட்டும் .
லதானந்த் :
இந்த வாரக் குங்குமத்தில் லதானந்த் அவர்கள் எழுதிய படக்கதை ஒன்று வந்துள்ளது , அனைவரும் கட்டாயம் படித்து பயன் பெறவும்.
நான் பதிவுலகில் மிக அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் பதிவர்களில் மிக முக்கிய பதிவர் லதானந்த் அவர்கள் , நேற்று நான் எழுதிய எனது கதை குறித்த அவரது கருத்துகளை கேட்ட போது மிக நல்ல விடயங்களை பகிர்ந்து கொண்டார் அவை உங்கள் பார்வைக்கு ,
கடந்த வாரம் நான் எழுதிய இறுதி முத்தம் கதை குறித்து அவரது விமரிசனம் ,கதை நன்றாக இருக்கு. ,முத்தங்களைப் பத்தின மேலதிக விஷயங்களும் சரிதான். ஆனால் அவை தனிப் பதிவாக இருந்திருக்கணும். கதையின் கனத்தை லேச்சாக்கிவிட்டது . கதை நிகழிடம் இருக்கணும் . கதையின்மிக முக்கியமான வரி ஆரம்பத்தில் இருந்தா நல்லா இருக்கும் . உதாரணமா இந்தக் கதையின் ஆரம்ப வரி "தாயில்லா என் அன்பு மகள் ராஜி இன்னும் சில மணி நேரத்தில் செத்துப் போவாள் எனபதை நினைக்கும்போதே எல்லையில்லாத்துயரம் என்னைச் சூழ்கிறது" அப்பப் படிக்கிறவிங்களுக்கு ஒரு ஜெர்க் இருக்கும்
லதானந்த் அண்ணனின் அன்புக்கும் அவர் என மீது வைத்திருக்கும் அக்கறைக்கும் அவரது விமர்சனத்திற்கும் மிக்க நன்றி அண்ணா!! .
அவர் தனது மிக நீண்ட வலையுலக அறப்போரை கைவிட்டு விரைவில் மீண்டும் பல நல்ல பதிவுகளை எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.
பரிசல்காரன் :
பதிவர் பரிசல் காரன் தனது 11ஆம் ஆண்டு திருமண நாளை மிகச்சமீபத்தில் கொண்டாடினார் , அவருக்கு அனைத்து பதிவுல நண்பர்கள் சார்பாக எனது வாழ்த்துக்கள் . ( அவரு ஆளை பாத்தா குட்டி பையன் மாதிரி இருக்காரு கல்யாணமாகி 11 வருஷம் ஆன அங்கிள்னு சொன்னா நம்பவே முடியல ) . அவருக்கு அதிஷாவின் வாழ்த்துக்கள்.
டிபிசிடி :
பதிவர் டிபிசிடி அவரது குட்டி பெண்ணுக்காக ஒரு பிரபலமான வீடியோவை பல காலமாக தேடி வருகிறார் . அந்த வீடியோ ..
'' பூந்து பூந்து '' என சங்கர் மகாதேவன் பாடும் கின்லே(KINLEY MINERAL WATER) விளம்பரம் .
அந்த குட்டி பெண்ணுக்கு பதிவர்கள் உதவ வேண்டும் , இந்த வீடியோ குறித்து உங்களுக்கு தெரிந்தால் உடனடியாக பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் . குட்டிபாப்பவின் அன்பு முத்தங்கள் உங்களுக்கு பரிசாக மின்னஞ்சல் செய்யப்படும்
இட்லிவடை :
தமிழ்மணத்தில் மீண்டும் இட்லிவடையாரின் பதிவுகள் இடம் பெருகின்றன , என்ன காரணம் என தெரியவில்லை. சமீபகாலமாக இட்லிவடையின் மவுசு வலையுலகில் குறைந்துவிட்டதால் இருக்கலாம் என நம்ப தகுந்த வட்டராங்கள் கிசுகிசுக்கின்றன .
நரசிம் :
நேற்று பதிவர் நரசிம்மை நேரில் சந்தித்த போது , எனது இறுதிமுத்தம் கதை அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தோடு ஒத்து போவதாக கூறினார் அதிர்ச்சியாக இருந்தது .
அது தவிர பதிவர்களாகிய நாம் ஒருங்கிணைந்து ஒரு குழுவை உண்டாக்கி அக்குழு மூலமாக , நமக்கு தெரிந்த பதிவர்கள்,நண்பர்கள் , ஏழைகள் என இல்லாதோர்க்கு நம்மால் முடிந்த உதவிகள் செய்யலாம் எனக்கூறினார் , அது மிக நல்ல யோசனையாக இருந்தது .
விரைவில் அது குறித்து ஒரு அறிவிப்பு பதிவு வெளியாகும் .
செந்தழல் ரவி :
ஆகஸ்டு மாதம் 23ம் தேதி சனிக்கிழமை பெங்களூருவில் அண்ணன் செந்தழல் ரவி ஒரு பதிவர் சந்திப்பு அறிவித்திருந்தார் .
அதில் அடியேனும் கலந்துகொண்டு விழாவ்வை முடிந்த வரை சிறப்பித்தேன் .
அது தவிர சந்திப்பு மிக நல்ல அனுபவமாக இருந்தது , அது குறித்து இந்த வாரத்தில் ஒரு பதிவு கட்டாயம் நம் வலைப்பூவில் வெளியாகும்.
விக்னேஷ்வரன் :
பதிவர் விக்னேஷ்வரன் அவர்களின் தாயார் சென்ற வாரம் தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடினார் . அவருக்கு அனைத்து பதிவுலக நண்பர்கள் சார்பாக வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் .
இந்த இணையதளத்தின் பெயர் இங்கிலாந்து நாட்டின் வெல்ஷ் மாகாணத்தில் உள்ள ஒரு குட்டி கிராமத்தின் பெயர் , இப்பெயர் 1960 களில் வெளியான ஒரு திரைப்படத்தின் பெயர் என்பதும் வியக்க வைக்கிறது . ( அது குறித்து இணையத்தில் தேடிய போது அது ஒரு பிட்டு படம் என்று தெரிந்ததும் மேலும் வியதேன் , மேலும் இதுபோல நம்மூரிலும் வெளியான ''தங்கத்தோணி'' என்கிற ஷகிலா படப்பெயரில் ஒரு கேரள கிராமம் இருக்கிறது எனபதையும் தெரிவித்து கொள்கிறேன் )
___________________________________________________________________
சென்றவாரம் வெளியான எனது இறுதி முத்தம் சிறுகதையுடன் வெளியான முத்தக்குறிப்புகள் அந்த பதிவிலிருந்து பற்பல பதிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நீக்கப்பட்டது . முத்தக்குறிப்புகள் விரைவில் தனிப்பதிவாக வெளியாகும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்
___________________________________________________________________
ஒரு அரிய புகைப்படம்(அல்லது) ஓவியம் :
1890ல நம்ம மெரினா பீச்... இன்னா சோக்காகீது பாருங்கோ
அப்பால இந்த படம் வரைஞ்சதா இல்ல படம் புட்ச்சதானு தெர்லபா
__________________________________________________________________
20 August 2008
FLASH NEWS : ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இன்னுமொரு பதக்கம் ( மல்யுத்தத்தில் சுசில்குமாருக்கு வெண்கலம்)
இந்தியா இது வரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தத்தில் பதக்கம் பெருவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது
ஓலிம்பிக்கில் வெண்கலபதக்கம் வென்ற சுசில்குமாருக்கு வாழ்த்துக்கள்
19 August 2008
'சத்யம்' - தமிழ் சினிமாவின் கடப்பாகல் !!!
16 August 2008
படிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)
எனது வண்டி இதோ ரயில் நிலையத்தை தாண்டிவிட்டது , ரயில்நிலையத்தின் பின்புறம்தான் அந்த பாழடைந்த பழைய பிரிட்டிஷ் காலத்திய கிடங்கு இருந்தது , அங்குதான் அரவு வேளைகளில் சுற்றி திரிய எனக்கு தேவையான போதை கிடைத்தது ,
கேள்விக்குறிகள் ஏன் வளைந்திருக்கின்றன தெரியுமா , கேள்வி கேட்பவன் என்றுமே இந்த சமுதாயத்தில் வளைக்கப்படுவான் , சுவடுகளின்றி அழிக்கப்படுவான் அதற்குத்தான் அந்த குறியின் கீழ் ஒரு புள்ளியோ?
மஞ்சுளாவை எனக்கு நன்றாகத்தெரியும் , அந்த இருள் நிறைந்த பிரிட்டிஷ் கிடங்கியில் வடகிழக்கு மூலையில் உள்ள ஒரு சிறிய அறைதான் அவளது வசிப்பிடம் , வயது நாற்பத்தைந்துக்கு மிகாமல் இருக்கும் , விபச்சாரி , ஐந்துக்கும் பத்துக்கும் கூட தன் உடலை விற்பவள் , மிக நல்லவள் , என்னை பார்த்தால் பாக்கு மட்டும் கேட்பாள் , என்னை பல முறை அவள் சுகிக்க அழைத்தும் நான் மறுத்திருக்கிறேன் . அவளது அன்பு மட்டும் போதுமென்றிருக்கிறேன் . என்னால் விபச்சாரிகளை புணர இயலுவதில்லை . இவளை கண்ட பிறகுதான் இப்படி .
பிச்சைகாரன்,பணக்காரன்,பார்ப்பனன்,பகுத்தறிவாளன்,கம்யூனிஸ்ட்,எழுத்தாளன்,அரசியல்வாதி,
முதலாளி,தொழலாளி,விவசாயி...............
அவளது உடலில் போலிஸின் பூட்ஸ்கால்கள் படாத இடமென்று எதுவுமேயில்லை , போலிஸூக்கு காமமென்றாலும் , கடுப்பென்றாலும் இவளது உடலே இறையாக்கபட்டிருக்கிறது.
அவள் கூறும் கதைகளென்றால் எனக்கு மிக பிடிக்கும் , ஆயிரமாயிரம் கதைகள் சொல்வாள் , கஞ்சாவின் மயக்கத்தினூடே அவளது கதைகள் அற்புதமாய் என் மனகண்ணில் விரியும்.
அவளும் உன்னை போல என்னை போல மூன்று வேளை சோறு தின்று , இச்சமூகத்தில் கவுரமென்னும் சங்கிலியோடு தன்னை பிணைத்துக்கொண்டுதான் வாழ்ந்திருக்கிறாள் . இவளது அழகு ( என் காதலியின் அழகு ) இதோ இவளை பல கழுகுகளின் காமத்திற்கு தீனியாக்கியிருக்கிறது , இன்று அவளை பார்த்தால் அவள் அழாகாய் இருந்திருப்பாள் என்று கூட யாரும் ஒத்துக்கொள்ள முடியாதபடி சமுதாயம் அவளை அழகாக்கியிருந்தது .
அவள் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்து சீரழிந்த கதை எல்லாரும் அறிந்த ஒன்றுதான் , சீரழிந்த அவளது வாழ்க்கை மேலும் சீரழிய அவளது அன்பின் தேடலும் ஒரு காரணமாய் இருந்தது , அவளுக்கு சென்னை வரும் முன்பே திருமணமாகியிருந்தது , அவளுக்கும் ஒரு மகனிருந்தான் .
இதோ இன்றிரவும் அவளை ஒரு முறை பார்த்து விட்டு என் தேடலை தொடர வேண்டும் , வண்டியை அந்த பிரிட்டிஷ் கிடங்கின் வாசலில் நிறுத்திவிட்டு , உள்ளே நுழைந்தேன் , அவளில்லை , அறையிலும் ஒன்றுமில்லை , வாசலில் பெரியவரிடம் கேட்டபோது அவள் ஜிஹெச்சில் இருப்பதாகவும் ஒரு வாரமாய் வயிற்றுபோக்கும் , காய்ச்சலுமாய் கிடந்ததாகவும் கூற மனது ஏதோ செய்தது , வண்டியுடன் அறைக்கே திரும்பி விட்டேன் .
அடுத்த நாள் காலை அவளை நேரில் சந்திக்கலாமென மருத்துவமனைக்கு செல்ல , அரை நிர்வாணமாய் பாதி உயிரோடு மருத்துவமனை வாயிலில் பிச்சை எடுத்து கொண்டிருந்தாள் , என் கண்களில் துளிர்த்த கண்ணீருக்கு காரணம் தெரியவில்லை என் கண்களுக்கும் எனக்கும் .
தனக்கு எய்ட்ஸ் என கூறினாள் , இனி பிச்சை எடுக்கத்தான் வேண்டுமெனவும் இனி தன் உடலுக்கு மதிப்பேது என வருந்தினாள் , அவளை என் வண்டியில் அமரசெய்து வீட்டிற்கு கிளம்பினேன் . என்னோடு தங்கிவிட வற்புறுத்தினேன் , அவளும் சரியென்று கூறிவிட , எனது வெகு நாள் தேடல் முடிவுக்கு வந்து விட்டதாய் எண்ணினேன் .
என் தாயும் மஞ்சுளாவை போலத்தான் சினிமா ஆசையில் சென்னைக்கு ஓடி வந்தவள் , இன்று வரை அவளை எந்த சினிமாவிலும் நான் பார்த்ததில்லை , அவளுக்கும் இது போல ஒரு நிலை வந்திருக்குமோ என்கின்ற என் தேடல்தான் இதோ எனக்கு ஒரு புதிய தாயை கண்டறிய உதவியிருக்கிறது , எனது தேடலுக்கு முற்றுப்புள்ளியாய் மஞ்சுளா வந்ததாய்தான் நினைத்தேன் ,
ஒரு மாதம் என்னோடு இருந்து எனக்கு சிறிய உதவிகள் செய்து கொண்டு மிக நிம்மதியாய் மகிழ்ச்சியாய் , தன் வாழ்வில் முதல் முறையாய் நிம்மதியாய் வாழ்ந்தாள் , அவளுக்கு என்ன தோன்றியதோ , ஒரு வெள்ளி கிழமை காணாமல் போய்விட்டாள் .
அவளை இரவுகளில்தான் நான் கண்டெடுத்தேன் , நான் அலைவது தேடலுக்காய் , முற்றுப்பெறாத என் தேடலுக்காய் , பல வருடமாய் தொடரும் என் தேடல் இன்றாவது முற்று பெருமா என்பது போன்ற ஒரு தேடல் .
____________________________________________________________________________________
மண்டை :
15 August 2008
இந்தியக்கொடி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் சில : சுதந்திர தின சிறப்புப்பதிவு
____________________________________________________________________
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் .
____________________________________________________________________
12 August 2008
ரஜினியை விமர்சிக்கும் அறிவுஜீவிகளே ஒரு நிமிடம்!!!!! : A Letter from a Rajini fan
_________________________________________________________________
Votes so far: 292 Poll closed
சிகரட்,ரசிகட்,சிரகட்,கசிரட், கரSHIT
11 August 2008
FLASH NEWS : ஒலிம்பிக்கில் இந்தியா தன் முதல் தங்கத்தை வென்றது
Source: http://www.thatstamil.com/, http://www.dinamalar.com/
112 கோடி மக்களின் பிரதிநியாக தங்கம் வென்ற ,
09 August 2008
எச்சரிக்கை : ஜே.கே.ரித்திஷ்குமாரை நக்கல் செய்யும் போக்கை கைவிடுங்கள்
சமீப காலமாக ஜே.கே.ரித்திஷ்( JKR) அவர்களை குறிவைத்து எழும்பும் குரல்களில் இருக்கும் ஒருபக்க சார்பு அவரது ரசிகர்களாகிய எங்களை ஒரு புறம் எரிச்சலடைய வைத்தாலும், இவற்றை எழுப்புபவர்களின் மையம் எங்களை சற்று சந்தேகக்கண்ணோடு தான் அவர்களை பார்க்கவைக்கிறது...தமிழ் ரசிகர்களின் கேள்விகள் என்று பொதுமைப்படுத்தி எழுதிய விகடனாகட்டும், கமல் ரஜினி ரசிகராகிய பலரும் வெற்று பரபரப்புக்காக எதையாவது எழுதும் வெட்டி கோஷ்டி ஆகியவர்கள் எழுதிய வலைப்பதிவுகளாகட்டும், எங்களுக்கு ஒன்றை மட்டும் புரியவைத்தது...
07 August 2008
ஒலிம்பிக்ஸில் கலைஞரும் ரஜினியும்
( கொஞ்சம் சீரியஸான ஒரு ஒலிம்பிக் கார்ட்டூன் )
இந்த 2008 ஓலிம்பிக் இதோ தொடங்கிவிட்டது , எப்பவும்போல நம்மவர்கள் வாயில விரல் வைத்துக்கொண்டு வெறும் கையோடு வேடிக்கை பார்த்துவிட்டு வந்துவிடுவார்கள் , அதனால் இந்தியா தங்கம் வாங்க வேண்டுமென்றால் சரவணா செல்வரத்தினம் சுவல்லரியில்தான் வாங்க வேண்டும் .
அதனால நம்ம அரசியல்வாதிங்க அப்புறம் தமிழ் நடிகர்களை அனுப்பினா அவங்க என்ன போட்டில கலந்துகிட்டா நமக்கு தங்கம் நிச்சயமா கிடைக்கும்னு பார்க்கலாம்
முதலில் சில அரசியல் தலைவர்கள் :
கலைஞர் -
கதை வசனமெழுதி கழுத்தருக்கற போட்டி , உடன்பிறப்புகளுக்கு ஆப்படிக்கும் போட்டி , ( மத்த போட்டிக்கு டீம் செலக்ஷன்ல கட்சிலருந்து மூணு பேறதான் செலக்ட் பண்ணிருக்காராம் , அது அஞ்சநெஞ்சன், தளபதி, கனிமொழி மட்டும்தானாம் , மற்ற உடன்பிறப்புகளுக்கு தக்க தருணத்தில் வாய்ப்புகள் தரப்படும்னு பொதுக்குழு தீர்மானத்திருக்கிறதுனு முரசொலில சொல்லிட்டாரம் )
புரட்சித்தலைவி -
கலைஞரை திட்டற போட்டி ( ஞாநியும் கலந்துக்கறாருங்கோ ) , தனியா விளையாடற எல்லா போட்டியும் ( குழுவிளையாட்ட்னா அலர்ஜியாம் ) , கால்ல விழ வைக்கிற போட்டி , ( இவங்க கட்சில நோ டீம் செலக்ஸனாம் , அவங்களே எல்லா போட்டிலயும் கலந்துப்பாங்கணு ஜெயா டிவி இங்கிலீசு நீயுஸில செய்தி )
மருத்துவர் ராமதாஸ் -
இவரு பல வருஷமா விளையாடற கூடு விட்டு கூடு பாயற போட்டிதான் , அப்பறம் போரடிச்சா போராட்டம் நடத்தற போட்டி , பையனுக்கு மந்திரி சீட் வாங்கற போட்டி , ( நடிகர்கள் கலந்துக்கற போட்டில கலந்துக்க மாட்டேன்னு அவரு மட்டும் பாக்கற மக்கள் தொ.க வில அறிக்க விட்டுட்டாருங்க , முக்கியமா ஒலிம்பிக்ஸ் என்பது ஆங்கில வார்த்தை அத தமிழ்ல ஒலிம்பன்னிகள் என மாற்ற வேண்டுமென போரட்டத்தில் இறங்கியிருப்பதாக கடைசியாக கிடைத்த தகவல் )
விஜயகாந்த் -
தீர்ப்பு சொல்ற போட்டி , தீவிரவாதிகள் கேட்சிங் காம்படிசன் , வாய்விட்டு எஸ்கேப் ஆகும் போட்டி , ( இவரு போட்டில கலந்துக்கறத மக்கள் மைதானத்துக்கு வந்து பாக்க வேண்டாம் இவரே வீடு வீடா வந்து விளையாடி காட்ட போவதாக அவர் கூட படிக்காத பேர் தெரியாத அவரோட கட்சி பேப்பர்ல அறிக்கை விட்றுக்காருங்கோ )
வைகோ ,திருமாவளவன் ,போன்றோர் போட்டில கலந்துக்கறவங்களுக்கு பொட்டி தூக்கும் வேலையில் பிஸியாக இருப்பதால் நோ காம்படிஸன் .
தமிழக காங்கிரசு கட்சியில் போட்டியில் யார் கலந்து கொள்ள போவது என இன்னும் முடிவாக தெரியவில்லை, இன்னும் போட்டியாளர்கள் போட்டியில் சத்தியமூர்த்தி பவனில் ( அங்க இட்லி வடை கிடைக்குமா ) வேட்டிகள் மற்றும் டவுசர்களுடன் ஜட்டிகளும் கழட்டப்படுவதாக மெகா டிவி செய்திகள் கூறுகிறது .
தமிழக பாரதிய ஜனதாவை யாருமே மதித்து விளையாட கூப்பிடததால் அதன் தலைவர் இல.கணேசன் யாருக்கும் தெரியாமல் ரூம் போட்டு தலைகீழாக நின்று அழுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
சில நடிக நடிகைகள் :
ரஜினிகாந்த் -
பல்டி அடிக்கிற போட்டி , அடி வாங்கற போட்டியிலும் கலந்து கொள்ளலாம் ,வடிவேலுவிற்கு எதிராக ( கடைசியாக இவரடித்த பல்டியில் தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்கள் மற்றும் உலக நாடுகள் அதிர்ந்து போய் இருப்பதாக தகவல் ) , ஏத்திவிட்டா எகத்தாளமா பேசற போட்டிலயும் கலந்துக்கறாருங்க .
கமல் -
மாறுவேடப்போட்டி , தயாரிப்பாளருக்கு மொட்டை அடிக்கும் போட்டி ( லேட்டஸ்டாக ஹாலிவுட்டிலிருந்து ஒரு நல்லவர் அவரிடம் மொட்டையடிக்க வந்துள்ளாராம் ) ,
விஜயகாந்த் -
வாய் சவடால் போட்டி ( தீவிரவாதிங்கள புடிக்கிற போட்டி மற்றும் தீர்ப்பு சொல்லுற போட்டியும் ) ,
கார்த்திக் -
HIDE AND SEEK or ஒளிஞ்சு விளையாட்டு , வெத்தலைபாக்கு சாப்பிடற போட்டியும் ( இவரைபற்றி இதுவரை தகவல் இல்லை )
சரத்குமார் -
அவருமட்டும் தனியா விளையாடற மாதிரி எதும் போட்டி இருக்காப்பா?? ( நமக்கு நாமே போட்டி மாதிரி ) ,
விஜய் -
நடிச்சி நடிச்சி மக்கள சிரிக்க வச்சு சாவடிக்கற போட்டி (தன் அற்புதமான படங்களால் தமிழக மக்கள் தொகையை பெருமளவில் குறைத்த பெருமை பெற்ற இவர் தனது அடுத்த படத்தில் மொத்தமாக ஒரே வசனத்தில் இந்தியாவையே அழிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்)
அஜித் -
போட்டியில கலந்துக்க மறுத்துட்டாரு ( பல வருஷமா ஒரு படத்துல நடிக்கிறாராம் ) ( பேட்டி வேணா குடுக்கறேன் போட்டிலலாம் கலந்துக்க முடியாதுனு சொல்லிட்டாராம் )
சிம்பு -
ஓவரா சீன் போடற போட்டி , ஆ உ னா அழற போட்டி ( அவங்கப்பாதான் கோச்சாம் ) ,
தனுஷ் -
சிம்புவுக்கு ஆப்படிக்கும் போட்டி ( லைட் வெயிட் )
ஜே.கே.ரித்திஷ் குமார் -
( இவரில்லாம தமிழ் திரையுலகமா ) அவரோட அகில உலக ரசிகர்கள் , மற்ற நடிகர்களின் நலன் கருதி எந்த போட்டியிலும் கலந்து கொள்ள வேண்டாமென கூறியதால் , நோ காம்படீசன் ,
நமிதா -
குஸ்தி, குண்டெறிதல் , கோழி புடிக்கறது , குறி பார்த்து சுடற போட்டி
நயன்தாரா -
சிம்புவுக்கு ஆப்படிக்கும் போட்டி ( ஹெவி வெயிட் )
திரிஷா -
கோர்த்து விட்டு கும்மி அடிக்கும் போட்டி
இளைஞர் தலைவி பத்து பத்து புகழ் சோனா -
டென்னிஸ் , ஹாக்கி , வாலி பால், பேஸ்கட் பால் , சுனோ பால் , ஐஸ்பால் , அந்த பால் , இந்த பால் , என எல்லா பால் விளையாட்டுக்களும் .
____________________________________________________________________
டிஸ்கி : இப்பதிவு யார்மனதையும் புண்படுத்தும் நோக்குடன் எழுதபட்டதல்ல , உங்கள் சிரிப்பு மட்டுமே ஒரே நோக்கம் . மீறி உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்
வந்தது வந்துட்டீங்க குசேலன் படத்த பார்த்திருந்தீங்கன்னா படம் குறித்த உங்கள் கருத்த வலது புறம் உள்ள வாக்கு பதிவுல் குத்திவிட்டு செல்லவும் .
_____________________________________________________________________
படிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு
இந்த முறை அவனை கொன்று விடுவோமா , ஒடிக்கொண்டே யோசித்து கொண்டிருந்தான். அவன் தன்னை கொல்ல வேண்டுமென வேண்டிக்கொண்டு இவன் ஓடிக்கொண்டிருந்தான் ,
'' உன்ன கட்டிகிட்டதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் , முதல்ல நீ உங்கம்மா வீட்டுக்கு கிளம்பு ''
பெண் வாரிசுக்காக குழந்தையை கொன்ற மகிழ்ச்சியில் புன்முருவலோடு நின்று பார்த்து கொண்டிருந்தாள் ரே என்கிற ரேவதி .